Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும்

[28 - January - 2008]

இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ என்பதைப்பற்றி கிஞ்சித்தும் ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைக் கண்டனம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமென தென்னிலங்கையில் ஒரு அரசியல் சக்தி கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தின் மீது தெரிவிக்கப்படக் கூடிய கண்டன விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்னதாகவே இந்த அரசியல் சக்தி முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த சக்தியின் பிரதான உறுப்பினர்களாக ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யையும் ஜாதிக ஹெல உறுமயவையும் காண்கிறோம். வெளியார் தலையீட்டுக்கு எதிரான இயக்கம் என்ற பெயரில் இவ்விரு பேரினவாதக் கட்சிகளும் நாட்டில் இடம்பெறுகின்ற முன்னென்றுமில்லாத படுமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கூட நாகூசாமல் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தலைநகர் கொழும்பில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன்பாக அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் ஜே.வி.பி.யினர் கடந்த புதன்கிழமையும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தின் சிரேஷ்ட பதவிகளில் இருந்தால் கூட, அதையும் பொருட்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்று ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம். கடந்த 15 ஆம் திகதி ஐ.நா. வினால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையொன்றில் `தற்போதுள்ளதைப் போன்றே நிலைவரங்கள் தொடருமானால் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரப் பிரிவில் உள்ள முன்னணி உறுப்பினர்களும் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றங்களில் பதிலளிக்க வேண்டியேற்படும் என்று லூயிஸ் ஆர்பர் எச்சரிக்கை செய்ததாக' குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்றக் குழுவின் தலைவருமான விமல் வீரவன்ச, `விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் காரணமாக போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆயுதப் படைகளின் எந்தவொரு தளபதியையோ அல்லது அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகார அந்தஸ்துடைய எந்தவொரு அதிகாரியையோ சர்வதேச நீதிமன்றங்களின் முன்னால் கொண்டு செல்வதற்கு எவராவது முயற்சிப்பார்களேயானால், அதை கடைசி ஜே.வி.பி.உறுப்பினரின் சடலத்தின் மேலாக நடந்து சென்றே செய்யவேண்டியிருக்கும்' என்று கர்ஜித்திருக்கிறார்.

ஜே.வி.பி.யினரின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுநாள் அநுராதபுர மாவட்டத்தில் கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் புதைகுழிகளில் இருந்து 16 நடுத்தர வயது ஆண்களின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் சகலதிலுமே கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததுடன், மரணதண்டனை நிறைவேற்றப்படும் பாணியில் மிகவும் குறுகிய தூரத்தில் வைத்து சுடப்பட்டிருப்பதற்கான தடயங்கள் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களில் எவருமே கெப்பித்திக்கொல்லாவ பகுதியையோ அல்லது அதற்கு அண்மையான பகுதிகளையோ சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அப்பகுதிகளில் இருந்து எவருமே காணாமல் போயிருப்பதாக முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். வழமைபோன்றே இக்கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென பொலிஸ் குழுக்களை அரசாங்கம் நியமித்திருக்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா.அமைப்புக்களினாலும் சர்வதேச சமூகத்தினாலும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுவரும் விசனங்களுக்கு எதிராகத் தென்னிலங்கையில் பேரினவாதச் சக்திகளினால் எழுப்பப்படும் கூச்சல்கள் மற்றும் வெறும் கண்துடைப்புக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு மத்தியில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கெப்பித்திக்கொல்லாவ புதைகுழிகளில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட சடலங்கள் இதையே உலகிற்கு அம்பலப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டுக் கட்டமைப்புகள் மூலமாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்க சர்வதேச கட்டமைப்பு எதுவும் தேவையில்லை என்றும் அரசாங்கத்தினால் செய்யப்படும் பிரசாரங்கள் அர்த்தமற்றவை என்பதையே இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிசெய்திருக்கிறது. இலங்கையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கோரிக்கையை கெப்பித்திக்கொல்லாவ புதைகுழிகள் மேலும் வலுப்படுத்துகின்றன என்பதே எமது அபிப்பிராயம்.

http://www.thinakkural.com/news/2008/1/28/...l_page44834.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.