Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலை நிறுத்தம் சோபிக்கவில்லை; இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் சம்பள உயர்வு மற்றும் முக்கிய பல கோரிக் கைகளை முன்வைத்தும் நேற்றுப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது வேலை நிறுத்தப் போராட்டம் சோபிக்கவில்லை களைகட்டவில்லை.

நாட்டின் பல பகுதிகளிலும் ஒருசில அரச அலுவலகங்களில் ஊழியர் வரவு மந்தமாகக் காணப்பட்டாலும், பெரும்பாலான அரச அலுவலகங்கள் வழக்கம் போலவே இயங்கின என்று தகவல்கள் தெரிவித்தன. பாடசாலைகள் பலவற்றிலும் மாணவர் வரவு குறை வாகவே காணப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது.

கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்துக் குறைவாகக் காணப்பட்டபோதி லும் அரச அலுவலகங்களும், பொதுச் சேவை களும் வழமைபோல இடம்பெற்றன.

ரயில் சேவைகள் வழமைபோல இடம் பெற்றன எனக் குறிப்பிட்ட ரயில்வேத் திணைக்களத் தலைவர் லலித் சிறி குண ருவன பேருவளையிலும் வேறுசில பகுதி களிலும் ரயில் பாதைகளின் குறுக்காக மரங்கள் போடப்பட்டு ரயில் சேவைக்குத் தடையேற்படுத்த முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தென் பகுதியிலிருந்து கொழும்பிற்கு வரும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதாகத் தனியார் பஸ் உரி மையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைப் போக்குவரத் துச் சபை பஸ் சேவையும் எவ்வித இடையூறு மின்றி இடம்பெற்றது.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் பெரு மளவிற்கு சமுகமளித்த போதிலும் அச்சம் காரணமாக மாணவர்களைப் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை.

பாடசாலைப் போக்குவரத்துச் சேவைக ளும் பெரியளவில் இடம்பெறவில்லை.

மருத்துவமனைகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேவைகளும் பெரி தும் பாதிக்கப்படாத நிலை காணப்பட்டது.

கொழும்பு நகரில் நேற்றுப் பிறபகல் சம்பள உயர்வு உட்பட முக்கிய கோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.

பாடசாலைகள் உட்பட முக்கிய பகுதிக ளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாத்தறை, ஹற்றன், குருநாகல், பெலியத்த கண்டி, புத்தளம், பொலன்னறுவை உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படாத சூழ்நிலை காணப்பட்டது.

மாத்தறை உட்பட்ட தென்மாகாணத் தில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம டைந்திருந்த அதேவேளை, பாடசாலைக ளிலும் மாணவர் வரவு மிகவும் குறைவத கக் காணப்பட்டது. தபால் சேவையும் சிறிதளவு பாதிக்கப்பட்டபோதிலும் போக்கு வரத்து முடங்கவில்லை.

புத்தளம், சிலாபத்தில் சுகாதார சேவைப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் மருத்துவமனைகளில் நெருக்கடி நிலை உருவாகியது. இதனைத் தொடர்ந்து சூழ் நிலையை சமாளிப்பதற்காக இராணுவமும் பொலிஸாரும் அழைக்கப்பட்டனர்.

இதேவேளை, நேற்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 95 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண் டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மலையகத்தைச் சேர்ந்த முக்கிய அரசி யல் தலைவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்த போதிலும் தோட்டத்தொழிலாளர் கள் வேலைக்குச் செல்ல வில்லை.

மஸ்கெலியாவைச் சேர்ந்த 21 தோட் டங்களின் 15,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஹற்றனைச் சேர்ந்த 54 தோட்டங்க ளின் அநேக தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வில்லையென ஜே. வி. பி. நாடா ளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திர சேகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றன் பஸ்நிலையத்தில் சம்பள அதி கரிப்புக் கோரி ஆர்பாட்டப் பேரணியொன் றும் இடம்பெற்றது. (அசி)

எல்லாமே புஸ்வாணம் என்கிறதுஅரசாங்கம் தொழிலாளருக்குத் தலைசாய்த்து பெருநன்றி

ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.கட்சி ஆகிய வற்றால் நேற்று ஏற்பாடு செய்யப்பட் டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு முறியடித்துவிட்டது. ஒட்டுமொத்தத் தில் இந்த வேலைநிறுத்த ஏற்பாடுகள் எல்லாமே புஷ்வாணமாகிவிட்டன.

வேலைநிறுத்தப் போராட்டத்தைப் பகிஷ்கரித்து வேலையில் ஈடுபட்ட அரச மற்றும் தனியார் துறையினருக்கும் தோட் டத் தொழிலாளர்களுக்கும் தாம் தலை சாய்த்து நன்றி தெரிவிப்பதாக அரசுத் தலைவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரிச்சட்டமூலம் தொடர்பான விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய நேற்றைய வேலை நிறுத்தம் குறித்துக் கூறியவை வருமாறு:

ஜே.வி.பி., ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை தூய்மையற்றவகையில் ஒன்றிணைந்து இன்று (அதாவது நேற்று) ஏற்பாடு செயதிருந்த வேலைநிறுத்தம் எம்மால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

வேலைநிறுத்தத்திற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று தெரிந்துகொண்ட மக்கள் இப்போராட்டத்தைப் பகிஷ்கரித்து அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்த மக்களுக்கு நாம் தலைசாய்த்து நன்றி தெரிவிக்கிறோம். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்காக ஜே.வி.பியினர் பல தடைகளை ஏற்படுத்த முற்பட்டனர்.

பஸ்களை ஓடவிடாமல் செய்வதற்காக வீதிகளில் ஆணிகளைப் போடுவதற்கும், ரயில் பயணத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஜே.வி.பியினர் முயற்சி செய்தனர். எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன.

இப்போராட்டம் தோல்வியில் முடிந்தால் எம்.பி. பதவியைத் துறப்பார் என்று லால்காந்த எம்.பி. கூறினார். இப்போது அவர் எம்.பி. பதவியைத் துறக்கத் தயாரா என்று நான் கேட்கிறேன். என்றார் (அசி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க. எதை நம்புறது எண்டு தெரியல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.