Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூடான் வழியில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-07-17

சூடான் வழியில் இலங்கை

இனப்பேரழிவும், மனித குலத்துக்கு எதிரான கொடூரங் களும் பாரதூரமாக இடம்பெறும் சூடான் நாடு தொடர்பாக சர்வதேச நீதி ஆயத்தின் முன்னால் இப்போது எடுக்கப்பட் டிருக்கின்ற நடவடிக்கை, இன ரீதியாக மோசமான கொடூரச் செயற்பாடுகளைத் தமது ஆட்சி அதிகாரம் மூலம் முன்னெடுக் கும் பல உலக நாடுகளின் தலைவர்களைத் திடுக்குற வைத்திருக்கின்றது.

சூடானின் டார்பூர் பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டு களாக நீடித்துவரும் மோதல்களைப் பயன்படுத்தி இனவழிப்புப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான நாசங்கள் போன்றவற்றை இழைத்தமைக்காக சூடான் ஜனா திபதி ஒமர் அல் பஷீரைக் கைது செய்வதற்கான உத்தரவு ஒன்றை விடுக்குமாறு, சர்வதேச நீதிமன்ற ஆயத்திடம், அந்த ஆயத்தின் பிரதான வழக்குத் தொடுநர் சில தினங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருக்கின்றமையே பல நாடுகளின் ஆட்சித் தலைவர்களைத் திடுக்குற வைத்திருக்கின்றது.

சர்வதேச நீதி ஆயம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான் செயற்படத் தொடங்கியது. இந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு போர்க்குற்றங்கள், இனவழிப்புப் படுகொலை, மனித குலத் துக்கு எதிரான நாசங்கள் போன்றவற்றை இழைத் தவர்களைக் கைது செய்யக் கோரி, ஆயத்தின் வழக்குத் தொடுநரால் சமர்ப் பிக்கப்பட்ட பதினொரு கைது விண்ணப்பங்களையும் ஆயம், பரிசீலித்து, ஏற்றுக்கொண்டு, கைதுக்கான உத்தரவுகளைத் தவறாமல் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதும் கவனிக்கத்தக்கதுமாகும்.

இப்போது சூடான் நாட்டின் ஆட்சித் தலைவரையே கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி வழக்குத் தொடுநர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் ஆயத்தின் மூன்று நீதிபதிகளின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் தமது முடிவை சர்வதேச நீதி ஆயத்தின் நீதிபதிகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நீதிபதிகளின் முடிவு எப்படி இருந்தாலும்

உலக நாடுகளில் இப்படிப் போர்க் குற்றங்கள், மனித குலத் துக்கு எதிரான கொடூரங்கள், இனவழிப்புப் படுகொலைகள் போன்றவற்றைப் புரிந்த முன்னாள் அரசுத் தலைவர்களுக்கு எதிராக இத்தகைய கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதி ஆயத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட

ஐ.நாவில் அங்கத்துவம் வகிக்கும் இறைமையுள்ள நாடு ஒன்றின் அரசுத் தலைவரையே அவர் ஆட்சியிலும் அதிகா ரத்திலும் இருக்கின்ற போதே கைது செய்வதற்கு உத்தர விடக்கோரி சர்வதேச நீதி ஆயத்திடம் அதன் வழக்குத் தொடு நர் விண்ணப்பித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

வழக்குத் தொடுநரின் விண்ணப்பத்தை ஏற்று, சர்வதேச நீதி ஆயம் அத்தகைய கைது உத்தரவை விடுக்குமாயின்

சூடான் போன்ற இன அழிப்புச் சிக்கல்களில் மாட்டியி ருக்கும் பிற நாடுகளின் தலைவர்களுக்கும், ஆட்சியாளர் களுக்கும் அது வயிற்றில் புளி கரைப்பதாகவே இருக்கும்.

சூடான் போன்ற இனவழிப்பு மற்றும் இன அடக்கு முறை நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை போன்ற நாடுகளும் கூட சர்வதேச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சூடானிய அரசுத் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதி ஆயத்தின் வழக்குத் தொடுநர் சுட்டிக்காட்டியுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை நிலைமையோடு ஒப்பிட்டு நோக்குபவர்கள், சில ஆழமான அம்சங்களை ஒற்றுமைகளை புரிந்துகொள்ளக்கூடும்.

தனது இராணுவ ஜெனரல்கள், புலனாய்வுப் பிரிவினர், அமைச்சர்கள், ஊடகங்கள் போன்ற சகல தரப்பினரையும், தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தனிப் பட்ட கிளர்ச்சிக் குழுக்களை (அரச தரப்பின் வழிகாட் டலில் இயங்கும் ஒட்டுப்படைகளை) பயன்படுத்தி இனவழிப் புப் படுகொலைகளையும் மனித குலத்துக்கு எதிரான அட்டூ ழியங் களையும் சூடானிய அரசுத் தலைவர் ஒமர் அல் பஷீர் புரிந்து வருகின்றார் என ஆயத்தின் வழக்குத் தொடுநர் விவரிக்கின்றார்.

பர், மஸலிட், ஸகாவா ஆகிய இன மக்களை இனவழிப் புப் படுகொலை செய்து வருகின்றமைக்கான மூன்று குற்றச் சாட்டுகளும்

படுகொலைகள், பூண்டோடு அழித்தொழித்தல், பலவந் தமாகத் துரத்தியடித்து இடம்பெயரச் செய்தல், சித்திரவதை செய்தல், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றை முன்னெடுக்கின்றமைக்காக மனித குலத்துக்கு எதிரான நடவ டிக்கைகளுக்காக ஐந்து குற்றச்சாட்டுகளும்

டர்பூரில் உள்ள மக்கள் குடியிருப்புகளைத் தாக்கி, அழித்து, கொள்ளையிட்டு, தீயிட்டு நாசமாக்கும் போர்க்குற்ற நடவ டிக்கைகளுக்காக இரண்டு குற்றச்சாட்டுகளும்

சூடான் ஆட்சித் தலைவருக்கு எதிராக சர்வதேச ஆயத்தின் வழக்குத் தொடுநரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

""தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்காகக் கிளர்ச் சியை எதிர்க்கிளர்ச்சி மூலம் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதம் மூலம் அடக்க முயலும் ஒமர் அல் பஷீரின் இலக்கு இன அழிப்புதான்'' என்கிறார் வழக்குத் தொடுநர்.

இலங்கைத் தீவிலும் ஓர் இனவழிப்பு யுத்தம் நடக்கின்றது.

இனக்குழுமங்கள் வசிக்கும் பிரதேசங்கள் மீது வேண்டு மென்றே வான்வழித் தாக்குதல்களை நடத்தி அவர்களை அழிக்கும் கொடூரத்தை சூடான் ஆட்சித் தலைவர் மேற்கொள் கின்றார் என்று அவருக்கு எதிராக சர்வதேச நீதி ஆயத்தின் வழக்குத் தொடுநரினால் சுமத்தப்படுகின்ற குற்றச்�ட்டு, இலங்கைத்தீவிலும் அதற்கு ஒத்ததாக அரங்கேறாமல் இல்லை.

இங்கும் ஈழத் தமிழர்கள் தங்களது பாரம்பரிய வாழிடப் பிரதேசங்களில் இருந்து தாயக மண்ணிலிருந்து இரா ணுவ நடவடிக்கைகளின் பெயரினால் துரத்தியடிக்கப்படு கின் றனர். அவர்களி ன் பூமி, "பாதுகாப்பு உயர் வலயம்' என்ற நாமத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் கபளீகரம் செய் யப்படுகின்றது. அங்கிருக்கும் வீடு, வாசல்கள், சொத்துகள், உடைமைகள் அழித்தொழித்து நாசம் செய்யப்படுகின்றன.

துணைப்படைகளை வைத்து மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்கின்றன. காணாமற்போதலும், முறை யற்ற கைதுகளும், ஆட்கடத்தல்களும், சட்டவிரோதப் படு கொலைகளும் ஓர் இனத்துக்கு எதிரான இலக்கு வைக்கப் பட்ட அட்டூழியங்களாக இங்கு நீடிக்கின்றன. அரசுத் தரப்பின் அட்டூழியங்களையும் தவறுகளையும் அம்பலப் படுத்த முயலும் ஊடகங்களின் குரல்வளைகள் நசுக்கப் படுகின்றன.

"பயங்கரவாதத்தை அழித்து ஜனநாயகத்தை மீட்டல்' என்ற பெயரில் இலங்கையில் இடம்பெறும் "அரச பயங் கரவாதம்' குறித்தும் சர்வதேச ஆயத்தின் தீர்க்கமான பார்வை திரும்பக் கூடிய சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.