Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத் தீர்வில் மட்டுமே அரசு தீவிரம் பிரி. அமைச்சரிடம் சம்பந்தர் எடுத்துரைப்பு சமாதான முயற்சிகள் பற்றிய பேச்சு வெறும் பம்மாத்து என்று விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச் சினைக்கு இராணுவத் தீர்வு காண்பதை மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு இலங்கை அரசு செயற்படுகின்றது. ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைப்ப டுத்துவதைத் தவிர மஹிந்த அரசிடம் வேறு எந்த மாற்றுத் திட்டமும் கிடையாது.

* இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான முறையில் தீர்வு காண்பது குறித் தும், நியாயமான தீர்வு ஒன்றைத் தமிழர்க ளுக்கு வழங்கப் போகின்றமை பற்றியும் அரசுத் தரப்பில் வெளியிடப்படுகின்ற அறிவிப்புகள் எல்லாம் சர்வதேசத்தையும் ஏமாற்றும் வெறும் பம்மாத்து நடவடிக்கை களே. இவற்றுக்கு சர்வதேசம் எடுபட்டு இலகுவில் விலைபோய் விடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன், இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் பிரிட்டிஷ் அமைச்சருக்கு இவ்வாறு விளக்கிக் கூறியிருக்கின்றார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் பிரிட்டனின் ஆசிய, ஆபிரிக்கப் பிராந்தியத்திற்கான வெளிவிவகார அமைச்சர் மலோச் பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் மாலையில் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இரா. சம்பந்தன் சந்தித்தார். சுமார் 45 நிமிட நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் கலாநிதி பீற்றர் ஹெயிஸும் பங்குபற்றினார்.

இச்சந்திப்பின் போது பிரிட்டிஷ் அமைச்சரிடம் சம்பந்தர் தெரிவித்தவை வருமாறு:

தமிழர்களை இராணுவ ரீதியாக அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, உரிமைகளுக்கான அவர்களது குரலை நிரந்தரமாக நசுக்கி செயலிழக்கச் செய்வது ஒன்றே மஹிந்த அரசின் திட்டம். இதற்கு மாற்றாக தமிழ் மக்களுக்கு நீதி செய்யும் நியாயம் செய்யும் தீர்வு எதனையும் முன்னெடுக்கும் எண்ணம் இந்த அரசுத் தலைமைக்கு கிடையவே கிடையாது.

இந்த அரசின் நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும், பிரகடனங்களையும், செயற்பாடுகளையும் கவனத்தில் எடுத்தால் இந்த உண்மை அப்பட்டமாகப் புலப்படும்.

................ சமாதானத்தீர்வு

சமாதானத் தீர்வு குறித்து அரசுத் தலைமை அவ்வப்போது உதட்டளவில் பேசுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே.

இலங்கை அரசுத் தலைமையின் இந்த யுத்த வெறிப் போக்குக் குறித்து சர்வதேசம் அதிக கவனமும் சிரத்தையும் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நியாயமான அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை கொழும்பு முன்வைக்குமானால் அது உண்மையில் நியாயமானதாக இருக்குமானால் அதனைத் தீர்வுக்கான முயற்சியாகப் பரிசீலிக்கும்படி விடுதலைப் புலிகளுக்கு எம்மைப் போன்ற மிதவாதத் தலைமைகளே அழுத்தம் கொடுக்கத் தயங்கார். ஆனால் உப்புச்சப்பற்ற நீதி,நியாயமற்ற தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளையும், வேணவாவையும் கவனத்தில் எடுக்காத அரைகுறைத் திட்டத்தைத் தீர்வு என்ற பெயரில் முன்வைக்க முயற்சிகள் எடுக்கப்படுமானால், புலிகள் அல்லர், தமிழர் தேசியக் கூட்டமைப்பே அத்தகைய தீர்வுத்திட்ட நகலைத் தொட்டும் பார்க்க மாட்டாது.

ஆகக் குறைந்தது உளளக சுயணிர்ணயம்

தமிழர்கள் விரும்பும் ஆகக் குறைந்த தீர்வு ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பரவலாக்கத்துக்கு கொழும்பு இணங்க மாட்டாது என்றால் தமிழர்களின் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் வெளியக சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

இப்படி சம்பந்தர் எடுத்துரைத்தார்.

சம்மந்தரின் கருத்தைக் கேட்ட பிரிட்டிஷ்அமைச்சர் பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்:

தமிழர்களின் உரிமையினை நீதிக்கான போராட்டத்தை பிரிட்டன் எதிர்க்கவில்லை.

இராணுவ ரீதியில் இலங்கை அரச படைகளும் புலிகளும் மோதுவதைக் கூட நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் அப்பாவிப் பொதுமக்களைப் பலிவாங்கும் பயங்கரவாதத்தை பிரிட்டன் சகித்துக் கொள்ளாது.

புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து சிந்திப்பதற்கு கூட இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களே தடையாகவும் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

பயங்கரவாதப் போக்கு கைவிடப்பட்டால்

சர்வதேச தமிழர்களுக்கு குரல்கொடுக்கும்.

பயங்கரவாதப் போக்கு தமிழர் தரப்பில் கைவிடப்படுமானால் சர்வதேசமும் தமிழர் பக்கத்தில் உள்ள நியாயத்துக்காக குரல் கொடுக்கும் . இப்படி பிரிட்டிஷ் அமைச்சர் தெரிவித்தார் எனத் தெரிகிறது.

தமிழர் தாயகத்தின் மீது கொழும்பு ஆட்சிப் பீடம் நடத்தும் அரச பயங்கரவாதத் தாக்குதல்களும் கெடுபிடிகளுமே தென்னிலங்கையில் பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு வழிசெய்கின்றன என்று சம்பந்தர் சுட்டிக்காட்டியபோது

எப்படியாயினும், அத்தகைய நெருக்கடிகளைத் தமிழர் தரப்புப் பொறுத்துக் கொண்டு, தன்னுடைய செயற்பாட்டை நேரிய வழியில் கொண்டு செல்லுமானால் சர்வதேசத்தின் ஆதரவைத் தமிழர்கள் இலகுவாக சம்பாதித்துக்கொள்ள முடியும் என பிரிட்டிஷ் தூதுவர் பதிலளித்தார் என்றும் தெரியவந்தது. (உ)

http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_7202.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.