Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கரையோரத் தளங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கரையோரத் தளங்கள்!

Thursday, 17 July 2008

கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது கொழும்புக்கு மூன்று போர்க் கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்ற அதேவேளையில், இந்தியாவின் கரையோரப் பகுதி தளங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலுள்ள படைத்தளங்கள் போன்றவை உச்சிமாநாட்டின்போது ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:

இந்தியப் பிரதமருக்கும் அவருடன் கொழும்புக்கு வருகைதரும் தூதுக் குழுவினருக்கும் போதிய பாதுகாப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இரு கப்பல்கள் உட்பட மூன்று யுத்தக் கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப் படுத்திக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் சுறுசுறுப்பான விதத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றதுடன், இந்த விடயத்தை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே கவனித்து வருகின்றார்.

விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டு தாரிகளைப் பயன்படுத்துவது தெரிந்த விடயமாக இருப்பதால் தவறுகள் நேர்ந்துவிடுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியத் தரப்பு மிக கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் ஆகாய, கடல்மார்க்க படை பலத்தை கொண்டிருப்பதாலும் ஆழ் கடலுக்குள் சுழியோடிச் சென்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குரிய பயிற்சிகளைப் பெற்றிருப்பதாலும் அதற்கான எத்தகைய சந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்கக் கூடாதென்பதிலும் இந்திய நிபுணர்கள் கவனமாக இருக்கின்றனர். அத்துடன், ராடரில் கண்டுபிடிக்கப்படாமல் கொழும்புக்கு சமீபமாக விமானத்தளம் மீது சிறிய விமானத்தில் சென்று புலிகள் வெற்றிகரமாக குண்டுத்தாக்குதல் நடத்தியதையும் இந்திய அமைப்புகள் மனதில் கொண்டுள்ளன.

அதேசமயம் இந்தியப் பிரதமருக்கு மிக நெருக்கமான முறையில் பாதுகாப்பு வழங்கும் விசேட பாதுகாப்புக்குழுவினரின் எண்ணிக்கை கொழும்பு விஜயத்தின்போது அதிகளவுக்கு இருக்குமென தகவலறிந்த வட்டாரங்கள்குறிப்பிட்டுள்ள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.