Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பிரதமருடன் பேசுக: மன்மோகன் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து

Featured Replies

இலங்கை பிரதமருடன் பேசுக: மன்மோகன் சிங்கிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து

இலங்கையில் தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த அந்நாட்டு பிரதமருடன் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் பேசி தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட்டு நிற்பது வரவேற்கத்தக்கது. இலங்கை தமிழர்கள் தொடர்ந்து விவரிக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அந்த அரசே அவர்கள் மீது யுத்தத்தை தொடுத்து விமானங்கள் மூலமாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்கள் கூட கிடைக்க வழியில்லை.

இந்த நிலையில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் தழுவிய அளவில் சர்வ கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இந்த பிரச்சனை தமிழகம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு அகில இந்திய பிரச்சினை. எனவே, மத்திய அரசு இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை மட்டும் போதாது. அரசு மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் புஷ் உடன் பேசி வருகிறார். அதே போல, இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த அந்நாட்டு பிரதமருடன், மன்மோகன் சிங் பேச வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதுடன், இந்திய மீனவர்களும் அந்நாட்டு கடற்படையால் சுடப்படுகிறார்கள். இலங்கையில் போரால் பாதிக்கப்படும் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வருகிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சரும் தலையிட வேண்டும். கச்சதீவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் டி.ராஜா.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியதாவது:

கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுத்து நிறுத்த நம் தரப்பில் சொல்லப்பட்ட எந்த கருத்தையும் இலங்கை ஏற்கவில்லை.

இதற்கு தீர்வு காண நேரு, இந்திரா, சாஸ்திரி, ராஜீவ் காலங்களில் போடப் பட்ட ஒப்பந்தங்களையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இம்முறை இந்த பிரச்சனைக்கு இலங்கை அரசு தான் தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அதனை ஏற்பதா? இல்லையா? என்பதை பிறகு பரிசீலித்து முடிவு செய்து கொள்ளலாம்.

முதலில் அங்கு நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களையும், மருந்து பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.

இதில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசில் திமுக பங்கேற்பதால் அதற்காகவாவது முதல்வரின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையும் நமக்கு பக்கபலமாகவே உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இலங்கை தமிழர் பிரச்சனையில் பிரதமர் தலையிட கோரி தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தா.பாண்டியன் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/view.php?2e30QHZcb...3E2hF0cc3tj0Cde

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.