Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை எதிர்த்திட இந்திய துணை வேண்டும்: கருணாநிதி

Featured Replies

"நம்முடைய இனத் தமிழர்களை ஒழிப்பதற்கு இலங்கை அரசு போரிலே ஈடுபடுமேயானால் அப்போது எங்களுக்கு இந்திய அரசு துணையாக இருக்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்," என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும் எனும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசியது:

நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனை குறித்து பேச வேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி, நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு விளக்கம் அளித்து, இதற்கு தக்கதோர் வழிகாண வேண்டும். தமிழர்களை இலங்கைத் தீவிலே காப்பாற்றியாக வேண்டும் என்ற அபயக்குரலை இங்கே எழுப்புவதற்காக கூடியிருக்கிறோம்.

இன்றைக்கு போராட்டத்தை அறிவிக்கப்போகிறோம் என்று யாரும் கருத வேண்டாம். நமது ஆசைகள் நிராசைகளாகுமேயானால், நமது எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தருமேயானால், அதைப்பற்றி நாம் ஆலோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை தவிர்த்திட நான் விரும்பவில்லை.

இலங்கை அரசுக்கு ஏதோ ஒரு வகையில் தங்களையும் அறியாமல் ஏமாற்றப்பட்டு இந்தியப் பேரரசு துணையாக மாறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம்.

சிதம்பரத்தில் 29-1-1956-ல் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் "தாய் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்" என்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். பொன்னம்பலனார் வழிமொழிந்தார். இன்றைய தீர்மானமும் அதுதான்.

தமிழகத்திலே வாழ்கின்ற தாய் தமிழகத்து தமிழர்கள் அனைவரும் இலங்கை வாழ் தமிழர்களின் இன்னலை போக்க நமது எல்லா ஆதரவையும் அளிக்கத்தான் இங்கே கூடியிருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது.

இதை, ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானமாகக்கி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், இந்திய அரசை நடத்துகின்ற தலைவர்களுக்கும், சோனியாகாந்திக்கும் அனுப்பிவைத்தோம். அந்தத் தீர்மானத்திற்கு பலன் இல்லாமல் போகவில்லை. எனது வேண்டுகோளுக்கு உடனடியாக பதில் அளிக்கிறேன் என்று சொல்லி தொலைபேசி மூலமாக பிரதமர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். இருக்கும் விவரங்களை எல்லாம் நான் விவரித்து சொன்னேன்.

எங்களால் தமிழகத்தில் தொடர்ந்து இனி வாழ முடியுமா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாள்தோறும் செத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நான் மன்மோகன்சிங்கிடம் சொன்னேன். 'கவலைப்பட வேண்டாம். நான் உறுதியாக சொல்கிறேன், என்னை நம்புங்கள்' என்று இந்திய பிரதமர் எனக்கு வாக்களித்தார்.

புதுடெல்லியிலே உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து நிராயுதபாணியாக உள்ள இலங்கை தோழர்களை கொல்வது குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்; இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்; இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பத்திற்கும் இனி ஆளாகவே கூடாது என எடுத்துக்கூறியபோது, மிகுந்த அக்கறையுடனும், கவலையுடனும் தழுதழுத்த குரலில் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தன, எனக்கு நம்பிக்கை ஊட்டியவைகளாகவும் இருந்தன.

நம்முடைய இனத் தமிழர்களை ஒழித்துத்தான் தீருவோம் என்ற இலங்கை கச்சைகட்டிக்கொண்டு இந்த போரிலே ஈடுபடுமேயானால், தமிழர்கள் கைகட்டிக்கொண்டு இருக்கமுடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படும்போது இந்திய அரசு எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக பிரதமருக்கு எடுத்துக்கூறுகிறேன்.

பிரதமர் என்னிடத்திலே உறுதியளித்தது மட்டுமல்லாமல், உடனடியாக இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் பேசச் சொன்னார். அவரை எச்சரித்து இப்படி தமிழகத்தில் இருந்து அபயகுரல் வந்திருக்கிறது, கண்டனக்குரல் வந்திருக்கிறது, நீங்கள் எங்கள் துயரத்தை அறிந்து ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்கு செய்துள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியானது.

இது மீறப்பட்டால், அதற்கு பிறகு நாங்கள் இந்த அரசு எங்களுக்கு தேவையா? என்கின்ற அந்த கேள்விக்கு விடைகண்டாக வேண்டும் என்பதை பவ்வியமாக, அடக்கமாக, அமைதியாக எடுத்துரைக்கிறேன்.

அதே நேரத்திலே நான் தமிழன், தமிழ்நாட்டு மக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு தமிழன், தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் காவலாக நியமிக்கப்பட்ட ஒரு காவலன். அந்த தமிழன் இங்கே செத்தால் என்ன? இலங்கையிலே செத்தால் என்ன? எங்கே செத்தாலும் அவன் தமிழன் தமிழன்தான். எனவே அந்த தமிழனை காப்பாற்ற நாங்கள் நடத்துகின்ற போராட்டத்தில் இந்திய அரசே எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம், என்றார் முதல்வர் கருணாநிதி.

நன்றி யாகூதமிழ்

ஆகா மயிர்க்கூச்செறிகிறது. ஆக அடுத்த தேர்தலுக்கு பயமில்லாமல் முகம் கொடுக்கலாம் என்று சொல்லுங்கோ அண்ணாச்சி. எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே......

இலங்கை தமிழர் பிரச்சனையை சுட்டிக்காட்டிஇ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகிவிடும் என்று மத்திய அரசை தாம் மிரட்டவில்லை என அக்கட்சியின் தலைவரும்இ தமிழக முதல்வருமான கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து தனது கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நமது எழுச்சியைஇ தமிழர்களின் உணர்ச்சியைஇ வெறி பிடித்த சிங்களவர்களால் கூட புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால்இ இங்குள்ள சிறு நரிகள்இ சிலந்திப் பூச்சிகள் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன.

டெல்லியில் இருந்து வெளிவரும் 7.10.2008 நாளிடப்பட்ட 'தி இந்துஸ் தான் டைம்ஸ்' எனும் ஆங்கில நாளிதழில் மட்டும் சென்னை கூட்டத்தில் நான் பேசாததைப் பேசியதாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பத்திரிகையில் எடுத்த எடுப்பிலேயே "ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக வெளிவரும் என எச்சரிக்கை" என்ற தலைப்பிட்டுஇ "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இதுவரை எடுத்து வந்துள்ள அணுகுமுறைக்கு மாறாக - தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடுத்துள்ள தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று இலங்கைக்கு மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை பலனளிக்காமல் போகுமானால் - தமிழகத்தை ஆளும் திமுக; மத்தியக் கூட்டணி அரசில் இருந்து விலகுவது சம்மந்தமாக பரிசீலிக்கும்" என்று நான் பேசியதாக ஒரு பொய்ச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

செய்தி மூலம் http://in.tamil.yahoo.com/News/Regional/08...081007019_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.