Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன் சொந்த மக்களை பட்டினி போட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரே அரசு இலங்கையாகத் தான் இருக்கும். -ஜெகத்ரட்சகன்

Featured Replies

தன் சொந்த மக்களை பட்டினி போட்டு அவர்களின் மீது தாக்குதல் நடத்தும் ஒரே அரசு இலங்கையாகத்தான் இருக்க முடியும் என ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனத தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ஈழத்தமிழரின் பிரச்சனையில் கருணாநிதியின் போர்க்குரல் 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக் குரலாய் பிரதமருக்கு தந்திகளாக குவிந்து தலைநகர் டில்லி அதிரட்டும். எனக் கூறியுள்ளார்.

மேலும் : நம் அண்டை நாடான இலங்கை பேரின அரசு தம் சொந்த மக்கள் மீது முப்படை தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதும் அதை உலக நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அளவு கடந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக உள்ளது.

ஏ9 பாதையை வெகுநாட்களுக்கு முன்பே அப்பேரினவாத அரசு மூடி விட்;டதால் தமிழீழ மக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை அங்கு நீடிக்கிறது.

கிளிநொச்சியில் மட்டும் ஏறத்தாழ 3 இலட்சம் மக்கள் இப்போது அகதிகளாக வீதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பசியோடும், பட்டினியோடும் அந்த மக்கள் போருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே தன் சொந்த மக்களை பட்டினி போட்டு அவர்களின் மீது பீரங்கித் தாக்குதலையும் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரே அரசு இலங்கைப் பேரின வாத அரசாகத்தான் இருக்க முடியும்.

மழைக்காலம் ஆரம்பிக்க இருக்கும் இவ்வேளையில் வீதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும் போது நம் இதயம் கனக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் போர்க்குரல், 8 கோடி தமிழர்களின் உணர்ச்சிக் குரலாகும். அந்த உணாச்சிக் குரல்கள் அனைத்தும் பிரதமருக்கு தந்திகளாக குவியட்டும். தலைநகர் அதிரட்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி : வீரகேசரி

ஈழத்தமிழர் பிரச்சினையில் கருணாநிதி நாடகம் - விஜயகாந்த்

இலங்கையில் அரங்கேறிவரும் தமிழனப் படுகொலையைக் கண்டித்து மற்ற கட்சியினர் போராட்டம் நடத்துவதைப் பார்த்துவிட்டு, பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று கருணநிதி கூறுகின்றமை வெறும் அரசியல் நாடகம் என்று தே.மு,தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் : கருணாநிதியின் வழிகாட்டுதலில் தான் இந்திய அரசு இயங்குகிறது என்று கூறப்படுகிறது. அப்படியிருக்கும் போது, அப்பாவித் தமிழர்கள் இலங்கை அரசால் கொல்லப்படுவதைத் தடுக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தி அரசு வற்புறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசிலிருந்து நாங்கள் பதவி விலக நேரிடும் என்று கருணாநிதி ஏன் சொல்லக் கூடாது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இதர கட்சியினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துவதைப் பார்த்துவிட்டு, மக்களை ஏமாற்றுவதற்காக மாங்கொலையில் பொதுக்கூட்டம், பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் என்றார்.

நன்றி : சுடர் ஒளி

ஈழத்தமிழருக்காகப் போராட முதல்வர் முன்வந்தால் படை திரட்டிக் களமிறக்குவேன். - சரத்குமார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாகப் போராடுவது பயனற்றது. அத்துடன் இலங்கையில் நமது தொப்புற் கொடி உறவுகளைக் காப்பாற்ற முதல்வர் தனது அதிகார ஆசைளை தவிர்த்தும், அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டும், தமிழ் இனம் வாழ களம் இறக்கி போரட முன்வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி களம் இறங்குவேன்.

சரத்குமாரின் அறிக்கையில் மேலும் : தமிழினப் போரளிகளை வேரறுப்போம் என்று சூளுரைத்து இலங்கை இராணுவம் நடத்தும் இராணுவத் தாக்குதல்களால் அங்கு வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் இனத்தையே கருவறுக்க முயலும் படுபாதக செயலுக்கு, மறைமுகமாக இந்திய அரசும் துணை போகிறதோ என்ற வெகு நாiளைய சந்தேகம், இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்ற சமீபத்திய நிகழ்வால் உறுதி செய்பட்டிருக்கிறது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இராணுவத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு ரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தனித்தனி அணிகளாக போராடுவது பயனற்றது என்பதே எங்கள் கட்சியின் கருத்து.

கடந்த 19.12.2006 அன்று முதல்வருக்கு நான் எழுதிய கடிதத்திலேயே ஈழப்பிரஜையின் தன்மையை புரிந்து கொண்டு, உள்ளார்ந்த உணர்வோடு இனப்பிரச்சினையைத் தீர்திட குழுவொன்றை அமைக்க வேண்டும். அக்குழு இலங்கை சென்று இலங்கை அரசோடும், தமிழ் இனப் போராட்ட அமைப்புகளோடும் பேச்சு நடத்துவதற்கு இந்திய அரசின் அனுமதியைத் தமிழக முதலமைச்சர் பெற வேண்டும். மேலும் அக்குழுவில் நானும் பங்கேற்பதற்காக தயாரகவே உள்ளேன் என்பதையும் தெரிவித்திருந்தேன்

உடனடியாக முதல்வர், மத்திய அரசை நிர்ப்பந்தித்து, இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திடவும், திறந்த மனதோடு, சுமுக பேச்சுகளை இந்திய அரசே முன்னின்று தொடங்கிடவும், இலங்கை அரசைக் கடுமையாக வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நன்றி சுடர் ஒளி

ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு கலைஞர் காலத்தில் முடிவு வரும் -ஸ்டலின்

ஈழத்தமிழரின் படுகொலையைத் தடுக்க மன்மோகன் சிங இலங்கைப் பிரதமருடன் பேசவேண்டும் - டி.ராஜா

அனைவரும் ஓரணியில் புயலாக எழுந்து நின்று தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்போம். - எஸ்.ஜெகத்ரட்சகன்.

நன்றி சுடர் ஒளி

ஏதோ எல்லோரும் சேர்ந்து தாளியைக் கீழே போட்டு உடைக்காமல் இருந்தால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.