Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் - மங்கள:

Featured Replies

அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் - மங்கள:

கிழக்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. ராஜபக்ஸ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவே கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர குற்றம்சும்த்தியுள்ளார்.

கருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறித்து மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறி;க்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றம், பொதுமக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்தமை, சிறுவர்களைப் பலவந்தமாக ஆயுதப்படையில் இணைத்துக் கொண்டமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சுமத்தப்பட்டு, போலிக் கடவுச்சீட்டில் இங்கிலாந்து சென்று அங்கு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட கருணாவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கச் செய்ததன் மூலம், ராஜபக்ஷ நிர்வாகம் நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் குறைத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வரலாற்றில் மோசமான நிகழ்வாகப் பதியப்படும் என மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேவேளை ஆயுத அரசியலில் ஈடுபட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்பும் உரிமையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சிறந்த ஜனநாயக இருப்புக்கு இது மிகவும் அவசியமானது என்பதையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எனினும் கருணா ஆயுத போராட்ட அரசியலைக் கைவிடவில்லை. அவரின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கப்போவதில்லை என பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதனடிப்படையில் அவரின் கீழ் தற்போதும் ஆயுத படை இயங்குகிறது. முகாம்கள் இருக்கின்றன. இந்த ஆயுதக்குழுவை எதிராளிகளை வேட்டையாடப் பயன்படுத்துகின்றனர். கப்பம் பெற பயன்படுத்துவதாகவும் பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக ஆயுதப்படையில் இணைத்துக் கொள்கின்றனர் என்ற குற்;றச்சாட்டு தற்போது கருணா அணி மீது சுமத்தப்படுகிறது. தற்போதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள ஒருவரை நாட்டின் அதிஉயர் நிறுவனமான நாடாளுமன்றத்திற்கு நியமித்தது, மக்களின் உரிமைகளை முழுமையாக மீறிய செயல் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கை வேறு எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கருணா நியமிக்கப்பட்டார். தமது உறுப்பினர் ஒருவரை இந்த வெற்றிடத்திற்கு நியமிக்குமாறு ஜே.வீ.பீ எழுத்து மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளருக்கு அறிவித்துள்ள நிலையில், அரசியல் ஜனநாயகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வேறு ஒருவரை நியமித்தமை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வீ.பீயும் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் எனவும் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.

www.globaltamilnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.