Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதி தந்தி அனுப்பச் சொல்வதால் யாருக்கு என்ன பயன்?--ஜெயலலிதா

Featured Replies

இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக தொலைபேசியில் அழைத்து, தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். அதை விடுத்து பிரதமருக்கு தந்தி அனுப்புவதால் யாருக்கு என்ன பயன் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டும் என அதிமுக பொதுச் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நான் ஏற்கனவே முதல்வர் கருணாநிதிக்கு ஒரு அறிவுரை தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருணாநிதி இருப்பதால், ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, இனப்படுகொலையை நிறுத்த உத்தரவிடுமாறு பிரதமரை கருணாநிதி கேட்டுக் கொள்ள வேண்டும் என நான் கூறியிருந்தேன்.

ஆனால் பதிலுக்கு கருணாநிதி, புதுமையான யோசனையை தமிழக மக்களுக்கு அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கடி தரும் வகையில் லட்சக்கணக்ககான தந்திகளை அனுப்புங்கள் என்று தமிழக மக்களிடம் அவர் கூறியுள்ளார்.

அதேபோல அக்டோபர் 6ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், தேவைப்பட்டால் பிரதமருக்கு நெருக்கடி தர ஆட்சியிலிருந்து விலகவும் தயார் என்று அறிவித்தார் கருணாநிதி.

2004ம் ஆண்டு மே மாதம், கருணாநிதி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்ற கருணாநிதி மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட 7 திமுகவினரையும் பதவியேற்கக் கூடாது. டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் துறை கொடுக்கப்படும் வரை பதவியேற்கக் கூடாது என அறிவுறுத்தி விட்டு வந்தார். சொன்னபடியே கப்பல் துறையையும் பெற்றார்.

ஆனால் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளின்போது மட்டும் வெறுமனே மக்களுக்கு அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார். தந்தி அனுப்புங்கள் என்று கூறுகிறார். இவ்வளவுதான் தமிழர்களைப் பற்றி இவர் படும் கவலை.

இலங்கையில் நடைபெறும் சண்டையால், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வீடுகளை இழந்து, அகதிகள் போல தாயகத்திலேயே வசிக்கும் அவலத்தில் உள்ளனர்.

உணவு, மருந்து, குடியிருக்க வசதி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் இந்த துயரிலிருந்து விடுபடாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பின்ணனியில் தந்திகள் அனுப்பச் சொல்வதும், உயர்ந்த மட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு (இலங்கை துணைத் தூதர்) கண்டிப்பதும் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவுவதாக அமையாது.

பாதிக்கப்படும் தமிழர்கள் குறித்து மாநிலத்திலும்,மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா?.

பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மத்திய அரசு சேகரித்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆகா தொடங்கியிற்றா அம்மணி தன் அரசியலை இப்படியான மலிவான அரசியலால்தான் தமிழகத்தில் ஒரு பலமான எதிர்ப்பை மத்திய அரசுக்கு காண்பிக்க முடியாமல் இருக்கின்றது. இதற்கு வை.கோ மெளனம் சாதித்து கொண்டிருக்கின்றாரா? :rolleyes::blink: :blink: :lol::) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.