Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடாப்பா தமிழகத்தில நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்குது. கேள்விப் பட்டனியோ என்றார் அவர். ம் என்றேன் நான். மன்மோகன் சிங் இலங்கைத் தூதரை அழைத்து யுத்தத்தை உடனடியா நிறுத்தச் சொல்லியிருக்கிறாராம். உண்மையோ என அவர் கேட்டார். அப்பிடியொண்டுமில்லை என நான் மறுதலித்தேன். ச்சே அங்கை கருணாநிதியோடு கதைச்சிருக்கிறாராம். உடனை தூதரை அழைத்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லி சொன்னதா மன்மோகன்சிங் சொன்னாராமே - அவருக்கு தன் புளுகம் முறிந்திடக் கூடாதென்ற தவிப்பு.

யுத்தத்தை நிறுத்தச் சொல்லியெல்லாம் சொல்லவில்லை. தூதரை சந்தித்து வழமையாக கதைக்கிறமாதிரி பார்த்து அவதானமா நடந்து கொள்ளுங்கோ என சொல்லியிருக்கிறார்கள். சண்டை செய்யும் போது சனம் சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கோ என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் குடியிருப்புகளை நோக்கி இராணுவம் கனத்த ராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்தி முன்னேறுகிறது. சனத்துக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? நேற்று யுத்தத்தை நிறுத்த சொல்லி அறிவித்த பிறகுதான் இன்று ராணுவம் கிளிநொச்சி நோக்கி முன்னேறப் பார்த்திருக்கிறது. ஒருவேளை துணைத்தூதர் இங்கால சொல்ல மறந்திட்டாரோ என நான் சிரித்தேன்.

என்னடாப்பா இப்பிடிச் சொல்லுறாய். என்றார் அவர். பின்னையென்னண்ணை? முடிந்தால் முழுசா சண்டையை நிறுத்தச் சொல்லி அறிவிக்கட்டும். அதை விட்டுட்டு அடியுங்கோ ஆனால் வலிக்காமல் அடியுங்கோ என்றால் எரிச்சல்தானே வரும் என நான் மென்சினந்தேன். ம்.. நானும் ஏதோ 87 இல நடந்த மாதிரி இந்தியா தலையிட்டு இந்த பிரச்சனையை முடிக்கும் என நினைத்ததாய் அவர் சொன்னார். அவர் ரொம்ப நல்லவர். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போலும்.

அண்ணை - கருணாநிதி கூட்டிய கூட்டம். அதுக்கு கைமேல் பலன் என்று காட்ட மன்மோகன்சிங் இந்த ஒரு உதவியைச் செய்திருப்பார். கருணாநிதிக்கோ அல்லது அங்கை கூட்டம் நடத்திற வேறு நபர்களுக்கோ இதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் கூட்டத்திற்கு வருகின்ற, உண்ணாவிரதம் இருக்கின்ற, தன்னார்வத்தில் தந்தி அனுப்புகின்ற, ஒவ்வொரு மக்களுக்கும் நாங்கள் நன்றியுடையவராய் இருக்கணும். அவற்றால் பயனேதும் இல்லையென்ற போதும். ஏனென்றால் அவர்கள் எந்த அரசியல் நோக்கமும் அற்று, தாங்களும் தமிழர், நாங்களும் தமிழர் என்ற ஒரே நோக்கில் இதை செய்கிறார்கள். அந்த உணர்வை மரியாதை செய்யணும் என நான் கொஞ்சம் ஓவராய் பீல் பண்ணிப் பேசினேன்.

சரியாச் சொன்னாய். ஆனா இது மட்டும் காணாது. இப்பிடி தொடர்ந்து செய்யோணும். ஊர்வலங்கள் உண்ணாவிரதங்கள் என்று வீதியில இறங்கிப் போராடணும். அப்பதான்தான் மத்திய அரசுக்கு கொஞ்சம் விளங்கும் என்று முகம் மலர்ந்தார் அவர்.

ம்.. அதுமாதிரி நாங்களும் பத்து லட்சத்துக்கு கிட்ட இங்கை வெளிநாடுகளில இருக்கிறம். நாங்களும் தொடர்ச்சியா அந்தந்த நாடுகளில வீதியில இறங்கிப் போராட வேணும். சும்மா வருசத்துக்கு ஒண்டு என்டு கொன்ட்ராக்ட் போட்டு செய்தால் காணாது. ஒவ்வொரு நாளும் செய்தாத்தான் ஐரோப்பிய யூனியன் ஐநா எண்டு கொஞ்சம் திரும்பி பாப்பாங்கள். என்ன அண்ணை? என நான் அவரைக் கேட்டேன். ம்.. என முகவாயைச் சொறிந்து கொண்டு நின்றார் அவர். அது சரி போன மாசம் ஜெனீவா ஐ நா க்கு முன்னாலை இலங்கை தமிழர் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தவை. நீங்கள் போனனியளே ? என தொடர்ந்தும் கேட்டேன்.

அவர் எதையோ புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதை விடு . என்ன கலைஞர் டிவியை வாற 9ம் திகதி கட்டண டிவி யாக்கிறாங்களாம். 132 பிராங் மலிவென்ன? ம்.. அந்த மானாட மயிலாட இன்ரஸ்ட்டா போகுதென்ன..? என்றார் அவர். நான் ஓம் என்றேன்.

0 0 0

கனடாவில் இருந்து அழைத்த நண்பர் விரக்தியில் பேசினார். உந்த வெளிநாடுகளை நம்பக் கூடாதடா. ம் - இது நான். பின்னையென்னடா அண்டைக்குப் பார் 60 000 பேர் ஒரு இடத்தில ஒண்டாக் கூடி தமிழரின் தாயகத்தை அங்கிகரி - இலங்கை அரசை கண்டித்து வை என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தம். ஒன்றிரண்டு பேர் இல்லை. 60 000 பேர். அந்த 60 000 பேரின்ர உணர்வுகளையும் விளங்கிக் கொள்ள மாட்டாங்களாமே.. கள்ளப்…

கனடாவில மொத்தம் மூண்டு லட்சம் தமிழ்ச் சனம் இருக்கினமாமே என்றேன் நான். ஓ கிட்டத் தட்ட வரும் என்றார் அவர். ம்.. ஒருவேளை கனேடிய அரசாங்கம் கொஞ்சம் வித்தியாசமா ஆர்ப்பாட்டத்திற்கு வராத மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளுறன் எண்டு பேய் வேலை பார்த்திருக்குமோ ? என்றேன் நான். அவருக்கு அது விளங்கியிருக்கவில்லை.

தாயகத்தை அங்கீகரி மகிந்தவை கண்டித்து வை என 60 000 பேர் வந்திருந்தால் மிச்சம் ரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும் தாயகத்தை அங்கிகரிக்க வேணாம். மகிந்தவை கண்டிக்க வேணாம் என கருதுவதாய் கனேடியன் அரசு புரிந்து கொண்டிருக்குமோ ? - என்ற எனக்கு சிரிப்பு வந்தது. அவருக்கு கோபம் வந்தது. போங்கடா உங்களுக்கு நக்கல் என்றார்.

-சாரல் சயந்தன்

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=390

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.