Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக , புலம்பெயர் மக்களின் எழுச்சியே விடியலை அழைத்து வரும்

Featured Replies

கனடா தேசத்து `நேஷனல் போஸ்ட்' என்கிற பத்திரிகைக்கு, சிறீலங்காவின் இராணுவத் தளபதி வழங்கிய செவ்வி, சிங்களத்தின் ஆழ்மன பேரினவாதச் சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது. சிறீலங்கா நாடானது, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனத் தான் திடமாக நம்புவதாக, மகாவம்ச வரலாற்று விளக்கமொன்றை அவர் அளித்திருந்தார்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, இவையன்றும் புதிய விடயமல்ல.

ஏற்கனவே சிங்கள மரத்தில் படரும் செடிகொடிகள்தான் தமிழினமென்று கூறிய டி.பி.விஜேயதுங்காவை விட, இராணுவத் தளபதியின் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாத யூலை - இன அழிப்பு சூத்திரதாரி ஜே.ஆரும், தமிழர் தோலில் செருப்புத் தைக்கப் புறப்பட்டவர்களும், விட்டுச் சென்ற பேரினவாதப் பாதையில் மகிந்த பரிவாரங்கள் பயணிப்பது ஆச்சரியமானதல்ல.

இதனைப் புரிந்து கொள்ளாமல், சிங்களத்திடம் சரணாகதியடைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்ளலாமென, இன்னமும் மாற்றுக் கொள்கை தேடும் கும்பல்களுக்கு, சரத் பொன்சேகாவின் பாசை புரியப் போவதில்லை. பலவீனமான கூட்டம், மகிந்தரிடம் அல்லது மன்மோகன் சிங்கிடம் சரணாகதியடையலாம். அல்லது சிறீலங்கா பாதுகாப்பு இணையத் தளச் செய்திகளை தமிழாக்கம் செய்யலாம். தமது ஆதிக்கக் கதிரைகளுக்கு ஆபத்து வரும்போது, வடக்கின் குறுநில மன்னரும், கிழக்கின் மாகாண சபை மந்திரியும் கூட்டுச் சேரலாம். இவைதான் கொழும்பில் அரங்கேறும் நாற்காலி நாடகம்.

இத்தகைய கோமாளிக் குசும்பர்களை, தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதியாகக் காட்ட முயற்சிக்கும் மகிந்த அரசிற்கு, முதுகு தடவும் வேலையை அமெரிக்கத் தூதுவர் கச்சிதமாக செய்துள்ளார். ஆட்கடத்தல்கள், படுகொலைகளைக் கைவிட்டால், உனக்கு ஞானஸ்தானம் வழங்கப்படுமென கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானிடம் வாக்குறுதி அளித்துள்ளார் உலக மகா தூதுவர். இவற்றையெல்லாம் விட, சரத் பொன்சேகாவின் தலைவர் கோத்தபாய ராஜபக்ச கூறிய பொன்மொழிகள், மொழியியல் வல்லுனர்களையும் தலைசுற்ற வைத்துவிடும். `தமிழர் எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லையாம். ஆனாலும் பயங்கரவாதிகள் எல்லோரும் தமிழர்களாம்' தனக்கு அரசியல் தெரியாதென ஏற்றுக்கொண்ட கோத்தபாயவிடமிருந்து இதைவிட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.

இதையே சொல்மாற்றம் செய்து பார்ப்பார் பசில் ராஜபக்ச. ‘தமிழர்கள் எல்லோரும் புலிகள் அல்லர், ஆனாலும் புலிகளெல்லாம் தமிழர்கள்' இங்கு சிங்களப் புலிகளை எங்கே, பொருத்துவதென்பதை ஹெல உறுமய - சம்பிக ரணவக்கவிடம் விட்டு விடலாம். அடுத்ததாக, ‘சிங்களவர் எல்லோரும் அடக்குமுறையாளர்கள் அல்லர். ஆனாலும் அடக்கு முறையாளர்கள் எல்லோரும் சிங்களவர்கள்' என்று தமிழ் மக்கள் கூறலாம். இவையெல்லாம் ஒருவகையில், சிங்கள பரப்புரை உத்தியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.

அதாவது, விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அந்நியமாக்கி, தனிமைப்படுத்திவிட வேண்டுமென்பதே சிங்களத்தின் பேராசை. தனிச் சிங்கள இராஜ்ஜியமென்கிற தீராப் பெருங்கனவு, சரத் பொன்சேகாவின் வாய் வழியாக, உலகின் செவிகளில் சென்றடைந்துள்ளது. இக்கூற்று தவறென்று சிறுபான்மை இனக் கட்சியின் தலைவர்கள் கண்டனக்குரல் எழுப்பலாம். அதற்குள் மலையகத் தலைவர்களை சேர்க்கக்கூடாது. அவர்கள் ஏதாவது கூற முற்பட்டால், இருக்கும் மந்திரிப் பதவிக்கு நாசம் ஏற்பட்டுவிடலாம். அதேவேளை மூன்று குரங்குச் சிலைகளின் நிலையில் இருக்கும் காந்திதேசம், சரத் பொன்சேகாவின் ஆட்களுக்கு, மறைவிடங்களில் பயிற்சி அளிக்கும்போது, அவர் கூறிய வரலாற்று வியாக்கியானங்களை செவிமடுக்க நேரமிருக்காது.

கண், காது, வாய் போன்ற மூன்று முக்கிய வாசல்களையும் மூடியிருப்பது, இந்தியாவிற்கு தற்போது தேவையான விடயந்தான். இருப்பினும், தமிழ்நாட்டில் திரண்டுவரும் ஈழ ஆதரவு நிலைப்பாடு குறித்து, மௌனம் சாதிக்க முடியாததொரு கட்டத்திற்குள் இந்திய மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. அதேவேளை கருணாநிதியை நோக்கியே சகல ஈழ ஆதரவுச் சக்திகளின் பார்வையும் திரும்பியுள்ளது. நெடுமாறன் ஐயாவினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் விடயத்தில், ஏமாற்றுத் தந்திரத்தை பிரயோகித்த கலைஞர், முகிழ்ந்துவரும் தமிழ்நாட்டு இன உணர்வினை திசை திருப்ப, புதியவகை தந்திரோபாயங்களையும் கையாள்வார்.

அதாவது மத்திய அரசிற்கு, இராஜதந்திர சிக்கல் ஏற்படாதவாறு, இந்தப் பிரச்சினைக்கு தான் தலைமை தாங்குவதுபோல் போக்குக் காட்டி, தமிழக எழுச்சியினை சிதைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடலாம். ஒரு கவிதை, சட்ட சபையில் தீர்மானம் அல்லது கண்டனப் பொதுக்கூட்டமொன்றை நடாத்தி, எல்லாமே முடிந்துவிட்டது போன்றதொரு மாயையை உருவாக்குவதில் கலைஞர் சாணக்கியர். ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து, புதிய தேர்தல் கூட்டொன்று உருவாகுமென்கிற அச்சமே தற்போது அவரிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.

ஆனாலும் அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக, எழுச்சிக் கோலம் பூண்டுள்ள தமிழக மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க முற்பட்டால், தமிழின வரலாற்றுப் பதிவுகளில் கலைஞர் நாமம் மறைந்தே போகும். மாவீரர் தின உரையில், தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல, தமிழக, புலம்பெயர் மக்களின் எழுச்சி, விடுதலையை விரைவாக்குமென்பதை சகலரும் புரிதல் வேண்டும்.

- இதயச்சந்திரன்

http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.