Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்ட வடிவங்கள் மாறுபடலாம் - முரண்படலாம் ஆனால் - சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்கள் நியாயமானது - ஹக்கீம் - விசேட செவ்வி:

Featured Replies

போராட்ட வடிவங்கள் மாறுபடலாம் - முரண்படலாம் ஆனால் - சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்கள் நியாயமானது - ஹக்கீம் - விசேட செவ்வி:

சாதாரண ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் குறிப்பாக தற்போதுள்ள வெஸ்ற் மினிஸ்ரர் முறைமையின் கீழ் தனிநபர்கள் வெற்றி பெற்றுக் கொண்டு போகலாம். அவர்கள் பட்டங்கள் பதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் அங்கே சமூகங்கள் தோற்றுப் போகின்றன. ஆனால் இவை தற்காலிகமானவையே. இந்தத் தனிநபர்கள் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது, அவ்வாறே சமூகங்களும் அந்த சமூகங்களின் பின்னாலுள்ள இயக்கங்களும் தொடர்ச்சியாக தோல்வி கண்ட வரலாறும் இல்லை. அவ்வாறு தோல்வி காண்பதற்கு இயங்கியல் அனுமதிப்பதும் இல்லை என மனம் திறக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம். குளோபல் தமிழ் செய்திகளுக்கு லண்டன் நேரம் 12. 15க்கு வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் மகிந்தவின் அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடும் போக்குவாத அமைச்சருமான சம்பிக்க ரணவக்க சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி குறித்து அவரிடம் வினவிய போதே எமது செய்திச் சேவைக்கு ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் தாம் செயற்படவில்லை என்பதுவும் முஸ்லிம்கள் காலம் காலமாக பல்வேறு அநீதிகளுக்கு உட்பட்டு வருகின்ற பொழுதிலும் தம்மோடு முஸ்லிம் காங்கிரஸ் கைகோர்க்கவில்லை என இந்த சிங்கள அடிப்படைவாதிகள் வேதனைப்படுகிறார்கள். ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையை எப்பொழுதுமே அங்கீகரித்து வந்திருக்கின்றது. அந்த வகையில் போராட்ட வடிவங்கள் மாறுபடலாம் அந்த வடிவங்கள் முரண்படலாம். ஆனால் சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்கள் நியாயமானது எனவும் குளோபல் தமிழ் செய்திச்சேவைக்கு வழங்கிய சிறு செவ்வியில் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த நாடு சிங்களவருக்கு உரியது சிறுபான்மையினர் 2ம் தரப் பிரஜைகளே என்ற ராணுவத் தளபதியின் அண்மையை கூற்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க அங்கீகரித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இருந்தே அவர் இத்தகைய கருத்துக்களை வெளியிடுகின்றார். எனவே சித்தாந்த சிறைகளுக்குள் சிக்கித் தவிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கடும்போக்குவாத சித்தாந்திகளோடு பேசுவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் கூறுகின்றார்.

சம்பந்தன், ஹக்கீம் போன்ற அடிப்படைவாதிகளுக்கும் அரசியல் அடிப்படைவாதிகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை – சம்பிக்க:

அரசியல் தீர்வு குறித்து மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்படவில்லை எனவும் இந்த நிலைமையில் அரசியல் தீர்வு குறித்து தற்போது பேசுவது அவசியமற்றது எனவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதிகாரத்தைப் பரவலாக்கும் யுகம் தற்போது முடிந்து விட்டது. அவை பழைய கதைகள், இந்த நாட்டை சமஷ்டி நாடாக உருவாக்க தாம் அனுமதிக்க போவதில்லை எனவும் இந்த நாட்டில் பெருபான்மை சிங்கள மக்கள் கூட சமஷ்டி குறித்து பேச அனுமதிக்கப் போவதில்லை என்பதே தமது நம்பிக்கை எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

சம்பந்தன், ஹக்கீம் போன்ற அடிப்படைவாதிகளுக்கும் மற்றும் அரசியல் அடிப்படைவாதிகளுக்கும் தற்போது இந்த நாட்டில் இடமில்லை. இதனால் அரசியல் தீர்வுகுறித்து பேசுவதை கைவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் கருத்து ரீதியாக பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்த ஜாதிக ஹெல உறுமயவே அடித்தளமிட்டது. பிரிவினைவாதத்திற்கு ஆதரவு வழங்கும் சர்வதேச கருத்து 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்டது, சந்திரிகா பண்டாராநாயக்க குமாரணதுங்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அதிகாரத்தைப் பரவலாக்கும் பொதி தொடர்பாகவே பேசி வந்தது. ஐக்கிய தேசியக் கட்சி இடைக்கால நிர்வாகம் குறித்து பேசியது. அந்த காலகட்டத்திலும் பிரிவினைக்குட்படாத நாடு என்ற எண்ணக்கருவில் இருந்து கொண்டு, பயங்கரவாதத்திற்கு யுத்தத்தினால் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஜாதிக ஹெல உறுமய மாத்திரமே கொண்டிருந்தது.

தற்போது முழு நாடும் அந்த தேசிய நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது ஒற்றையாட்சி குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றன எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலகம் மாற்றமடைந்துள்ளது. அமெரிக்காவுக்கோ, மேற்குலக சக்திகளுக்கோ அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் தடைகள் குறித்து அச்சமடையத் தேவையில்லை. தற்போது உலகில் செல்வந்த நாடுகள் தேவையான அளவில் உள்ளன. அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காவிட்டால் வேறு ஒரு நாட்டிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேற்குல நாடுகளின் தாளத்திற்கு ஆடும் காலம் ஒன்று இருந்தது.அந்த யுகம் தற்போதில்லை. இலங்கைக்கு தேவையான அளவில் புதிய நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இந்தியாவினால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடிப்பணியக் கூடாது – ஹெலஉறுமய:

இந்தியாவினால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடிப்பணியக் கூடாது எனவும் வெளிநாட்டு அழுத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுயோசனை ஒன்றை கொண்டு வர அரசாங்கம் அனுமதிக்க கூடாது எனவும் அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் தமது கட்சி தெளிவாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மூலம் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தும் முயற்சிக்கும் ஹெல உறுமய இணங்கவில்லை.

விசேடமாக மாகாண சபைகளுக்கு காணி, காவற்துறை அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும் வர்ணசிங்க கூறியுள்ளார்.இந்த நிலையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கும் யோசனையானது, ஒற்றையாட்சி மற்றும் இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத தீர்வாக அமைய வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.