Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித சங்கிலியில் ஒலித்த குரல்கள்!!!

Featured Replies

மனித சங்கிலியில் ஒலித்த குரல்கள்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் கொட்டும் மழையிலும் அணிதிரண்டு நிற்கிறார்கள். ஆதற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முதல்வரின் அழைப்பை எற்று தமிழகமே ஒன்று திரண்டு நிற்கிறது.

எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் : தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, சிங்கள அரசினுடைய கொடுமையை தடுப்பதற்காக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி என்கிற அறப்போர் கொட்டும் மழையில் நடைபெற்றுள்ளது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி : இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் சிங்கள ராணுவத்தின் வெறிதாக்குதலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு செய்யும் ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மனித சங்கிலி.

பொன்னம்பல அடிகளார் : இன்றைக்கு சர்வமத தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் கொட்டும் மழையில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க உந்த மனித சங்கிலி எல்லா வகையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

னிமொழி எம்.பி. : தொடர்ந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இந்த மனித சங்கிலியில் மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இலங்கையில் அழிக்கப்படும் தமிழினத்திற்காக ஒன்றுபட்டுள்ளோம். நிச்சயமாக இது மத்திய அரசுக்கும், உலகத்திற்கும் தமிழக மக்களின் உணர்வுகளை இந்த மனித சங்கிலி எடுத்து சொல்லும்.

லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் : கொட்டும் மழையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இலங்கையில் தமிழர்கள் கண்ணீர் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆலங்கை தமிழர்களுக்கு இறக்கம் காட்டத்தான் வான் மழையே இறங்கி வந்து இந்த மேகம் கரைந்ததுபோல, மத்திய அரசின் மனம் கரைய வேண்டும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

பாரதிராஜா : கொட்டும் மழையிலும் 80 வயது பெரியவர், பெண்மணி முதல் 15 வயது சிறுவர், சிறுமி வரை கலந்து கொண்டுள்ளனர் என்றால், இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனபடுகொலை எவ்வளவு ஆழமாக இவர்களுக்கு பதிந்திருக்கும்.

கவிஞர் வைரமுத்து : இலங்கை தமிழன் குண்டு மழையில் நனைகிறான். இங்கே தமிழன் வான் மழையில் நனைவது ஒன்றும் விசித்திரமல்ல. ஒட்டுமொத்த தமிழர்கள், இலங்கை தமிழினத்துக்காக ஆதரவு காட்டத்தான் இந்த மனித சங்கிலி. இந்த மனித சங்கிலி உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும். விடுதலை பெறும்.

டிகர் சத்தியராஜ் : இங்கே மழையில் இவ்வளவு பாதுகாப்போடு நிற்பதே எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அங்கே எனது ஈழ சகோதரனும், சகோதரியும் காட்டுக்குள், பாம்பு கடியில், சாப்பாட்டு இல்லாமல் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழர்களும் இந்த மனித சங்கிலியில் பங்கேற்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : இரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்ற, பசியால் துடித்துக் கொண்டிருக்கின்ற, நோயால் மருந்தில்லாமல் வாடிக்கொண்டிருக்கின்ற, தினம் தினம் குண்டு சத்தத்தை தவிர எந்த சத்தத்தையும் கேட்காத இலங்கையிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்காகத்தான் இந்த மனித சங்கிலி அணிவகுப்பு. இந்த மனித சங்கிலி இலங்கை தமிழனுக்கு ஆறுதலை மட்டுமல்ல, புதிய நம்பிக்கையையும் அளிக்கும் என்று நம்புகிறோம்.

நக்கீரன்.காம்

Edited by வேலவன்

அரசியல், திரைப்படத்துறை பிரகர்கள் முதல் பொது மக்கள் வரை எல்லோருமே கொட்டும் மழையில் நனைந்தபடி ஈழத்தமிழர்களிற்காக மேற்கொண்ட இந்தப் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஈழத்து உறவுகளின் துயர்துடைக்கப்படும்வரை தமிழக உறவுகளின் குரல் இவ்வாறு ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.