Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தக்க தருணத்தில் பலத்தை நிரூபித்து இழந்த நிலங்களை புலிகள் மீட்பர்! அரசியல் பொறுப்பாளர் நடேசன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை நீக்குவதற்கு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியாவின் டைம்ஸ் நௌவ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, எமது அமைப்பு மீது அவர்கள் விதித்திருக்கும் தடையை நீக்கி எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்தியா நிறுத்தவேண்டும்” என நடேசன் கூறியிருந்தார்.

இந்தியா தடையை நீக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கத்துக்குக் கடுமையான எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளதாக டைம்ஸ் நௌவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

“இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம், அவர்களைப் பலமிழக்கச் செய்துவிட்டோம், விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் எனக் கூறிவருகின்றனர்” என நடேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிரான வலிந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கூறியிருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை, இலங்கை இராணுவம் ஓரங்கட்டிவிட்டதாகக் கூறுகிறார்களே என நடேசனிடம் கேட்டகேள்விக்குப் பதிலளித்த அவர், “கடந்த 30 வருடங்களாக இலங்கைப் படைகள் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து 90 வீதமான விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், ஒரு மாத காலப் பகுதியில் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை வலுப்படுத்திய நாங்கள், முல்லைத்தீவைக் கைப்பற்றியிருந்தோம். யாழ் குடாநாடு கைப்பற்றப்பட்டு சில நாட்களின் பின்னர் எமது பலம் வலுவடைந்துவிட்டது” எனக் கூறினார்.

சரியான நேரத்தில் தமது பலம் நிரூபிக்கப்பட்டு, இழந்த பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்வோம் எனவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

http://swissmurasam.info/content/view/9426/26/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"விடுதலைப்புலிகளின் பலத்தின் பெரும்பகுதியை தாங்கள் அழித்துவிட்டார்கள் என இலங்கை இராணுவத்தினர் சொல்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. சரியான தருணத்தில் நாங்கள் எமது படைபலத்தை நிரூபித்து இழந்த நிலைகளை மீட்டெடுப்போம்."

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். ‘ரைம்ஸ் நெவ’ என்ற தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே நடேசன் இதனைத் தெரிவித்தார்.

"எமது பலத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டதாகவும், கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் என்றும் இராணுவம் சொல்கின்றது. ஆனால், தக்கதருணத்தில் எமது இராணுவ பலத்தை நிரூபித்து தக்க பாடத்தைக் கட்டாயமாக புகட்டுவோம்; இழந்த எமது நிலைகளை மீட்டெடுப்போம்." என்று நடேசன் கூறினார். இந்தவிடயத்தில் இலங்கை அரசம் இராணுவமும் கடந்தகாலங்களில் வெளியிட்ட கருத்துகளையும், அதனைத் தொடர்ந்து நிலைமைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"புலிகளை அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு கூறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகள் புதிய பலத்துடன் திருப்பித் தாக்கி இராணுவத்துக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்" என்று நடேசன் தெரிவித்தார்.

"கடந்தகாலக் கருத்துவேறுபாடுகள், பகைமைகள் மறக்கப்படவேண்டும். இந்தியா இனிமேலும் விடுதலைப்புலிகளை எதிரிகளாகக் கருதக்கூடாது" என்றும் நடேசன் கூறினார்.

இந்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கும் ஏதாவது செய்தியைச் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்தத் தருணத்தில் இந்தியாவினதும் அந்த நாட்டு மக்களினதும் உண்மை நண்பர்கள் யார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள நடேசன், தமது அமைப்பின் மீதான தடையை நீக்கி இந்தியா தம்மை அங்கீகரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.