Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புதிய தடுப்பரண் சிங்களருக்கு நெருக்கடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் புதிய தடுப்பரண் சிங்களருக்கு நெருக்கடி

இந்திய இராணுவம் முன்பு பயன்படுத்திய தடுப்பரண்களைப் போல் விடுதலைப்புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களால், தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் சிங்கள இராணுவம் பெரும் தவிப்புக் குள்ளாகியுள்ளதாக இந்திய இணையதளமொன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப் பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும், புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது. இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத் துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய இராணுவமும் கையாளுகிறது என்பதுதான்.

பாகிஸ்தானுடனான போரின் போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சுப் பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நாச்சிகுடா முதல், கிழக்கில் உள்ள அக்கராயன் குளம் வரையிலும் இந்த தடுப்பரண், நீண்டு காணப்படுகிறது. "ஸிக் ஸாக்" வடிவில் இந்த தடுப்பரண் அமைக்கப் பட்டுள்ளது. மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாக இந்த தடுப்பரண் உள்ளது.

முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும்.இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக்கூடிய பதுங்கு குழிகள். இந்த மூன்றும் சேர்ந்ததுதான் புலிகளின் தடுப்பரணாகும். இந்த பதுங்கு குழிகள் எனப்படும் பங்கர்களுக்குள் இருந்தபடி 360 பாகை கோணத்தில் எந்தப் பக்கமும் உள்ள எதிரிகளையும் குறிபார்த்துத் தாக்க முடியுமாம்.

கண்ணிவெடிகளை இயக்கு வதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் இராணுவத்தால் தப்ப முடியாதாம். ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பதுங்குகுழிகளிலிருந்து வரும் தாக்குதலை சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்துவிட்டால் அகழிகள் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம். இந்த அகழிகள் 10 அடி ஆளமுடையன. இந்தப் பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது.இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம்.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=9

இரண்டரைக் கிலோமீற்றர் தாண்டமுடியாதாமோ? :) இந்திய இராணுவம் அமைத்தது போன்ற தடுப்பரண்கள், அகழிகள், கண்ணிவெடி வயல்கள், :D கால எல்லை விதிக்கும் போது இதையெல்லாம் கணக்கில் எடுக்கவில்லை. இப்போது இயலாமைக்கு இதுவொரு சாட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.