Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டங்கள் தொடரும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை போராட்டங்கள் தொடரும்?

[09 - November - 2008]

தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா

"ஈழத் தமிழர் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த அங்கு உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்திய இராணுவ உதவிகள் வாபஸ் பெறப்படுவதுடன் எந்தவித இராணுவ உதவியும் அளிக்கக்கூடாது என்றும் ஒலித்த தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதது பெரும் அதிருப்தி அளித்திருக்கிறது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழக மக்கள் ஏற்காததன் அறிகுறியே, நாடெங்கும் இன்று தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டங்கள். இப்போராட்டடங்களை பல்வேறு கட்டமாக, பரவலாகத் தொடர, தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றுகூடித் தயாராக இருக்கின்றன" என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் ?தினக்குர?லுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.

சென்னையில், பழ.நெடுமாறன் "தென்செய்தி' பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது,

கேள்வி :- இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதில் மத்திய அரசின் நிலையையும் அதிகார எல்லைகளையும் உணரவேண்டும் என்றும் இன்னொரு நாட்டின் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவுதான் தலையிட முடியும் என்றும் மத்திய அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் கருணாநிதி நியாயப்படுத்தியிருக்கிறாரே?

பதில் :- இதனை சர்வகட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் எடுக்க முன்னர் அல்லது எடுக்கும்போது யோசித்து இருக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்தபோது அது உள்நாட்டுப் பிரச்சினை என்று இந்திய அரசாங்கத்துக்கு தெரியாமலா இருந்தது? இந்திய அரசு அளித்த ஆயுதங்களைக் கொண்டு அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது போரை நிறுத்து என்று கூறவேண்டியது இந்தியாவின் அதிகார எல்லையை மீறும் செயலாகுமா?

கேள்வி :- அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து மீண்டும் ஆராயப்படுமா?

பதில் :- உடனடியாக சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று நானும் ஏனைய கட்சியினரும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், முதல்வர் இதுபற்றி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.

கேள்வி :- இவ்விடயத்தில் உங்களின் முயற்சி எப்படி?

பதில் :-அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய அரசின் நடவடிக்கைகள் எல்லாமே ஏமாற்றம் அளிப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கூறியுள்ள நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை முதல்வர் நியாயப்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது! சர்வகட்சிக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசுக்கு மீண்டும் தமிழகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்த பல கட்சிகளுடனும் தொடர்ந்து பேசி வருகின்றேன். அதிவிரைவில் இது சாத்தியப்படும் என்று நம்புகின்றேன்.

கேள்வி :- ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து கட்சிகளும், அமைப்புகளும் தனித்தனியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இது ஏன்? ஒரு கூட்டு முயற்சியாக ஒரே குரலாக இருக்கக் கூடாதா?

பதில் :- தனித்தனியே போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் நோக்கம் ஒன்றா கத்தான் இருக்கிறது. ஒன்றுபட்ட போராட்டத்துக்கும் யோசித்து, திட்டமிட்டு செயல்படுவோம்.

கேள்வி :- அரசியல் கட்சியினரை விட திரை உலகத்தினரின் போராட்டங்களும் தீர்மானங்களும் ஆழமாகக் காணப்படுகின்றனவே?

பதில் :- நிச்சயமாக முதலில் திரைப்பட இயக்குநர்கள். பின்னர் நடிகர்கள். அதைத் தொடர்ந்து திரைப்படத் தொழிலாளர்கள் என்று பேரணி, கண்டனக் கூட்டம், உண்ணாவிரதம் என பெருமளவில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இவற்றில், திரை உலகின் எல்லாத் தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாக கலந்துகொண்டு வருகின்றனர். திரை உலகத் தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நானும் சென்றிருந்தேன்.

இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.விஜயன் என்னுடன் பேசுகையில், தங்களது போர்நிறுத்தக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்களும் தேவைப்பட்டால் வேலை நிறுத்தமும் நடக்கும் என்றும் இப்போராட்டத்தை அகில இந்திய அளவில் வட இந்திய பிரபல நட்சத்திரங்கள், திரை உலகத்தினர் பங்குபெறும் போராட்டமாக எடுக்கவும் முயற்சிக்கின்றோம் என்றும் கூறினார். திரைப்படத் துறையினரின் ஈழத் தமிழின உணர்வு மிகவும் அதிகமாகவும் வேகமாகவும் காணப்படுகிறது.

கேள்வி :- இப்போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு அகில இந்திய அளவில் காணப்படுகிறதா?

பதில் :- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அவர்களது போராட்டங்கள் திட்டமிடப்பட்டு விவேகமாக செயல்படுவதால் மத்திய அரசின் பார்வை அவர்கள் பக்கமாகவும் திரும்பியிருக்கிறது. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்தார்கள். பின்னர் தமிழகத்தின் மாவட்டங்களில் மட்டுமன்றி, புதுடில்லியிலும் மாணவர்கள் மட்டத்தில் போராட்டங்கள் நடத்தினார்கள். இப்பொழுது இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, டில்லி செங்கோட்டை முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி மாபெரும் மாணவப் பேரணியை நடத்தத் தீர்மானித்துள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்கும் இப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து மட்டும் இரண்டாயிரம் மாணவர்கள் தனி ரயில் மூலமாக டில்லி செல்லவிருப்பதும் இந்த ரயிலுக்கு ?ஈழத்தில் துடிக்கும் தமிழர்களின் கண்ணீர் தூதர்? என்று பெயரிடப்பட்டிருப்பதும் சிறப்பாக இருக்கிறது. "ஈழத் தமிழர் மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், உடனடி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இரு முக்கிய கோரிக்கைகளை வற்புறுத்தி இந்திய நாடாளுமன்றம் முன்பாக பதினான்காம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாணவர் பெருமன்றம் (ஏ.ஐ.எல்.என்.) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இரண்டாயிரம் மாணவர்களுடன் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி மாலை நான்கு மணிக்கு புறப்படுகிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா உள்ளிட்ட ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவும் மாணவர் பெருமன்றம் தயாராகி வருகிறது" என்று இம்மன்றத்தின் தமிழ் மாநில செயலாளர் திருமலை ?தினக்குரலு?க்கு தெரிவித்துள்ளார்.

கேள்வி :- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் செயல்பாடுகள் இவ்விதமாக பெருமளவில் நடக்கும்போது இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகிறதே?

பதில் :- இவர்களது தலைமை அகில இந்திய ரீதியில் இருந்தாலும் முடிந்தவரை இயங்குகின்றனர். ஈழத் தமிழினம் அழிந்து கொண்டிருப்பதை விளக்கும் இரண்டு குறுந்தகடுகளை இக்கட்சியின் இலக்கிய அமைப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திடம் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் பா.செயப்பிரகாசம் (சூரிய தீபன்) கையளித்திருந்தார். இவர்கள் மத்தியில் இப்பொழுது ஒரு மாறுதல்-நிலைமை புரிதல் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கேள்வி :- உங்களின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

பதில் :- இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை எற்படுத்த வேண்டும். இராணுவ உதவிகளை எந்த ரூபத்திலும் இந்தியா வழங்கக்கூடாது என்பவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி 12ஆம் திகதி புதன்கிழமை தமிழக சட்டமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அன்று காலை சென்னை அண்ணாசாலை ரிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டமன்றம் நோக்கிச் சென்று கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.