Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும்

வீரகேசரி வாரவெளியீடு 11/9/2008 6:01:21 PM - அண்மைக் காலத்தில் கடற்புலிகள் நடத்தியிருக்கின்ற இரண்டு தாக்குதல்கள் கடற்படையின் கவனத்தை வடக்கு நோக்கித் திருப்பியிருக்கின்றன. வடமேற்கு கடற்பரப்பின் மிகச் சிறிய பகுதியே புலிகளின் வசம் தற்போது இருக்கின்ற நிலையில் கடற்படையின் மீது புலிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்கள், தாம் பலவீனமைடைந்து விடவில்லை என்பதை வெளிப்படுத்த நடத்தப்பட்டவை என்றே கருதப்படுகிறது.

மூன்றாம் கட்ட ஈழப்போருடன் ஒப்பிடும்போது நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்புலிகளின் வீச்சு குறைவாகவே இருந்துள்ளது. இதனை கடந்த கால புள்ளிவிபரங்களில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது. இந்தநிலையில்தான் கடற்புலிகளின் பலம் குறைந்து போய்விட்டது, சிதைந்து பொய்விட்டதென்ற கணிப்புகள் அரசதரப்பில் இருந்து அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் கடற்புலிகள் மூன்றாம்கட்ட ஈழப்போர் காலத்தை விட, தற்போது தாக்குதல்களை சண்டைகளைக் குறைத்திருப்பதற்கு அவர்களின் பலவீனம் தான் காரணமா? அல்லது வேறு பணிச் சுமையேதும் காரணமா? என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டியது அவசியம். அது புலிகளின் இராணுவ இரகசியங்களைச் சார்ந்துள்ள விடயம் என்பதால் அவை இலகுவில் வெளிவரமாட்டாது.

கடந்த செப்டெம்பர் முதல் வாரத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அளித்திருந்த பேட்டியொன்றில், கடற்புலிகளின் முன்னைய பலம் குறித்தும் இப்போதைய பலம் குறித்துமான மதிப்பீடு ஒன்றை வெளியிட்டிருந்தார். 25 ஆக இருந்த புலிகளின் பாரிய தாக்குதல் படகுகளின் எண்ணிக்கை தற்போது 6 அல்லது 7 ஆகவும், நடுத்தர சண்டைப் படகுகளின் தொகை 30 தொடக்கம் 40 இல் இருந்து 10 முதல் 12 ஆகவும் குறைந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

அத்துடன் 2000 முதல் 2500 ஆக இருந்த கடற்புலிகளின் படைவலுவை தற்போது 500 முதல் 750 ஆகக் குறைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கணிப்பு வெளியாகி இரண்டு மாதங்களாகி விட்டன. இதற்குள் புலிகள் சந்தித்த இழப்புகள் கணக்கிலிடப்படவில்லை. கடற்படைத் தளபதியின் கணிப்பு கடற்புலிகளின் பலம் என்பது கணிசமாகக் குறைக்கப்பட்டு விட்டதென்பதாகவே இருந்தது. அத்துடன் 2006 இல் 21 கடற்சண்டைகளைச் செய்த கடற்புலிகள் 2007 இல் 11 கடற்சமர்களையும், 2008 இல் 3 கடற்சண்டைகளை மட்டுமே செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தப் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும் ஒருவருக்கு கடற்புலிகள் உண்மையில் பலவீனமடைந்து போயிருப்பதான தோற்றப்பாடு ஏற்படுவது இயல்பே. ஆனால் கடற்புலிகள் கடற்சண்டைகளைக் குறைத்துக் கொண்டதை வைத்துக்கொண்டு அவர்களின் போராற்றலைக் குறைத்து மதிப்பிடுவது சரியான செயலாகத் தெரியவில்லை.

தரைவழி விநியோகங்கள் இல்லாத ஒரு களத்தில் இருக்கின்ற புலிகள் இயக்கத்துக்கு ஒரே உயிர்நாடி கடற்புலிகள் தான். கடற்புலிகளின் விநியோகங்களை நம்பியே புலிகள் இயக்கம் உயிர்வாழ்கிறது என்பது தவறான கருத்தல்ல. வடமேற்கு கரையோரத்தால் சுலபமாகக் கிடைத்த விநியோகங்கள் இனிமேல் அவர்களுக்கு சிக்கலானதாகவே இருக்கும். காரணம் இராணுவம் பூநகரியை நெருங்கிவிட்டது. நாச்சிக்குடா வீழ்ந்துவிட்டது.

அதற்கடுத்த வலைப்பாடு கைவிடப்படும் நிலை அடைந்திருக்கிறது. காரணம் சுண்ணாவில் சந்தியை படையினர் கைப்பற்றியிருக்கின்றனர். இதுவே வேரவில் கிராஞ்சிப் பகுதிகளுக்கான வீதி பிரியும் இடம். ஆக, கடற்புலிகள் இப்போதிருப்பதை விட நெருக்கடியான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கின்றனர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டத்திலும் அவர்கள் இரண்டு தாக்குதல்களை வடக்கு கடலில் நடத்தியிருக்கிறார்கள்.

முதலாவது கடற்படையின் விநியோகக் கப்பலான "லங்கா முதித்த'வை குறிவைத்து நடத்தப்பட்டது. அந்தக் கப்பல் தப்பிவிட அங்கே தரித்திருந்த சரக்குக் கப்பல்களே தாக்குதல்களுக்குள்ளாகின. இது வடக்கு கடலில் கடற்படையின் கண்காணிப்பையும் மீறி கடற்புலிகளால் தாக்குதல்களை நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

இதன்பின்னர் நாகர்கோவில் கடலில் இடம்பெற்ற கடற்சண்டை வடபகுதிக் கடலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த முதலாம் திகதி அதிகாலை மணற்காடு கடற்பரப்பில் தொடங்கி நாகர்கோவில் கடற்பரப்பில் முடிந்த இந்தக் கடற்சண்டையில் ஏற்பட்ட இழப்புக்களை அரசதரப்பு முற்றாகவே மூடிமறைத்து விட்டதாக புலிகள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்தச் சண்டையில் புலிகள்“ "ஹொவர்கிராப்ட்' எனப்படும் ஈரூடக்கலம் ஒன்றையும், அதிவேகத் தாக்குதல் படகு ஒன்றையும் மூழ்கடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தவறானதென்றும் "ஹொவர்கிராப்ட்' மூழ்கடிக்கப்படவில்லை என்றும் "கூகர்' ரக ரோந்துப்படகே மூழ்கடிக்கப்பட்டதாகவும் புலிகள் பின்னர் அறிவித்திருந்தனர்.

ஏன் இந்தக் குழப்பம்? "கூகர் கிராப்ட்' என களத்தில் இருந்து அறிவிக்கபட்டது, தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட தவறால் "ஹொவர்கிராப்ட்' ஆக மாறியதன் காரணமாகவே இந்தக் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கைக் கடற்படையின் "ஹொவர்கிராப்ட்' என்ற ஈரூடக் கலம் வேகமாகப் பயணிக்கக் கூடியது. கடலிலும் தரையிலும் பயணிக்க உகந்தது என்றாலும் போர்நடவடிக்கையில் இதை உபயோகிக்க முடியாது. காரணம் இதில் ஆயுதங்களைப் பொருத்த முடியாது.

இதனால் இந்த "ஹொவர்கிராப்ட்'டை 5 கோடி ரூபாவுக்கு விற்றுவிட கடற்படை முடிவு செய்து கேள்விப்பத்திரமும் கோரியது. ஆனால், அதை விலைகேட்க எவரும் முன்வரவில்லை. இதனால் கொழும்பில் காட்சிப் பொருளாகத் தரித்து நிற்கிறது. அதேவேளை இந்தச் சண்டையில் கடற்படையினரின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்றையும் "கூகர்' எனப்படும் கடற்படையின் விசேட கொமாண்டோக்கள் பயன்படுத்தும் கரையோர ரோந்துப்படகு ஒன்றையும் தாம் மூழ்கடித்து விட்டதாக கடற்புலிகள் கூறியிருந்தனர்.

ஆனால் கடற்படையோ தமது பக்கத்தில் இந்தச் சண்டையில் அதிவேகத் தாக்குதல் படகுகளே பங்கேற்கவில்லை என்றும் விசேட கொமாண்டோக்களின் நீருந்து விசைப்படகுகளும் கரையோர ரோந்துப் படகுகளுமே பங்கேற்றதாகக் கூறியிருக்கிறது.அதேபோலப் புலிகள் இந்தச் சண்டையில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டதாக உரிமை கோரினாலும் கடற்படையோ தமது தரப்பில் 5பேர் காயமுற்றதாகவே தெரிவித்திருந்தது.

எனினும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கரையொதுங்கிய கடற்படையினர்“ நால்வரின் சடலங்களை தாம் கைப்பற்றியதாகவும் அவற்றை ஒப்படைக்க செஞ்சிலுவைச் சங்கத்திடம் அறிவித்த போதும் அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் புலிகள் கூறியுள்ளனர். அதேவேளை கடற்கரும்புலிகள் 7 பேர் இந்தச் சம்பவத்தில் மரணமாகியதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

இவர்களில் இருவரின் சடலங்கள் புலிகளிடம் சிக்கின. நான்கு சடலங்களின் பாகங்களை தாம் கைப்பற்றியதாக கடற்படை அறிவித்தது. மற்றொரு சடலம் பருத்தித்துறையில் கரையொதுங்கியது. இந்தக் கடற்சண்டையின் மூலம் வடக்கு கடலில் தமது ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கின்ற நிலையில் தாம் இல்லை என்பதை கடற்புலிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

காங்கேசன்துறை, நாகர்கோவில் கடற்சண்டைகளின் போது புலிகளின் தாக்குதல்களை தாம் முறியடித்து விட்டதாகவே கடற்படை கூறியுள்ளது. ஆனால் இரண்டு தாக்குதல்களும் நடந்த அடுத்தடுத்த நாட்களில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட குறிப்பிட்ட பிரதேசங்களுக்குச் சென்று சண்டைகள் குறித்து ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு வடமேற்கு கடற்பிரதேசம் ஊடான விநியோகங்கள் முற்றாக துண்டிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதையை அரசபடைகள் திறந்த பின்னரும் விடுதலைப் புலிகள் இயக்கம் நின்று பிடித்து சண்டையிடுமாக இருந்தால் அது கடற்புலிகளின் முழு வல்லமையில் தான் சாத்தியமாகும். அப்போது கடற்புலிகள் பலமிழந்து போய் விட்டார்களா? அல்லது இதுவரை என்ன செய்தார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற இராணுவ ரீதியான உண்மைகள் வெளியே தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.