Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசின் வஞ்சக துரோகத்தை எந்நாளும் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் - வைகோ கடிதம்!

Featured Replies

இந்திய அரசின் வஞ்சக துரோகத்தை எந்நாளும் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் மேலும் :

தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவனத்திற்கும், நடவடி;ககைக்கும் எழுதியுள்ளேன். இலங்கைத் தீவில் இரத்த வெறிபிடித்த இனவாத சிறீலங்கா அரசு தமிழ் இனத்தையே படுகொலை செய்து பூண்டோடு அழிக்க தன் முப்படைகளையும் ஏவி 'இன அழிப்பு' யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனக் கொகையை நடத்துகிறது.

இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக்கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாத பீரங்கித் தாக்குதலும், விமானக் குண்டு வீச்சும் அங்கு நடத்துகிறது.

அப்பாவித் தமிழர்கள், பெண்கள் குழந்தைகள், வயதானோர், நோயாளிகள் இராணுவக் குண்டுவீச்சில் மடிகின்றனர். உணவும், மருந்தும் ;இன்றிச் சாகின்றனர்.

மிகுந்த வரு;த்தத்தோடு இந்தியாவின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ;அரசை நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்திய அரசு திட்டமிட்டு தொடர்ந்து சிங்கள அரசின் இராணுவத்ப் தாக்குதலுக்கு முழு அளவில் உதவி செய்து வருகிறது. இலங்கை விமானப் படைக்கு ராடார்களைத் தந்தது. இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்திய ;இராணுவ விமானப் படை நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பி இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது.

தமிழ் மக்களைக் குண்டு வீசிக் கொன்று குவிக்கும் சிங்கள விமானப் படை விமானங்கள் பயன்படுத்தும் பலாலி விமானதளத்தை இந்திய அரசின் செலவில் பழுதுபார்த்துக் கொடுத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்க உதவியது. பசுமை நிறைந்த ஈழத்து வயல் வெளிகளில் தமிழர்களின் இரத்தம் வெள்ளமாகப் பாய்கிறது.

இலங்கையில் சிங்கள அரசு போர்நிறுத்தம், செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், இல்க்கியத் துறையினர் ஊர்வலங்கள், அறப்போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் நடத்தியும் இந்திய அரசு அவற்றை அவமதித்து அலட்சியம் செய்தது. மாறாக வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இலங்கைக்கு தொடர்ந்து இராணுவ ரீதியான உதவிகளைச் செய்து வருகிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உதவியால் ராஐபக்ஷே அரசு நடத்தும் தமிழனக் கொலையைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாமான கோரிக்கையை நீங்கள் நிராகரித்;தால் தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அரசின் இந்த வஞ்சகமான துரோகத்தை எந்நாளும் மன்னிக்கமாட்டார்கள்," என்று கடிதத்தில் கூறிப்யுள்ளார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/vaik...2009-01-13.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.