Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதைய நிலமை குறித்து வன்னித் தமிழர் பேரவை ஐ.நா.விற்கு அனுப்பியுள்ள திறந்த மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலமை குறித்து வன்னித் தமிழர் பேரவை ஐ.நா.விற்கு அனுப்பியுள்ள திறந்த மடல்

திகதி: 05.04.2009 // தமிழீழம் // [வன்னியன் ]

வன்னியின் தற்போதைய அவல நிலை குறித்து வன்னித் தமிழர் பேரவை திறந்த மடல் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான செயலர் ஜோன் கொல்ம்சிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வன்னித் தமிழர் பேரவையின் தலைவரும் செயலாளரும் கையொப்பமிட்டு, சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கும், சர்வதேசத்தின் தவறான புரிந்துணர்வுகளுக்கும் விளக்கமளிக்கும் வகையில் வன்னி நிமைகளை, மக்களின் அவலங்களை விளக்கி நீண்ட அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் தமிழ் மொழியாக்கத்தைத் தருகின்றோம்.

பெறுநர்:-

கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர்

ஒச்சாயு.

என்ஜேனீவா

சுவிற்சர்லாந்து

பெருமதிப்பிற்குரிய ஐயா,

"திறந்த மடல்"

ஜோன் ஹோம்ஸ் தன்னைத் தப்பிப்பிழைக்கும் தந்திரக்கலையில் வல்லோன் எனத் தானே நிரூபித்து நிற்கின்றார். முன்னர் ஒருதடவை ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சரே அவரைத் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் பணம் பெறும் அவர்களின் முகவர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவரோ ராஜபக்சவின் முகவராகத் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அந்த வகையில் தன்னுடைய அறிக்கைகளை வெளியிடுவதையே தன்னுடைய இலக்காகவும் நோக்காகவும் கொண்டு அண்மைக்காலங்களில் செயற்பட்டு வருகின்றார்.

வெறுமனே சிறிலங்காவின் பரப்புரை யந்திரத்திலிருந்து கிடைக்கும் ஆதார சான்றுகளற்ற அறிக்கைகளைக் கொண்டே தனது அறிக்கைகளை அளிக்கின்றார். வன்னி மக்கள் முகங்கொடுத்து நிற்கும் அவர்களது உடனடிப்பிரச்சினைகனைச் சந்திப்பதற்குப் பதிலாக களநிலை உண்மைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வன்னி மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பைப் பேணல், உணவு மருந்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பனவற்றுக்கு உத்தரவாதம் அளிக்காது அதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வேறுபாடில்லாத நிலைகளையே அவர் எடுத்து வருகின்றார். அவரது அறிக்கையில் வன்னி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வன்னி மக்களைத் தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளனர் எனச் சலஞ்சாதிக்க முயல்கிறார். அதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்னி மக்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளதென்பது போலவும் காட்டப்பார்க்கின்றார்.

அதே அறிக்கையில் வன்னி மக்களைப் போக விடுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளைக் கோருவதையும் பலவந்தமாகப் படையில் சேர்ப்பதை நிறுத்தும்படியும் மனித கேடயமாக மக்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார். வன்னிக்கு வருகை தராமலும் வன்னி மக்களைச் சந்திக்காமலும் அவர்களுடைய விருப்புக்களையும் தேவைகளையும் கண்டறியாமலும் இந்தத் தவறான தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார் என நாம் கேட்க விரும்புகின்றோம். திரு ஹோம்ஸ் புனை கதைகளை உரைக்கின்றார் அல்லது அரசாங்கத்தின் வழமையான பரப்புரைகளையே அவரும் கூறுகின்றார் என நாம் துணிந்து கூறுகின்றோம்.

வன்னிப் பிரச்சினை போன்ற வேறு எந்தச் சர்வதேசப் பிரச்சினைக்காவது பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்று திருப்பதிகரமான தீர்வைக் பெறும்படி கேட்கப்பட்டுள்ளதா என நாம் ஹோம்ஸைக் கேட்க விரும்புகின்றோம். பலஸ்தீன மக்களின் பிரச்சினையில் அவர்களை உலகின் வேறு எந்தப் பகுதிக்காவது சென்று அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டதா? வரலாற்றை ஆழமாகப் பார்ப்பின் யூதர்களுக்கு மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலுக்கு மாற்றாக கலிபோர்னியாவில் வாழுமாறும் உகண்டாவில் வாழுமாறும் கேட்கப்பட்டபோது அவர்கள் எதற்காக அதனை மறுத்தார்கள்? காரணம் இஸ்ரேல் அவர்களின் ஆன்மீகப் பூமி. அதே மான நரம்பு வன்னி மக்களுக்கும் இருக்கையில் திரு ஜோன் ஹோம்ஸ் போன்ற சிந்தனையாழமற்றவர்கள் வன்னி மக்களை அவர்களுடன் பின்னிப்பிணைந்த வீடுகளையும் அவர்கள் தாயகத்தையும் விட்டு வெளியேறும்படி கேட்கையில் மறுப்பார்கள் தானே.

எங்கள் எண்ணப்படி ஐ.நா வுக்கு அண்மைக்காலங்களில் அதன் பிடி தளர்ந்து விட்டது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக உலகின் சிறுபான்மையினப் பிரச்சினைகளைச் சந்திக்க மறுக்கிறது. சிறுபான்மையினங்கள் தங்கள் முன்னோர்களின் தாயகத்தில் வாழும் உரிமை உண்டு ஜோன் ஹோம்ஸ்ம் அவரது மேலதிகாரிகளதும்; விருப்புகளுக்கு ஏற்ற கூத்துக்களிலும் கவர்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை ஐ நாவின் உயர்மட்டங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை இன்று கையாலாகாத அமைப்பாகியுள்ளது. அதன் அதிகாரிகள் தாங்கள் தங்கள் பதவிக்குப் பெறும் பணத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக மட்டுமே உள்ளனர். இந்த இடத்தில் ஜோன் ஹோம்ஸ்க்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகின்றோம். வன்னி நிலம் உலகின் மிக மோசமான கொலைக்களமாகக் காட்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றி தினம் தினம் 50 முதல் 60 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்றும் 100 முதல் 150 க்கு மேற்பட்ட தமிழரின் உடலுக்குச் சேதம் இழைத்தும் வருகின்றது. திரு ஜோன் ஹோம்ஸ் நன்கு படித்தவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உள்ளவர் பரப்புரைகளுக்கு ஊடாக உண்மைகளைக் கண்டறியும் மதிநுட்பம் உள்ளவர் என்பதை நாங்கள் ஏற்கின்றோம். இவ்வளவு உயர்ந்த திறமைகளை எல்லாம் கொண்ட ஜோன் ஹோம்ஸால் வன்னியில் மக்கள் கொன்று குவிக்கப்படுவதை மட்டும் கண்டுக்கொள்ள இயலவில்லையே என்பது பலத்த ஏமாற்றத்தை எங்களுக்குத் தருகிறது.

இந்தக் கொலைக்களம் சர்வதேச குரல்கள் எழாதவாறு செய்து கொண்டு வன்னியின் சனத்தொகையை குறைத்து மெதுவான முறையில் இனஅழிப்பைச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமான இனஅழிப்பா மெதுவான இனஅழிப்பா என்பதல்ல எந்த வகையான இனஅழிப்பும் நவீன உலகால் முழுஅளவில் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனை ஜோன் ஹோம்ஸ் செய்யவில்லை என்றால் அது அவரின் சிந்தனை வெறுமையையே வெளிப்படுத்துகின்றது. ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் எதற்காக இந்த நாட்டின் இனஅழிப்பைக் கண்டிக்க மறுக்கிறார்கள்?

வன்னி மக்களில் பெரும்பாலனாவர்கள் மாதக்கணக்கில் மெதுவான இனஅழிப்புச் செய்யப்பட்டதன் பின் கூட்டு மொத்தமாகக் குரல் எழுப்பலாமெனச் சர்வதேச சமுகம் நம்புகின்றதா?

சத்தற்ற உணவென்பது மெல்லச் சாகடிப்பதற்கு மறுபெயர். வன்னி மக்கள் சத்தற்ற உணவின் பிடியில் சிக்கியுள்ளனர். தோலுரிக்கப்படாத சோயாவும் உமியகற்றப்படாத அரிசியும் பருப்பும் தினம் உண்டு அவர்கள் உயிர்பிழைக்கின்றனர். உணவின் கலோரி பெறுமதிகள் பற்றிப் பேசும் மேற்குக்கு வன்னியில் மக்கள் சத்தின்றி சாவதைக் காண முடியாது இருக்கும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு எந்த அளவுக்கு இந்நேரத்தில் தகுதியுடையவர்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?

வன்னி மக்கள் மேல் வீசப்படக் கூடாதெனத் தடுக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகள் வெள்ளைப் பொசுப்பரஸ் குண்டுகள் நச்சு வாயு உருளைகள் தரையாலும் கடலாலும் வானாலும் கொட்டப்படுதைக் ஹோம்ஸ் தன்வசதிக்கேற்றவாறு கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்.

சிறிலங்கா அரசாங்கம் வைத்தியசாலைகள் மேல் குண்டுகளை வீசுவதையும் திரள்நிலை அளவில் அங்குள்ள நோயாளிகளைக் கொல்வதையும் நியாயப்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் நியாயப்படுத்தலைக் கண்டிக்கவோ அல்லது இத்தகைய குண்டு வீச்சுக்கள் இடம்பெறாதவாறு தடுக்கவோ அதுவரை ஐ நா உட்பட எந்தச் சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. இரண்டாவது உலக மகாயுத்தத்தில் எதிரிகளின் படைகள் வைத்தியசாலைகளைத் தாககுவதைத் தவிர்த்தன. சிறிலங்காவுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்களிக்கபட்டுள்ளதா? அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலைகளைத் தாககுவதைக் கூட தவிர்க்க ஐ நா வால் ஏன் முடியவில்லை? வேறு மொழியில் கூறுவதானால் வன்னி மெதுவாக வைத்தியசாலைகள் அற்ற பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது.

உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இதற்குச் சமானமானதாக உள்ளதா? ஹோம்ஸையே இதற்குப் பதிலளிக்க விட்டுவிடுவோம். வன்னியில் இன்று வைத்தியசாலைகள் மரங்களின் கீழும் இடம்மாற்றக் கூடிய கூடாரங்களிலும் ஒளிவிடங்களிலும் நடைபெறுகின்றது. குறைந்த உபகரணங்களுடனும் பொருத்தமற்ற மருந்துகளுடனும் மருத்துவர்கள் மிக அதிக அளவான நோயாளிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதன் சுகாதர அமைச்சினதும் மருந்துகளுக்கான தடைகளினாலேயே பொருத்தமான மருந்துகளுக்கு வன்னியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தை இறப்பு வீதம் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்க்குச் சத்தின்மையினால் குறைப்பிரசவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களில் 12 பேர் பட்டினியால் இறந்துள்ளனர் என உள்ளுர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு இவை முழு மனித குலத்துக்குமே அவமானமாகிறது.

மருந்துகள் சுகப்படுத்தலுக்கான கருவிகள். ஆனால் சிறிலங்காவில் மருந்துகள் உயிர் ஆபத்தை விளைப்பதற்கான கருவிகள். சிறிலங்கா அரசாங்கம் வன்னிக்கு எல்லாவிதங்களிலும் சகல முயற்சிகளையும் எடுத்து வன்னிக்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் செல்லாதவாறு தடுத்து வருகின்றது. சிறிலங்கா தன்னுடைய மருத்துவ நிலையங்களை கடலுக்கு அப்பால் திருகோணமலையில் ஏற்படுத்தி அங்கு தன்னால் குண்டுவீசப்பட்டவர்களுக்குச

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.