Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித் தமிழ் ஈழமே சரியான தீர்வு வேதனைகளில் குமுறுகிறார் பேராயர் தேவசகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தமிழ் ஈழமே சரியான தீர்வு

வேதனைகளில் குமுறுகிறார் பேராயர் தேவசகாயம்

இலங்கையில் போர்த்துக்கீசியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வந்தேறிய போதும், அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் அந்தத் தீர்வை வசப்படுத்திய போதும் அங்கே இரண்டுவிதமான அரசுகள் இருவேறு இனத்தின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.

தமிழனும், சிங்களவனும் தனித்தனி அரசாட்சி செய்த பகுதிகளுக்கு அன்றைக்கு அந்த அன்னியர்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண் டில் அங்கே நுழைந்த ஆங்கிலேய ஏகாதி பத்தியத்தின் திருவிளையாடல்கள்தான் இரண்டுவிதமான அரசை நீக்கி ஒற்றை இன அரசை உருவாக்க வழி வகுத்தது. அந்த நிலை ஆங்கிலேய ஆட்சி முடிவடையும் வரை தொடர்கதையானது.

1948-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 4-ம் நாள் இலங்கை விடுதலை (ஆங்கில ஏகாதி பத்தியத்திலிருந்து) அடைந்த நாள் முதல் தொடர்ந்து தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் அவலம் ஆரம்பமாயிற்று.

1948-ன் இறுதிவாக்கில் சுமார் எட்டு லட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடி யுரிமையை இழந்தார்கள்.

1956 ஜூன் ஐந்தாம் நாள் தனி சிங்க ளவர்கள் மசோதா நிறைவேற்றப்பட்டதுடன் தமிழர்கள் தங்களின் உரிமைகளை இழந்து நிரதாரவான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அன்றைய காலகட்டத்தில் 70% தமிழர்கள் பல்துறை சார்பு பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

"சிறீ" எழுத்துப் போராட்டம்

மோட்டார் வண்டிகளில் பதிவு செய்யும் போது அவற்றின் பதிவு எண்ணுக்கு முன்னால் சிங்கள மொழியில் சிறீ என்று எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தை பண்டாரநாயகாவின் அரசானது (திருத்தச் சட்டம்) கொண்டு வந்தபோது :-

தமிழினம் தங்கள் மொழிக்கும் அத்தகைய உரிமை அளிக்க கோரவே அரசு அதை அலட்சியம் செய்தது.

இதனால் வெடித்த போராட்டம் 1957-ம் வருடத்தில் துவங்கியது. 1958-ல் சிங்களவர் தமிழ் எழுத்தை அழிக்கும் போராட்டத்தை துவங்கி தமிழினத் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

இப்படிச் சிறுகச்சிறுக தமிழினத்தை இலங்கையிலிருந்து விரட்டுவதற்கான - அழித்து ஒழிப்பதற்கான திட்டங்களை அங்கே ஆட்சிக்கு வந்த சிங்கள பவுத்த அரசியல் பிரிவுகள் திட்டமிட்டு சதித்திட்டம் தீட்டி நடைமுறைக்கு கொண்டு வந்து வன் முறைக்கு விதையூன்றினார்கள்.

ஜனாதிபதியின் அதிகாரவன்மை

1977-ல் ஜனாதிபதிக்கான அதிகார வரம்புகள் அதிகரிக்கப்பட்டு, பாராளுமன்ற நடைமுறைகளில் மாற்றம் வகுக்கப்பட்ட போது - ஓர் ஏதேச்சதிகார அரசியல் அமைப்பு முறையை சிங்கள அரசாங்கம் உரு வாக்கியது. இதற்கிடையில் யாழ்ப்பாணத் திலுள்ள தமிழ் எழுத்துக் கருவூலமான நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1958 முதல் 1963 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரியூட்டப்பட்டு பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கியதும் தொடர்ந்து அதனை பலமுறைகளில் பயன்படுத்தி வருவதும் அந்த நாட்டை ஆளும் சிங்கள அரசேயன்றி தமி ழின மக்களல்ல. தமிழினம் தங்களைத் தற் காத்துக் கொள்ள வேறு வழியின்றி ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது

வேதனை

நான் நான்கைந்து முறை இலங் கைக்குச் சென்று திரும்பியிருக்கின்றேன். அப்போதெல்லாம் அங்கே நிலவி வரும் ஓர் அசாதாரணமான சூழலைக் கண்டு திகைப்படைந்துள்ளேன்.

தமிழர்களே கூட தாய்மொழியில் உரையாடப் பயந்து கொண்டு சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ உரையாடும் நிலைமை அங்கே நிலவியிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

அந்த அளவுக்கு கொழும்பு போன்ற சிங்கள ஆதிக்கப் பகுதிகளில் என்ன நடக்குமோ என்னும் பயத்தினை நெஞ்சத்தில் சுமந்தவாறு தமிழனின் வாழ்க்கை நடை பெறும் நிலைமையில் எப்படி ஒட்டுமொத்த தமிழன் அங்கே பாதுகாப்பாக இருக்க முடியும்?

நம்பிக்கையின்மை

மக்களுக்கு அந்த நாட்டு அரசின் மீது நம்பிக்கை பொய்த்துவிட்டது. 1948 முதல் எத்தனை உடன்படிக்கைகள்! அனைத்தும் பெயரளவில் இருந்ததே தவிர நடைமுறைக்கு வந்ததில்லை. பண்டாரநாயகா - செல்வநாயகம் உடன்படிக்கை முதல், ஜெயவர்தனே - ராஜீவ் காந்தி உடன்படிக்கை முடிய என்ன நடந்தன!

உலகை ஏமாற்ற நடைபெற்ற கண் துடைப்பு நாடகங்களாகத்தானே அவை இருந்து வந்திருக்கின்றன. இதனால் எந்த வகையிலாவது தமிழினத்துக்கு நன்மை - அவர்கள் கோரும் சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறதா?

அந்த நாட்டை சிங்கள பவுத்தர்களின் நாடாக முழுமையாக உருவாக்கும் முயற்சியில் பவுத்த துறவிகளும் அவர்களது ஆதரவு அரசும் சேர்ந்து நடத்தும் சூது விளையாட்டில் அந்த மண்ணின் உரிமைக்குரிய தமிழ் இனம் கொத்து கொத்தாகச் செத்து மடியும் கோர நிலைமை தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அங்கே ஆளும் வர்க்கத்தினருக்கு அது எந்த கட்சியாக இருந்தாலும் இனப் பிரச்சினையில் சரியானதோர் தீர்வு என்ற கருத்து தெளிவு கடுகளவும் கிடையாது. பயங்கரவாதத்தை தாங்களே உருவாக்கிவிட்டு பின்பு அதன் பெயரால் அப்பாவி மக்களை குண்டுகள் வீசி கொன்று குவிக்கும் சிங்கள இனவாத அரசின் நிலையைக் கண்டும் காணாதவாறு மவுனம் சாதிக்கிறது நமது இந்திய அரசு.

அந்த அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளுக்கு எதிராக சாத்வீக முறையில் தங்கள் போராட்டத்தைத் துவங்கியவர்கள் தான் தமிழர்கள் என்பது வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். 1983-க்கு பிறகு பதிலுக்கு பதிலென்று தமிழின இளைஞர்கள் சீறியெழுந்தபோது-அதையே காரணமாக்கி போராளிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை அழிக்கும் பெயரால் ஆயிரக் கணக்கில் பொதுமக்களை அழித்தொழிக்கும் செயலை அண்டை நாடுகளின் ஏகோபித்த ஆதரவுடன் அவர்கள் செய்து வருகிறார்கள்.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் நமது இந்தியாவின் பலதரப்பட்ட உதவிகளின் பக்கபலத்தில் தொன்று தொட்டு பிறந்து வாழ்ந்த மண்ணிலிருந்து ஓர் இனம் - நம் தமிழினம் துடைத்து நீக்கப்படும் செயலை வெற்றிகரமாக செய்து கொண்டிருக் கிறது ராஜபக்சேயின் சர்வாதிகார அரசு.

வெட்கக்கேடு

"ஜீரோ சிவிலியன் கேசுவாலிட்டி பாலிசி" என்ற முறையில் ராஜபக்சேயின் அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் புரிவ தாக நமது தமிழகத்திலிருந்து வெளியாகும் சில பத்திரிக்கைகள் எழுதி அந்த அநீதி களுக்கு வால்பிடிக்கும் கேலிக்கூத்தை வெட்கக்கேடு என்றுதான் கூற வேண்டும்.

800 கிலோ முதல் 1 டன் எடை வரை யிலான குண்டுகளை இவர்கள் வீசும் போது அது புலிகளை மட்டும் தேடிப்பார்த்து அழிக் கும் என்பது எத்தனை மடத்தனமான விளக்கம்?

சமாதானத்துக்காக சண்டை போடுகிறோம் என்றும் இவர்கள் கூறிக்கொள் கிறார்கள். உலகில் சமாதானத்தை சண்டை யின் மூலம் நிறுவிய சரித்திரம் இதற்குமுன் எங்காவது உண்டா? ராஜபக்சே, தன்னை ஓர் இரண்டாம் ஹிட்லராக மாற்றிக்கொண்டு தமிழ் இனத்தை ஒழிக்க கங்கணம் கட்டிச் செயல்படுகிறார்.

ஆனால் இதனால் நிச்சயம் நிரந்தர சமாதானம் விளையப்போவதில்லை.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாற்பது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெறும் நமது மத்திய அரசு நினைத் திருந்தால், இலங்கையில் தமிழினம் இந்த இன்னலை இன்றைக்கு அனுபவிக்கும் நிலை வந்திருக்காது. ஏன் இந்த மைய அரசு மெளனச்சாமியாராக நடந்து கொண்டது?

எதிர்ப்பு பிரகடனம்

இனப்படுகொலையை - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டமாக சித்தரித்து இலங்கைக்கு வேண்டிய மட்டும் ஆயுதங் களையும், ஆதரவையும் நல்கியவாறு இங்கே கதையளந்து கொண்டிருக்கும் நமது மைய அரசின் பார்வைகளுக்கு, இங்கே தமிழ் நாட்டில் அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த அளவுக்கு எதிர்ப்பு பிரகடனங்களை ஒவ்வொரு நாளும் தொடர்வதும், தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் உயிர்ப்பலிகளும் எட்டவில்லையா?

தமிழினம் தங்கள் ஆதரவை நல்கி இந்த அரசைத் தாங்க வேண்டும். ஆனால் அந்த இனத்தின் அழிவைத் தடுக்க முயற்சிக்காமல், தமிழினத் துரோகிகளுடன் மறைமுகமாக ஈழத்தமிழனை அழித் தொழிக்கும் செயலுக்கு துணைபோகும் மைய அரசின் மனப்பாங்கை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

இத்தகைய சூழல்களில் எதுவும் செயல்பட இயலாத இழுபறி நிலையில் இன்றைக்கு நாம் இருந்து வரும்போது அதை ஆண்டவரிடம் முறையிடுவது மட்டும் தான் ஒரு ஆறுதல், என்னை சந்திக்க வரும் கிறிஸ்தவ அன்பர்கள் பலரும் இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் மறியலில் ஈடு பட்டோம். மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டோம் என்று கூறக்கேட்கிறேன்.

ஆனால், இதனால் என்ன பயன்? செயலாற்ற வேண்டியவர்களின் காதுகள் செவிடாக இருக்கும்போது எத்தனை சங்குகள் ஊதியும் என்ன ஆகப்போகிறது? நான் பிரார்த்தனை கூட்டத்தில் சொல்லி வருவது உண்டு. "ஹிட்லரின் பாணியில் தமிழினத்தை கொன்று குவிக்கும் ராசபக்சேவின் கரத்தில் படிந்த ரத்தக்கறை நம் இந்தியர்கள் ஒவ் வொருவரின் கரங்களிலும் படிந்து இருக்கிறது. ஏனெனில் ராஜபக்சேவின் இந்த கொடும் செயலுக்கு பக்க பலமாக இருப்பது நம்மை ஆளும் இந்திய அரசு. அதனால் அந்த பாவத்தின் சம்பளம் நமக்கு வந்து சேரும்."

சம உரிமை

இலங்கை இனப்பிரச்சினைக்கு உள்ள படியே ஒரு அரசியல் தீர்வுகாண வேண்டு மென்றால் அந்த அரசியல் தீர்வில் மிக முக்கியமான மூன்று கருத்துக்கள் இடம் பெற வேண்டும்.

முதலாவதாக தமிழின மக்கள் அனை வருக்கும், மலையகத் தமிழர்கள் உட்பட குடி யுரிமை அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக தமிழர்கள் வசிக்கும் இடங்களில் சிங்களவர்களைக் குடியிருத்தும் வழக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

மூன்றாவதாக சிங்களர் - தமிழர் பாகு படின்றி இரு இனத்தவர்க்கும் சம உரிமை அளிக்கப்படும் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் இலங்கையில் இத்தகைய அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் அங்குள்ள அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தாக வேண்டும். இன்றுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தில் அரசாங்கத் தலைமைப் பதவிகளை சிங்கள பெளத்த இனத்துக்கு மட்டும் தாரை வார்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதாவது இனத்தால் சிங்களனாகவோ, மதத்தால் கிருத்துவ, முஸ்லிம், இந்துவாகவோ இருந்தால் சிங்களவனுக்கே அரசுப்பதவிகள் - தலைமை தகுதிகள் மறுக்கப்படுகின்றன.

அப்படியிருக்க சிறுபான்மையினரான தமிழினத்தின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சிங்கள மொழி ஆட்சி மொழியாகவும், சிங்களரின் மதமான பெளத்த மதம் அரசின் அங்கீகார மதமாகவும் அங்கே ஆட்சியாளர்களால் சட்டமியற்றப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருவதே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம். இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் என்றென்றும் இரண்டாந்தர குடிமக்களாகவும் சிங்களர்களுக்கு அடிமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறி அரசின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

தனித் தமிழ் ஈழமே சரியான தீர்வு

இந்த எதேச்சதிகார சட்டங்கள் நீக்கப் பட்டால் மட்டுமே, நாம் முன்னர் குறிப்பிட்ட சம உரிமை அந்தஸ்து தமிழினத்துக்கு வழங்குவதற்கு வழிபிறக்கக் கூடும். ஆனால் இத்தகையதொரு அரசியல் தீர்வுக்கு சிங்கள இனவெறி அரசு எந்த காலத்துக்கும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

இத்தனை நிகழ்வுகள் நடந்த பின்னும் சிங்கள மக்களுடன் தமிழினத்தவர் ஒன்று கலந்து சகோதரத்துவத்துடன் வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷ யம். மனதுள் காழ்ப்புணர்ச்சியை வைத்துக் கொண்டு முகமலர நடிக்கும் அந்த வாழ்க்கை இருபாலருக்கும் சரியாக அமையாது. எனவே இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்காக தனித்தமிழ் ஈழம் மலர்வது மட்டும்தான் சரியான - தீர்வு என்று நான் கருதுகிறேன்.

நன்றி : மாலை முரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.