Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான் தாக்குதல்கள்: பல பொதுமக்கள் பலி; பட்டினியால் 12 பேர் பலி

Featured Replies

முள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான் தாக்குதல்கள்: பல பொதுமக்கள் பலி; பட்டினியால் 12 பேர் பலி

[ திங்கட்கிழமை, 04 மே 2009, 03:25.13 PM GMT +05:30 ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு தொடக்கம் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவித்துள்ளதாவது:-

சிறிலங்கா தரைப்படையினர் ஆட்லறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பீரங்கி சூட்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். அத்துடன் சிறிலங்கா கடற்படையினரும் மக்கள் குடியிருப்புக்கள் மீது செறிவான ரொக்கட் ஆட்லறித் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை 4 தடவைகள் 8 குண்டுகள் வீசப்பட்டுள்ளதுடன் 16 ரொக்கட்டுக்களும் ஏவப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இன்று அதிகாலை 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 25 உடலங்கள் இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை தொடக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் காயமடைந்த நிலையில் 56 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா வான்படையினரின் குண்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர். வான்படையினரின் தாக்குதல்களில் மக்கள் தங்கியிருந்த 12 தற்காலிக கூடாரங்கள் அழிந்துள்ளன.

சிறிலங்கா வான்படையினர் ஏவிய பரா வெளிச்சக்குண்டு தற்காலிக கூடாரம் ஒன்றின்மீது வீழ்ந்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.

கூடாரத்துக்குள் இருந்த 5 பொதுமக்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பட்டினியால் 12 தமிழர்கள் பலி

இது இவ்வாறிருக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதாரத் தடையினால் ஏற்பட்ட பட்டினி அவலத்தினால் கடந்த 7 நாட்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டினியால் மயக்கமடைந்து நட்டாங்கண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள

காயப்பட்ட மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து மீதும் எரிகுண்டுத் தாக்குதல்

பிரசுரித்த திகதி : 04 May 2009

இன்று மதியம் முதல் முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் மீது இராணுவத்தினர் கடும் எறிகணை மற்றும் விமானத்தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஏவிய எரிகுண்டு எறிகணை இந்தப்பேரூந்துக்கு அருகில் வீழ்ந்து வெடித்ததால் அதில் ஏற்றப்பட்டிருந்த 3 பயணிகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன்இ மீதம் உள்ள நோயாளர்கள் சிறு எரிகாயங்களுடன் தப்பியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரூந்து ஓட்டுனரையும் காணவில்லை என பிறிதொருதகவல் தெரிவிக்கின்றது. இன்றைய அகோரத் தாக்குதலில் இறந்த மக்களின் எண்ணிக்கை சரிவர தெரியவில்லை எனவும்இ தற்காலிக வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

http://athirvu.com/target_news.php?subacti...amp;ucat=3&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.