Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லையாம் - கூறுகிறார் மன்மோகன்சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் கனரக ஆயுதங்களை அந்நாட்டுப் படைகள் பயன்படுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் இராணுவத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமையும் இந்த உயிரிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே இந்திய அரசின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த சண்டை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

கடந்த காலம் முதல் இப்போது வரை, இந்தியாவின் நிலை என்னவென்றால், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அமைதியான, கெளரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். இலங்கையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி அங்கு கனரக ஆயுதங்களை தற்போது பயன்படுத்தவில்லை.

இலங்கைப் பிரச்சினைக்கு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்ததை செய்யும். இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ இந்தியா உதவி செய்யும்.

இலங்கைத் தமிழர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் உள்ளது. இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று ஊகமாகத்தான் கூற முடியும். நாம் ஒரு இறையாண்மை மிக்க நாட்டுடன் இப்பிரச்சினை குறித்து தொடர்பு கொண்டிருக்கிறோம். எனவே இறையாண்மை மிக்க ஒரு நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பி நாம் எதையாவது சாதிக்க முடியும் என்று நினைத்தால் அது கடினம், எளிதான ஒன்றல்ல.

சர்வதேச சட்டம் என்று ஒன்று உள்ளது. எனவே இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சில வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இலங்கைத் தமிழர் துயரம் குறித்து காங்கிரஸ் கவலை கொள்ளாமல் உள்ளதாக கூறுவது தவறு. கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இனப்பிரச்சினை குறித்த கவலையுடன்தான் உள்ளது. தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுதொடர்பாக சிறிலங்கா அதிபருடனும், பிரதமருடனும் நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியபடிதான் இருந்தேன். தமிழ் மக்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. அவர்களது குறைகளுக்கு காரணம் உள்ளது.

விடுதலைப் புலிகள் விடயத்தில், அரசைப் பொறுத்தவரை அது ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். தீவிரவாத அமைப்பாகும். இதுதான் இந்திய அரசின் கொள்கையாகும் என்றார் மன்மோகன் சிங்.

சிறிலங்கா அரசு மிகக் கடுமையாக தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களை பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு நாட்டின் பிரதமரே பொய்யான தகவல்களை வெளியி்ட்டிருப்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார். இந்த நிலையில், அவருக்கு தமது எதிர்ப்பைக் காட்ட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முன்னதாகவே தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்னை வந்தார். ஆனால் அவர் பிரசாரக் கூட்டம் எதிலும் பங்கேற்கவில்லை.

செய்தியாளர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்தார்.

பிரதமரிடம் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், போர் நிறுத்தம் குறித்தும், தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.