Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்கிறது - அமெரிக்கப் பேராசிரியர் பாய்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திட்டமிடப்பட்ட தாக்குதல், உணவுத் தடை, அதனால் வரக் கூடிய நோய்கள், முகாம்களில் அளவுக்கதிகமான மக்கள் முடக்கி வைக்கப்படல், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் பற்றாக்குறை என்பவற்றால, ஏற்படக் கூடிய உயிரிழப்புக்கள் என்பவற்றின் மூலம் சிறிலங்கா அரசு திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையை மேற்கொள்கின்றது என அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் தெரிவித்தார்.

‘இலங்தை தமிழர் புனர்வாழ்வு’ என்ற தலைப்பில் சென்னையில் பன்னாட்டுத் தமிழர் நடுவம் நடத்திய ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டார். ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட 1948ஆம் ஆண்டின் இனப் படுகொலைக்கு எதிரான உடன்படிக்கை விதி 2இன் கீழ் சிறிலங்கா அரசு தனது முப்படைகளையும் கொண்டு நடத்தியிருக்கும் படுகொலைகள் , சந்தேகத்துக்கிடமில்லாத திட்டமிட்ட இனப் படுகொலையே. இதே காரணங்களின் அடிப்படையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனப் பேராசிரியர் பாய்ல் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொஸ்னியாவில் செர்பிய படைகள் நடத்திய தாக்குதலில் 8,000 அல்பேர்னிய இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளை ஐ.நா.வும் மேற்கத்திய நாடுகளும் இனப் படுகொலை என ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படியாயின் கடந்த ஜனவரியில் இருந்து 5 மாதத்தில் அதனைவிடவும் ஆறு மடங்கு அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது சிறிலங்கா அரசு. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்களில், 13,000 பேருக்கு மேல் காணாமல் போயிருப்பது சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப் படுகொலை தொடர்வதையே காட்டுகிறது. அப்படியிருந்தும் இதனை ஐ.நா.வும், மேற்கத்திய நாடுகளும், இனப் படுகொலை என்று கூறாதது ஏன்? எனவும் பேராசிரியர் கேள்வி எழுப்பினர்.

அவர் தொடர்ந்து பேசுகையில். சுமார் மூன்று இலட்சம் மக்களை அடிப்படைத் தேவைகளின்றி, முகாம்களில் அடைத்து வைத்திருப்பது அவர்களையும் அழித்துவிட வேண்டும் என்றே ஐயுறவு கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இன வேற்றுமைக்கும், இனப்படுகொலைக்கும் உட்படுத்தபட்டுவரும் தமிழர்கள் பிரிந்து சென்று, தங்களுக்கான தனி நாடு ஒன்றினை அமைத்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமைக்குத் தகுதியானவர்களே எனவும், ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ள சுய நிர்ணய உரிமை தொடர்பான ஒப்புதல் உடன்படிக்கையில் சிறிலங்காவும், ஒப்பமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.

அமரர் கி.ஆ.பெ. விசுவநாதனின் மகள் மணிமேகலை கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, பன்னாட்டுத் தமிழ் நடுவத்தின் இந்தியக் கிளைத் தலைவரும், பிரபல கர்நாடக இசைக் கலைஞருமாகிய சுதா ரகுநாதன் ஈழ தேசிய கீதம் பாடித் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமெரிக்காவின் சட்ட அறிஞரான புரூஸ் பெய்னும், மற்றும் பல்வேறு அறிஞர்களும் தலைவர்களும, கலந்து கொண்டனர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...merica-genocide

சிறிலங்கா தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்கிறது - அமெரிக்கப் பேராசிரியர் பாய்ஸ், ஒபாமா, போப், மடொனா,சிவபெருமான்,..............

ஓஓஓஓஓஓஓஓஓஓ....... எண்டு கத்தவேண்டும் போல இருக்கு...... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.