Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது கைகளில் இரத்தம் தோய்ந்துள்ளது: பேராசிரியர் சூரியநாராயணன்

Featured Replies

எமது கைகளில் இரத்தம் தோய்ந்துள்ளது: பேராசிரியர் சூரியநாராயணன்

எமது கைகள் இரத்தம் தோய்ந்துள்ளதாக” இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் நிலையம், சென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்திய நிகழ்வின் போது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளித்தது. இந்தநிலையில் இது குறித்து ஐ.நா. வாக்களிப்பின்போது இந்தியா வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டும் என சூரியநாராயணன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் எவ்வித தெளிவுத்தன்மையும் இல்லை. இலங்கை மாத்திரமே தமது சொந்த மக்கள் மீதே குண்டுத்தாக்குதல்களை நடத்தும் நாடாக விளங்குகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்திருந்த செவ்வியொன்றில் இந்தியாவின் யுத்தம் ஒன்றிலேயே தாம் ஈடுபட்டிருந்தாக கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய சூரியநாராயணனன், இது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு சான்றாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி 500 கோடி ரூபாய்களை இலங்கைக்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து இதற்காக அமைக்கப்பட்ட 20 பேரைக்கொண்ட குழு இந்த பணத்தை 19 சிங்களவர்கள் 1 முஸ்லிம் ஆகியோருக்கு செலவிட பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியில் எவ்வித தொகையும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என சூரியநாராயணன் சுட்டிகாட்டியுள்ளார்.

தமிழர் நிலங்கள் இலங்கை படையினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில் இலங்கையில் 13 வது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் மாத்திரமே இனங்களுக்கிடையிலான இணக்கம் ஒன்றை ஏற்படுத்தக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்ட அதிகார பகிர்வின் போது 2000 ம் ஆண்டின் பரிந்துரைகளும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா இலங்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அமெரிக்காவின் சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல் உரையாற்றிய போது, இலங்கைத்தமிழர்கள் ஒருநாட்டுக்கான அங்கீகாரத்தை கோரும் போது அதற்கு இந்தியா எதிர்ப்பை காட்ட கூடாதென கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற்று தனியான நாடொன்றை அமைக்கும் போது இந்தியாவில் உள்ள தமிழர்கள் அதனை பின்பற்றுவார்கள் என்பது பொய்யான வாதம் என போயில் குறிப்பிட்டார்.

http://www.nerudal.com/nerudal.8111.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.