Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் என்.சில்வாவின் கரிசனைகள்...--வ.திருநாவுக்கரசு

Featured Replies

கடந்த3 ஆம் திகதி ஆயுதப்படையினரைக் கௌரவிக்குமுகமாக காலி முகத்திடலில் நடத்தப்பட்ட அணிவகுப்பின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில், "30 வருட காலமாக மிகமூர்க்கத்தனமானதும் மிகப்பலம்

வாய்ந்ததுமெனக் கருதப்பட்ட பயங்கரவாதப் படையணி 3 வருட காலத்துக்குள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது' எனவும் இதற்காக ஒரு உலக வல்லரசின் இராணுவம் தேவைப்படுமென உலகத்தில் பலரும் எமது நாட்டில் சில பிரிவினரும் எண்ணியிருந்தனர்.

ஏன் ஐ.நா. படைகளை ஈடுபடுத்துவது கூட அவசியமெனவும் வேறுபலர் எண்ணினர் என்றும் குறிப்பிட்டிருந்தார். சிறு காலமாக அல்ல, 30 வருட நீண்டநெடுங்காலமாக பயங்கரவாதிகள் எமது நாட்டை தமது பிடியில் வைத்திருந்தனர். முழுநாட்டையுமே அடக்கி வைத்திருப்பதற்கான பயங்கரமான திட்டங்கள் அவர்களிடம் இருந்தன எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பல நாடுகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட யுத்தம்

உண்மையில் நடந்து முடிந்த யுத்தமானது இலங்கை அரசாங்கத்தினால் மட்டும் நடத்தப்பட்டதல்ல. இந்திய அரசின் முதன்மைப் பங்களிப்புடன் பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு கை கொடுத்ததை யாரும் அறியாமலிருக்க முடியாது. இந்திய அரசைப் பொறுத்தவரை ஆயுதங்கள் மட்டுமல்லாமல், புலனாய்வு மற்றும் ஆளணி உதவிகளையும் வழங்கியது உலகறிந்த விடயமாகும். மேலும் சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் உக்ரேயின் போன்ற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு அளித்த என்.டி.ரீ.வி. "வாக் த ரோக்' (Walk the Talk) பேட்டியில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரித்தானியா, ஸ்லோவாக்கியா , பல்கேரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்தும் இலங்கை அரசாங்கம் பெருமளவு ஆயுதங்களை பெற்றுக் கொண்டதாக அண்மையில் "லண்டன் ரைம்ஸ்" இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும் காலத்துக்குக் காலம் இராணுவ உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனிடையில் ஆகக்கூடுதலான ஆயுதங்களை தாமே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வழங்கியதாக பாகிஸ்தான் அரசாங்கம் சென்ற மாதம் பெருமிதப்பட்டிருந்தது. உண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்திலும் அன்றைய பேர்வஸ் முஷாரப் அரசாங்கம் பல்குழல் துப்பாக்கிகள் அடங்கலாக ஏராளமான ஆயுதங்களை வழங்கியிருந்தது.

ஆளணிப்பலம்

ஆளணிபலத்தைப் பொறுத்தவரை ஆள்வீத (Percapita) அளவுகோலின் பிரகாரம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் காட்டிலும் அதிகளவு எண்ணிக்கையைக் கொண்டதாகவே இலங்கையின் படைபலம் காணப்படுகிறது. உதாரணமாக, 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் ஆயுதப்படைகள் தொகை 13 இலட்சமாயிருக்கும் போது 2 கோடி மக்கள் கொண்ட இலங்கையில் 2 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் என குப்தா ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டிய போது, இத்தொகையினை இலங்கை அரசாங்கம் அதிகரிக்க வேண்டியிருந்ததென ஜனாதிபதி பதிலளித்ததோடு, இத்தொகை மேலும் அதிகரிக்கப்படமாட்டாதெனவும் கூறிவைத்தார். எவ்வாறாயினும் மேலும் 1 இலட்சம் பேரை இராணுவத்திற்குத் திரட்டப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சென்ற மாதம் தெரிவித்திருந்தது ஞாபகம்.

ஆக, ஆள்வீத அடிப்படையில் இலங்கைப் படைப்பலம் இந்தியாவைவிட 100 மடங்கு அதிகமாயுள்ளதே, அது தேவைப்படாதே என குப்தா கூறியபோது, "அப்படிக் கூற வேண்டாம். அவர்களை ஏனைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம்' என ஜனாதிபதி பதிலளித்தார்.

அரசியல் தீர்வு

அரசியல் தீர்வு தொடர்பாக குறிப்பிடுகையில், உத்தேசிக்கப்படும் தீர்வுத்திட்டமானது 13ஆவது திருத்தத்திலும் கூடுதலானதாயிருக்குமென குப்தாவிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். இதனை முன்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அது நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இன்றைய நிலைதான் என்ன? ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ), பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் இதற்குக் கூட எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன. அவ்வாறாகவே ஜே.வி.பி.யும் கங்கணம் கட்டி நிற்கிறது. சென்ற 4 ஆம் திகதி நுகேகொடையில் "கொட்டி பறாதாய்' (புலிகள் தோல்வி), "றட்ட தினவய்' (நாடுவெற்றி) என்ற சுலோகத்தினை முன்வைத்து நடத்திய கொண்டாட்டக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கு இடமிருக்க முடியாது என அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க விளாசியுள்ளார்.

எனவேதான் ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து 13ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்துவது கேள்விக்குறியாயுள்ளது எனலாம். இதனிடையில் சிறுபான்மையினர் என்றொன்றில்லை என குப்தாவிற்கு வழங்கிய செவ்வியின் போது மீண்டுமொரு தடவை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார். அதே நேரத்தில் பெரும்பான்மை என்றொன்றில்லையென அவர் கூறவில்லை. "சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமாயிருந்தது' பற்றி குப்தா கேள்வி எழுப்பிய போது "நான் அதனைக் கூறமாட்டேன். சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர்' என ஜனாதிபதி கூறியதோடு, "அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கின்றார்கள், (அது) அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாய் இருப்பதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டை நேசிப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்.

நாட்டை நேசிப்பவர்கள் மற்றும் நாட்டை நேசிக்காதவர்கள் என இரு பிரிவினரே உள்ளனர். நாட்டை நேசிக்காதவர்கள் சிறு எண்ணிக்கையினர் என்றெல்லாம் ஜனாதிபதி விளக்கியுள்ளார். உண்மையில் சிங்கள மேலாதிக்கவாதிகள், பேரினவாதிகள், அல்லது கடும்போக்காளர்கள் தான் நாட்டை நேசிக்காதவர்கள். அவர்கள் உண்மையில் சிறு எண்ணிக்கையினர். 2000 ஆகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு யோசனைகளை முன்வைத்து ஆற்றிய உரையின் போது. ""நான் மீண்டும், மீண்டும், மீண்டும் கூறவிரும்புவது இது தான்: அதாவது, மகாசங்கத்தினர் அடங்கலாக எமது மக்களில் ஒருசிறு பிரிவினர் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தவறான எண்ணங்கொண்டிருக்கின்றனர்' என்று கூறினார். எனவே, நாட்டை நேசிக்காத பல அதிதீவிர சிங்கள தேசிய வாத சக்திகள் இன்றைய அரசாங்கத்திற்குள்ளேயே காணப்படுகின்றன. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ இனங்கண்டு கொள்வாராயின் அத்தகைய சக்திகளை அவர் எவ்வாறு கையாளப்போகின்றார் என்பது முக்கியமான கேள்வியாகும். இவர்களுக்கு வளைந்து கொடுக்காமல் விட்டால் மட்டுமே நாட்டை உண்மையான வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லலாம்.

வன்னிப்பகுதி தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களுக்குச் சென்று பார்த்த போது அங்கே அவர்கள் படும் துன்ப துயரங்களையும் வேதனைகளையும் தன்னால் வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை என (சென்ற வாரம் ஓய்வு பெற்றுள்ள) முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மாரவிலவில் நடைபெற்ற நீதிமன்ற திறப்பு விழா வைபவத்தின் போது கூறியுள்ளார். மனித அவலம் கண்டு மனம் வெதும்பிய ஒருவராகவே சில்வா தன்னை அடையாளப்படுத்தி அதிகாரிகள் தண்டித்தாலும் அதனைப் பகிரங்கமாகக் கூறுவதாகத் தெரிவித்தார்.

வன்னி மக்கள் படும் அவலத்தினை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏலவே தெரிவித்திருந்தார். இவ்வாறான கொடூரமான காட்சியைத் தான் தனது நீண்டகால சர்வதேச அனுபவத்தில் கண்டதில்லையென மூன் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

நிற்க, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டரீதியாக தமிழருக்குப்பாதுகாப்பு வழங்குவதற்குப் பொருத்தமான சட்டம் மற்றும் சமூக துறைகளினூடாக பொறிமுறைகள் ஏற்படுத்தப்படாவிட்டால் மீண்டும் கிளர்ச்சி உண்டாகுவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும், அது கண்டிப்பாக ஆயுதக் கிளர்ச்சியாகத்தான் அமையும் என்பதற்கில்லை எனவும் சரத் என் சில்வா தனதுரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார். இவர் தனது பதவிக்காலத்தில் வழங்கிய சில தீர்ப்புகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தைப் பொறுத்தவரை பாதகமானவையாக விளங்கின. அதில் ஒன்று வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட விடயமாகும். வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. மற்றும் ஜே.எச்.யு. தாக்கல் செய்த வழக்கின் மீதே சரத் என் சில்வா தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பு அன்றைய சில மூத்த அமைச்சர்களையே மனம் கோண வைத்தது. காலம் சென்ற ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, சரத் அமுனுகம, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் அது தமிழரை மேலும் அந்நியப்படுத்தி விரக்தியின் விளிம்பிற்கு இட்டுச் செல்லவல்லது என கவலை தெரிவித்தனர். வடக்கு, கிழக்கு இணைப்பானது சட்டத்தின் பிரகாரம் செய்யப்படவில்லை என்றவாறாக அது ஒரு சட்டரீதியான தவறே ஒழிய, அரசியல் ரீதியான பிரச்சினையாக அன்று காணப்படவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சினையை நிறைவேற்றுவதன் மூலம் இணைப்பை சட்டரீதியாக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. அதனை அன்றைய அரசாங்கமும் புறந்தள்ளி விட்டது.

இன்று வேடிக்கை என்னவென்றால் வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு "சிங்கள பாரம்பரியமே' காரணம் என திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வைபவமொன்றில் சரத் என் சில்வா அப்பட்டமாகக் கூறியுள்ளதாகும். இனவாத அடிப்படையிலேயே அவர் அத்தீர்ப்பினை வழங்கியிருந்தார் என்பதற்கு வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. இவர் தான் தமிழருக்காக குறிப்பாக இன்று இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்தும் தமிழருக்காக பரிந்து பேசுகிறார். ஒருவர் உண்மையான நீதிபதி என்றால் அவர் எக்காலத்திலும் இன,மத,பால் மற்றும் பிரதேச பேதங்களுக்கு அப்பாற்பட்டவராய் இருத்தல் வேண்டும்.

அடுத்ததாக 2004 கடல்கோளுக்குப் பின்னரான முகாமைத்துவ கட்டமைப்பு ((P-Toms) இரத்துச் செய்யப்படவேண்டுமென ஜே.வி.பி.தரப்பினர் தாக்கல் செய்த வழக்குமீது சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிடலாம். அன்று அது தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் கடல்கோள் அழிவு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை சம்பந்தமானதாகும். அது இரத்துச் செய்யப்படாமலிருந்தால் சமாதான முயற்சிகளுக்கும் அது ஒரு உந்துசக்தியாக அமைந்திருக்கும். அதற்கும் சரத் என் சில்வாவின் தீர்ப்புத்தான் ஆப்புவைத்தது. எனவே, நீதித்துறை நிதானம் தவறினால் அது பாதகமான சமூக, அரசியல் விளைவுகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதற்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

முக்கிய குறிப்பு: அதிர்வு, தமிழ்வின், தமிழ்ஸ்கைநியூஸ் ஆகிய இணையத்தளங்களினது செய்திகளை கருத்துக்களத்தில் இணைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் ஆக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.