Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் தாக்குதல் - கச்சதீவில் இலங்கை கடற்படைத்தளம், பிரமருக்கு கலைஞர் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையிர் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வது குறித்தும், கச்சதீவில் இலங்கை இராணுவ மையம் அமைப்பது குறித்தும், கவனத்திற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விரு விடயங்கள் குறித்தும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கடிதத்தில்:

இந்திய மத்திய அரசிடம் தமிழ்நாடு மாநில அரசு சமர்ப்பித் முறைப்பாடுகளினடிப்படையில், இந்திய அரசு தெரிவித்த முறைப்பாட்டிற்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்துப் பதிலளித்த நிலையிலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது , தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநில அரசின் சார்பில் உங்களின் கனிவான பார்வைக்கு சிலவிடயங்களைத் தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஆண்டுதோறும் குறிப்பிட்டு சில கால கட்டங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இயந்திரப்படகுகளுக்கும், சாதாரண படகுகளுக்கும் மீன் பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்திருந்த தடையானது 2009-ம் ஆண்டு மே மாதம் 29-ந் திகதியுடன் முடிவடைந்தது. அந்த காலகட்டங்களில் இலங்கையில் உள்ள அரசியல் நிலைமை மாறுதலடைந்துள்ளது என்பதால், எவ்வித சிரமமுமின்றி அமைதியாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை சீர் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில், இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தமிழக அப்பாவி மீனவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தும், நடுக்கடலில் வழி மறித்து அவர்களை கடுமையாக தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர். இம்மாதம் 9-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றி, அதிலிருந்த 9 மீனவர்களை பிடித்துச் சென்று, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அங்கே அவர்கள் `ரிமாண்டில்' வைக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக தூதரக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அண்மையில், இம்மாதம் 15-ந் தேதி, ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவிற்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளையும், பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றிய பின் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/660 என்ற படகு, கடுமையாக தாக்கப்பட்டு மோசமாக சேதாரப்படுத் தப்பட்டு, அதில் இருந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மூழ்கடிக்கப்பட்டது. இன்னொரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/573 என்ற படகும் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவங்களின் போது, அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இந்த சம்பவங்கள், உண்மையிலேயே ராமேசுவரம் பகுதி மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

இது தவிர, இலங்கை ராணுவத்தினர் கச்சத்தீவு பகுதியில் ராணுவ மையத்தையும், கண்காணிப்பு கோபுரத்தையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளி வந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை மாநில அரசுக்கும்,

அந்த இராணுவமையைத்தில் இருந்து பார்த்தால் தமிழக முதல்வர் யாருடன் மையலில் இருக்கிரார் என்று தெரிந்துவிடுமாம் ,கவனம் முதல்வரே பிறகு மகிந்த உம்மை சொனியாவிடம் போட்டு க்கொடுத்துவிடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.