Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை ஜனநாயக ரீதியிலும் தோற்கடித்ததை காட்டுவதே அரசு தேர்தல் நடத்துவதன் நோக்கம்--யாழ்நகரில் மாவை வேண்டுகோள்

Featured Replies

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வது தான் தீர்வாக அமையும் என்பதை நாங்கள் சர்வதேசத்திற்குச் சொல்லவிருக்கின்றோம்.

இதற்காக எமது மக்கள் தற்போதைய துன்பங்களிலிருந்து விடுபடும் வரை இராஜதந்திர ரீதியாகச் செயற்படவுள்ளோம். அரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் மீண்டும் மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக

வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைத்தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரப் பொதுக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நல்லூர் முத்திசைச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மு.றெமிடீயஸ் உட்பட எனைய வேட்பாளர்களும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டர்.

இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி தொடர்ந்து உரையாற்றுகையில்;

நாங்கள் தமிழ்த் தேசிய இனம் என்ற வகையில் எங்களை நாங்களே ஆளவேண்டும். இந்த உரிமை எங்களிடமே இருக்கிறது. இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே 2004 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் எங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கினார்கள்.

தமிழ் மக்களைப் போரில் வென்று விட்டோம் என்று கூறுகின்ற அரசாங்கம், ஜனநாயக ரீதியாகவும் அவர்களை தோற்கடித்து விட்டோம் என்பதைக் கூறுவதற்காகவே தற்போதைய தேர்தலை நடத்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

வன்னியில் யுத்தம் இடம்பெற்ற போது அங்கே 70 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்களென்று கூறிய அரசாங்கம் இன்று முகாம்களில் 3 இலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் உண்மை உலகிற்கு தெரியவந்தது.

கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற மக்களை விடுவித்து உடனடியாக மீளக்குடியமர்த்துமாறு ஐ.நா.வும் சர்வதேசமும் கூறுகின்றது. ஆனால் இந்த அரசாங்கம் இதுவரை அதனை செய்யவில்லை.

முகாம்களில் அடைத்து வைக்கப்படுகின்ற 3 இலட்சத்து 15 ஆயிரம் மக்களும் தினந்தினம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்தமைக்காக அரசு வெற்றி விழாக் கொண்டாடியுள்ளது.

இந்த நிலையிலேயே அரசாங்கம் யாழ்.மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளது. இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சொந்தக் கட்சியில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கே போனர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்கிறார். ஆனால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் போன்றோருக்கு என்ன நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவார்கள்.

தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, 18 ஆண்டுகளாக இணைந்திருந்த வடக்கு கிழக்கை அரசாங்கம் உயர் நீதிமன்றின் அனுசரணையுடன் அதனைப் பிரித்த போதும், வன்னியில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் இந்த அமைச்சர் எதுவுமே பேசவில்லை.

யாழ்.குடாநாட்டிலுள்ள பட்டதாரிகளுக்கு 6 மாத காலத்தில் நியமனம் வழங்கப்படுமென்று டக்ளஸ் கூறுகிறார். ஆனால் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாக கூறப்படுகின்ற கிழக்கு மாகாணத்தில் கூட பட்டதாரிகள் நியமனம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதம் இருகிறார்கள். தமிழ் மக்கள் தங்கள் இலட்சியங்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் மிகப் பெரும் தியாகம் செய்தவர்கள். கடந்த 30 வருட காலமாக நடந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள். இவை அனைத்துமே வீணாகிப் போக விடக்கூடாது. எமது இறைமையை மீட்டி சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. உரையாற்றுகையில்;

யாழ்ப்பாணத்திற்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிப்பது யாழ்ப்பாணத்தவர்களுக்குத்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.