Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயரங்களில் இருந்து இலங்கைத் தமிழர்கள் விடுபட நிரந்தரத் தீர்வு என்ன?---சீமான் அதிரடிப் பேட்டி

Featured Replies

இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஈடுபட்டுவந்தன. இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஒரு தேக்கநிலை.

அந்த நேரத்தில்தான் எம்.எஸ்.சுவாமிநாதன் ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டத்தின் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று போராட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்தது சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம். அடுத்த போராட்டத்திற்குத் தயாராக இருந்த அவரை வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

“எம்.எஸ்.சுவாமிநாதனை இலங்கை ‘வடக்கில் வசந்தம்’ என்ற திட்டத்தில் பங்கேற்காமல் தடுத்தது நாம் தமிழர் இயக்கம். நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், அவரது உதவியாளர்கள் எங்களைச் சந்தித்து எம்.எஸ்.சுவாமிநாதன் நிலையைத் தெரிவித்தனர்.

நம் சொந்தங்களின் ரத்தத்தை இலங்கையில் உறிஞ்சிய சிங்களன், இப்போது நம் மின்சாரத்தையும் உறிஞ்சப்போகிறான். மதுரையில் இருந்து இலங்கையில் சம்பூர் பகுதி வரை நிலத்துக்கடியிலும், கடலுக்கடியிலும் மின்சாரம் கொண்டு செல்ல இருக்கின்றனர். இதற்காக பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் இருட்டில் மூழ்க வேண்டியதுதான்.

இந்திய அரசுதான் இப்படி என்றால் பெரியார் மணியம்மை கல்லூரியின் நிலை பதற வைக்கிறது. இலங்கையின் சி.ஐ.டி.எஸ்.ஸுடன் 90 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதில் ஒன்றுதான் இக்கல்லூரி. ஐயா வீரமணியின் மேற்பார்வையிலுள்ள இந்தக் கல்வி நிறுவனம், இந்த ஒப்பந்தத்தில் இருந்து உடனே விலகவேண்டும். அவருக்குத் தெரியாமல் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். தெரிந்தும் ரத்து செய்ய மறுத்தால், அது தமிழர்களுக்குச் செய்யும் துரோகச் செயல். அதை மன்னிக்க முடியாது” என்றார் ஆவேசமாக.

அந்த ஆவேசம் குறையாமல் இருந்த சீமானிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

நாம் தமிழர் இயக்கத்தைத் திடீரென்று தொடங்க என்ன காரணம்? தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாததாலா?

என் இனத்திற்கும், மொழிக்கும் மண்ணுக்கும் மக்களுக்குமான மிகப்பெரிய அரசியல் இயக்கம் தேவை என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஓர் இயக்கம் அவசியம் தேவை. அதற்காகவே இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறேன்.

பல கட்சிகள் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு, கால ஓட்டத்தில் ஆட்சி அதிகாரம், வாக்கு வங்கி என்று மாறிவிடுகிறது. நீங்களும் அதுபோல மாறமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அதற்கு வாய்ப்பில்லை. அவ்வளவுதான். இப்படித்தான் நீங்க வருவீங்கன்னு சொல்ல முடியாது. நான் உறுதியானவன். கடைசிவரை இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் என்னை நான் அர்ப்பணிப்பேன்.

இப்படி நீங்க போவீங்களா, அப்படி நீங்க போவீங்களான்னு எனக்கு நீங்க ஜோதிடம் சொல்ல வேண்டியதில்லை. எதுவாக இருந்தாலும் நான் உறுதியாகவே இருப்பேன். நான் மாறமாட்டேன். நான் ரொம்ப உறுதியானவன். உண்மையில் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். நான் தந்தை பெரியாரின் சிந்தனையில் வளர்ந்தவன். அண்ணன் பிரபாகரனின் தம்பி.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர் பத்மநாதன் (கே.பி.) கைது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகிறதே?

பத்மநாதன் கைது, அமைப்பின் செயல்பாட்டை நிச்சயம் பாதிக்கும். பாலசிங்கம் மறைந்தபோது அவரது இடத்தை தமிழ்ச்செல்வன் நிரப்பினார். அதுபோல, பத்மநாதன் இடத்தை இன்னொருவர் நிரப்புவார்.

இதில் இந்தியாவின் முறையீடுதான் வேடிக்கை. ராஜீவ் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையிலும், வழக்கின் தீர்ப்பிலும் பத்மநாதன் பெயர் இடம்பெறவில்லை. இப்போது சிவராஜனுக்கு அவர்தான் ஆர்.டி.எக்ஸ்.

வெடிமருந்தை சப்ளை செய்ததாகச் சொல்கிறார்கள். காரணம், அவர்களுக்கு பத்மநாதனை பிடிக்கவில்லை. அவர்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையா என் மீது மட்டுமல்ல, உங்கள் மீதும் வழக்கு பதிவு செய்வார்கள்.

துயரங்களில் இருந்து இலங்கைத் தமிழர்கள் விடுபட நிரந்தரத் தீர்வு என்ன?

தந்தை செல்வா தலைமையேற்று நடத்திய வட்டுக்கோட்டை மாநாட்டு தனிநாடு தீர்மானம்தான் ஒரே தீர்வு. சிங்களன் நமக்கு அதிகார பகிர்வு, சம உரிமைகளை தரமாட்டான். அவ்வாறு தந்திருந்தால் 60 ஆண்டுகள் போராட்டம், இத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களை மறந்துவிட்டதே? நீங்கள் ஆதரித்த அ.தி.மு.க.கூட மௌனமாக இருந்து வருகிறதே?

“மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகளால் மட்டுமே அனைத்து பிரச்னைகளையும் முன்னெடுக்க முடியும். ஆனால் வாக்கை குறிவைத்து கட்சி நடத்துகின்ற அரசியல் கட்சிகள் ( ஈழப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசாமல் இருந்தது)இதைத்தான் செய்யும்.

தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட 16 தொகுதியில் 11 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்ற எங்கள் நிலை தானாகவே அ.தி.மு.க.விற்கு ஆதரவாக மாறிவிட்டது” என்றபடியே பேட்டியை முடித்தார் சீமான்.

http://appaa.com/index.php?option=com_cont...4&Itemid=57

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.