Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகா சொன்னது சரிதானா? சொல்… சொல்… கலைஞரே! சொல்!: வலம்புரி நாளிதழ்

தமிழக எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? ஒரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்‘ என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது. இவ்வாறு யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பயுள்ளது.

வலம்புரியின் இன்றைய இதழில் இவ்வாறு வரையப்பட்டுள்ளது,

தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவிலுள்ள தடுப்பு முகாங்களுக்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்த்தனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேசினர்.சந்தித்து பேசினர் என்று சொல்வதைத் தவிர்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதைக் கேட்டு… சில சமயங்களில் சிரித்து… இன்னும் சில இடங்களில் சமாளிப்புக்காக அசட்டுச் சிரிப்புடன் சந்திப்பை முடித்துக்கொண்டனர்.

அதன் பின்னர் தமிழக அரசியலின் மரபுப்படி எல்லோரும் கலைஞரைச் சந்தித்து நமஸ்காரம் செய்து புகைப்படம் அடுத்துக்கொண்டனர். இவையெல்லாம் நடந்து முடிய கலைஞர் அறிக்கை வாசித்தார்.அந்த வாசிப்பு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள்.

ஈழத் தமிழ் மண்ணில் காலடி வைத்து நாடு திரும்பி, தமிழகத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த என் அன்புத் தம்பி டி.ஆர்.பாலு அவர்களே! பொறுமை காத்த தொல். திருமாவளவனே! என்னால் ஒழுங்கு செய்யப்பட்ட உலகத்தமிழர் மாநாட்டை நடத்துவதற்கு எனக்கு தோள்கொடுத்தீர்கள்

உங்கள் யாழ்ப்பாண விஜயத்தை முன்வைத்து ஜெயலலிதாவின் எதிப்பை உடைத்து உலகத்தமிழர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவேன். என்னால் எழுதப்பட்ட நாடகத்தில் நீங்கள் பத்துப்பேரும் சிறப்பாக நடித்தீர்கள். வாழ்க தமிழ்… வாழ்க தமிழ்…

கலைஞரின் அறிக்கையோடு தமிழக எம்.பிக்களின் இலங்கை விஜயம் சாதனையும் சரித்திரமும் படிக்காததாக நிறைவுபெறும்.ஆனால் நடந்தது என்ன? நடந்ததை நிஜம் நிகழ்ச்சியிலா பார்க்க முடியும்.

ஜனாதிபதியைத் தமிழக எம்.பிக்கள் குழு சந்தித்தபோது ஜனாதிபதி கூறியவற்றை அடக்கமாகச் செவிமடுத்து புன்முறுவல் செய்த தமிழகக் குழு இலங்கைக்கு வராமலே இருந்திருக்கலாம்.

ஈழத் தமிழர்கள் இன்று நலிந்து போயிருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் அரசியலிலும் மற்றும் விடயங்களிலும் கௌரவமாக இருந்தவர்கள்.

தந்தை செல்வநாயகம் நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது ஜே.ஆர்.ஜெயவர்தன போன்ற ஜாம்பவான்கள் எழுந்து மரியாதை செய்த வரலாறு எமக்குண்டு.

அந்த வரலாறு மண் கௌவுவதற்கு இந்தியாவே காரணம் என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எங்கள் இருப்பை இந்தியா நிலைகுலைய வைக்க,வந்த தமிழக எம்.பிக்கள் குழு இருந்த சுய கௌரவத்தையும் நாசம் செய்துவிட்டது.

தமிழகத்தின்-இந்தியாவின் பிரதிநிதிகளாக அவர்கள் வந்திருந்தால், இந்தியத் தேசத்திற்குரிய கெளரவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கெளரவம் கிடைக்கவில்லையாயின் இலங்கை விஜயத்தை இடைநடுவில் நிறுத்திவிட்டுத் தாயகம் திரும்பியிருக்க வேண்டும்.

இதைவிடுத்து தமிழக எம்.பிக்கள் குழு ‘சிரிபடு பொருளாக’ இருந்து போனமை, ஓரு தடவை ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய ‘தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்’ என்ற கூற்றை நிஜப்படுத்துவதாகவே அமைகின்றது.

http://www.meenagam.org/?p=13485

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.