Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நாளை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார்? அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிது காலத்திற்கு சகோதரர்களை தள்ளி வைக்குமாறு ஜனாதிபதிக்கு மனைவியார் அழுத்தம்?

Featured Replies

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துகொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயில் இன் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பசில் ராஜபக்சவின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே அவ் வெற்றிடத்தை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் வேறு சில தகவல்கள் அவர் குறித்தபடி நாளை பதவி விலகப் போவதில்லை என்றும், கட்சியினுள் ஏற்பட்ட பூசல் காரணமாகவே அவர் பதவி விலகத் தீர்மானித்திருந்தாலும் அது தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறிது காலத்திற்கு சகோதரர்களை தள்ளி வைக்குமாறு ஜனாதிபதிக்கு மனைவியார் அழுத்தம்?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்நோக்கி வரும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சிறிது காலத்திற்கு அவரது சகோதரர்களாக பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை அரசியலில் இருந்து தள்ளி வைக்குமாறு, ஜனாதிபதியின் பாரியார் அழுத்தம் கொடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமால் ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் சிறாந்தி ராஜபக்ஷவின் கருத்துக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனையின்படியே சிறாந்தி, ஜனாதிபதியிடம் இந்த அழுத்தத்தை மேற்கொண்டுள்ளார். சரத் பொன்சேக்காவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே மோதல்களை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த மோதல்கள் தொடர்ந்து நீடித்துச் செல்ல இடமளிப்பது ஜனாதிபதியின் எதிர்கால அரசியல் இருப்புக்கு பாதமாக அமைக்ககூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதிக்கும் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதானது, ராஜபக்ஷ குடும்பத்தினர் இடையிலான மோதல்கள் வலுக்கவும் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக அண்மையில் பசில் மற்றும் கோத்தபாய ஆகியோரை ஜனாதிபதி கடுமையாக திட்டி உள்ளதுடன், நிலைமை வழமைக்கு திரும்பும் வரையில் அமைதியாக இருக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்ஷ சில தினங்கள் தங்கியிருப்பதற்காக அண்மையில் சிங்கபூருக்கு விஜயம் செய்திருந்தார். அத்துடன் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு செவ்வியளித்துள்ள கோத்தபாய, சகல பணிகளிலும் இருந்து விலகி, கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழ போவதாகவும் கிராமத்திற்கு சென்று சாரத்தை கட்டிக் கொண்டு ஒய்வெடுப்பதுடன் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. தன்னை அவற்றில் சிக்கவைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல் பசில் ராஜபக்ஷவும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் மேலும்கூறியுள்ளது.

சகல பணிகளிலும் இருந்து விலகி கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழப் போகிறாராம் கோத்தபாய

சகல பணிகளிலும் இருந்து விலகி, கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழப் போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்து முடிவடைந்து விட்டன. தற்போது பிரச்சினைகள் இல்லை. இராணுவத்தினரின் நலன்புரி நடவடிக்கைகளை முடித்த பின்னர், தான் கிராமத்திற்கு செல்ல போவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

படையினர், போரில் அங்கவீனமடைந்த படைச்சிப்பாய்களின் குடியிருப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தப் பின்னர், கிராமத்திற்கு சென்று சாரத்தை கட்டிக் கொண்டு ஒய்வெடுப்பேன், எமக்கு வயல்கள் இருக்கின்றன. அரசியலில் ஈடுபடப் போவதில்லை. என்னை அவற்றில் சிக்கவைக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16140&cat=1

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு செவ்வியளித்துள்ள கோத்தபாய, சகல பணிகளிலும் இருந்து விலகி, கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழ போவதாகவும் கிராமத்திற்கு சென்று சாரத்தை கட்டிக் கொண்டு ஒய்வெடுப்பதுடன் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. தன்னை அவற்றில் சிக்கவைக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

சாரம் கட்டுவது இப்பிடித்தான் .......

how-to-tie-a-lungi.jpgpro_lungi.jpgpage1.jpg

நண்பரே! கை விளங்குடன் எப்படி வாழ்வது என்றும் கொஞ்சம் காட்டிக்கொடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.