Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்குமாறு மஹிந்தவிடம் வலியுறுத்தும் ஜிம்மி கார்ட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகப் பிரசித்தி வாய்ந்த பிரமுகர்கள் 12 பேர் கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் "த எல்டேர்ஸ்" உலகப் பிரசித்தி பெற்ற பிரமுகர்கள் அமைப் பைச் சேர்ந்தவர்களான பேராயர் டெஸ் மண்ட் டுட்டு, மார்ட்டி ஹ்டிஸாரி, கொபி அனான், எலாபட், ஹெடார் பிராஹிமி, குரோ புரூண்ட் லேண்ட், பெர்னாண்டோ ஹென்றிக்கியூ கார்டோஸோ, ஜிம்மி கார்ட்டர், கிரேகா மெக்செல், மேரி ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு அவசரமாக ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து உள்நாட்டு யுத்தத்தால் வகைதொகையின்றி இடம்பெயர்ந்த பெருந்தொகையான தமிழ் அகதிப் பொதுமக்களின் மனித உரிமைகள் நிலைவரமும், அம்மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகளும் மிகுந்த கவலையைத் தருகின்றன என்று அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் பேரவலத்தை உரிய முறையில் தீர்த்து வைக்கத் தவறும் பட்சத்தில் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்புகின்றமை என்பது கல்லில் நார் உரிப்பது போன்ற காரியமாகி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அவர்கள் அக்கடிதத்தில் முக்கியமாக மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் வரையானோர் தொடர்ச்சியாக அரசி னால் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ளமை சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். அவர்களின் அடிப்படை உரிமைகள் குறிப்பாக நடமாடும் சுதந் திரம் போன்றவை மறுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசு மீள் குடியேற்ற நடவடிக்கைகளை எப்படிக் கையாண்டு வருகின்றது என்று நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். சர்வதேச உள்நாட்டு மனிதாபிமான அமைப்புகள் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காத்திரமான பங்களிப்புச் செய்ய இயலாதவர்களாக அரசினால் மட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட இடங்களுக்குச் சென்று களநிலைமையை நேரில் பர்வையிடவோ அல்லது மனிதாபிமானப் பணிகளில் அங்கு ஈடுபடவோ ஒருவிதமான அனுமதியும் அரசினால் வழங்கப்படவேயில்லை.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் உண்மையில் வேறு முகாம்களுக்கு அரச தரப்பினரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று எமக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேநேரம் இவர்கள் புலிகள் அமைப்புடன் ஏதாவது தொடர்புடையவர்களா என்று அரசுத் தரப்பு துருவித் துருவிப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்கின்றது என்றும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இச்செய்திகள் எமக்குக் கவலை அளிக்கின்றன""

சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலரும் தென்னாபிரிக்கப் பேராயருமான டெஸ்மண்ட் ருட்டு மேற்படி அமைப்பின் தலைவர் என்ற வகையில் பிரமுகர்கள் 12 பேர் சார்பாகவும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

http://www.varudal.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.