Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்க முயலும் சிங்கள அரசு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பெரிய கப்பல்கள் சர்வதேச போலீஸ்துறையான இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் மூன்று கப்பல்கள் இருக்கலாம் என்று சந்தேகமாக செய்தியகள் வருகின்றன.

இதற்கு முன்பு புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் அழித்துவிட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டத்தின் முதல் படியாக இந்தக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி நக்கீரன் இணையம் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21893

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரசஉடமையாக்குவதில் பல பிரச்சினைகள் காணப்பட்டதாக தெரிவித்த அவர், குறிப்பாக கம்பனி, கூட்டுநிறுவனங்கள் என்பவற்றின் சொத்துக்களை அரச உடமையாக்குவதில் சிக்கல்கள் காணப்பட்டாலும் தனியாரின் சொத்துக்களை அரச உடமைக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதனபடிப்படையிலேயே கே.பியிற்கு சொந்தமான 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் இருக்கும் அவரது சொத்துக்களை அரச உடமையாக்கும் செயற்பாட்டிற்காக சட்ட ஆலோசனையையும் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கட்சிகள் பொய்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தாகவும், அவர்களின் பிரசாரங்கள் பொய்யென நிரூபிக்கும் வகையில் நேற்று முதல் நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் ஒரே இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது சேறுபூசியது போன்று இனிமேலும் சேறுபூச முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களது விபரங்களை சரியாக பதிந்த பின்னர் தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்று மாத்திரம் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறு வெளியில் சென்று தமது தேவைகளை நிறைவு செய்ததாகவும் கூறினார்.

அத்துடன் வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் பெருமளவிலான மக்கள் மீளக்குடியமாத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு பேச்சாளர், எதிர்வரும் காலங்களில் எஞ்சிய பகுதிகளிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டதும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக மீளக்குடியமர்த்தப்படுவர் எனவும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மீட்கப்பட்டுள்ளன ‐ அரசாங்கம் :

2009‐12‐02 02:08:44

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் கொழும்பிற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த மூன்று கப்பல்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிகளின் இந்த கப்பல்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இவை ஆயுத விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டவை எனவும் குறிப்பிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வெளிநாட்டு சொத்துக்களை முடக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு காணப்படும் சொத்துக்களை முடக்கி இலங்கைக்கு கொண்டு வருவதுடன், மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17995&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.