Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி. செய்தி சேவைக்கு வழங்கியதாக சொல்லப்படும் செய்தியினை உதாரணம் காட்டி சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றார் என்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலாகும்.

“2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட தீர்மானமானது, தற்போது தமிழ் மக்களிற்கு இருக்கும் துன்பியல் சம்பவங்களிற்கான காரணமென்று” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கியதாக சொல்லப்படும் செய்தியினை உதாரணம் காட்டி சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றார் என்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலாகும்.

சம்பந்தன் அவர்களைப் பொறுத்தளவில் இன்று இலங்கையின் நாடாளுமன்ற அரசியல்வாதிகளில் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் ஆளுமையும் உள்ள ஒருவர். சிங்கள தேசம் தமிழீனத்தை அடிமையாக்கி அடக்கியாள முயன்றதிலிருந்து இன்று வரைக்கும் தனது சுயநலத்திற்காக சிங்கள தேசத்திடம் விலைபோகாத ஒரு தமிழ் ஜதார்த்த அரசியல்வாதி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஏனெனில் தமிழ் தேசிய விரோதிகளான டக்ளஸ், ஆனந்தசங்கரி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் சிங்கள தேசத்தின் சூழ்ச்சி வலைக்குள் விழுந்து தமிழினம் அழிந்து கொண்டிருப்பதை தெரிந்து கொண்டே சிங்களவர்களுடன் சேர்நது அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே சுயநலவாதத் தமிழ் அரசியல்வாதிகளுக்குள் சம்பந்தன் அவர்களின் செயற்பாடுகளை இணைத்துப் பார்ப்பது பொருத்தமானதன்று.

இன்று தமிழினத்தின் தாயக நிலமான தமிழீழ மண்ணிலிருந்து கொண்டு தமிழ்மக்களிற்கான உரிமையை பெறுவதற்கான செயற்பாட்டில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளில் எந்த சூழ்நிலையிலும் தமிழ் தேசியத்தை சிதைக்காமல் சிந்தித்து செயற்படும் ஒரு அரசியல்வாதியாக சம்பந்தன் அவர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியுள்ள உறுப்பினர்களையும் தமிழ் மக்கள் தமிழினத்தின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொள்ளவேண்டியது தலையாக கடமையாக இருக்கின்றது.

ஏனெனில் தமிழினத்தின் பொது எதிரி யார் என்று எந்த தமிழ் மகனிடம் கேட்டாலும் ஒரே பதில் அது சிங்கள தேசம் தான். எனவே ஒவ்வொரு தமிழனின் செயற்பாடும் சிந்தனையயும் தமிழினத்தின் பொது எதிரியிடம் இருக்க வேண்டுமே தவிர தமிழினத்திற்குள்ளேயே கருத்து முரண்பாடு ஏற்படுத்துகின்ற செயற்பாடாக இருக்கக்கூடாது என்பது தான் முக்கியமான விடயமாகும். இதை தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கி நகர்கின்ற ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து செயற்பட வேண்டிய அவசியமாகும்.

சரி, சம்பந்தன் அவர்கள் கூறிய கூற்று விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களிற்கு செய்த அவமானம் என்று விமர்சிக்குமளவிற்கு அப்படி என்ன கூறிவிட்டார்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்கள் கடந்த 2005 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “மகிந்த ராஜபக்ச அவர்கள் ஒரு ஜதார்த்தவாதி எனவே தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தின் உண்மைத்தன்மையறிந்து செயற்படுவார் என்று நம்புகின்றேன்” என்று கூறியிருந்தார். ஆனால் ஜதார்த்தவாதியென்று தலைவர் நம்பிய மகிந்த ராஜபக்ச எமது இனத்தையும் விடுதலைப்போராட்டத்தையும் எங்கு கொண்டு வந்து விட்டார் என்பது தமிழீனத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே தெரியும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக தற்போது ஈழத்தில் யாருமிருந்திருந்தால் சம்பந்தர் அவர்கள் கூறிய பதிலைத்தான் இதே வினாவிற்கு தெளிவாகவும் விபரமாகவும் அவரும் பதிலாக கூறியிருப்பார் என்று நான் நம்புகின்றேன்.

என்ன செய்வது உரிமைக்காக உயிர் கொடுக்கும் அந்த உத்தம வீரர்கள் எம்மை விட்டு சென்றுவிட்டார்கள் எனவே இந்த வீரர்கள் எதற்காக உயிர்த்தியாகம் செய்தார்களோ அதற்காக நாம் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது மக்களிற்கான உரிமையை மீட்க எந்த வடிவத்தில் செயற்பட முடியுமோ அந்த வடிவத்தில் செயற்பட தயாராகுவோம்.

—ஈழப்பிரியன்

http://meenakam.com/?p=2231

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன்
சம்பந்தர் ஐயா றீயூசபிள் கறிவேப்பிலை, முத்திரை குத்தினாலும் பட்டம் குடுத்தாலும் அது இப்போதைக்கு நிரந்தரமானதாக இருக்காது. வரும்காலத்தில தேவையைப்பொறுத்து மனித உரிமை மகாநாடு நடக்கேக்க மீறலுக்கு பயன்படுத்தினமோ? தெரியாது. :(

தேசியத்தலைவர் கூற்றுக்கும் சம்பந்தரின் கூற்றுக்கும் முடிச்சுப்போடும் ஈழப்பிரியன் இரண்டும் ஒன்றென்று குழம்பிக் கிடக்கிறார். அழுத்தங்களுக்கு எதுவும் கொடுக்கப்படாமல் சொல்லப்பட்ட தேசியத்தலைவரின் கூற்றுக்கும் அழுத்தங்களால் திணறியிருக்கும் சம்பந்தரின் கூற்றுக்கும் இடையில் வித்தியாசத்தையே காணமுடியவில்லையா?

சம்பந்தரை தேசியத்திற்கு எதிரானவர் என்று கூறுவத்ற்காக இப்படியெல்லாம் ஈழப்பிரியன் எழுதுவது சம்பந்தரை இதிலிருந்து காப்பாற்றும் முயற்சியா? அல்லது .....

சிறீலங்கா அதிபர் தேர்தல் தள்ளாடும் தமிழ் கட்சிகள்..

கூட்டமைப்பு கக்கியுள்ள தேர்தல் எரிமலை நெருப்பா..

தேர்தலுக்கு பின் எரியக்கூடிய கொழும்பு சைவக்கடை நெருப்பா..

சிறீலங்கா அதிபர் தேர்தல் கட்சித் தலைவர்களுக்கு அதிகமாக பணம் உழைக்கும் நேரம் மட்டுமல்ல, இரண்டு பக்கங்கங்களாலும் அழுத்தங்கள் வரக்கூடிய காலமுமாகும். பெரியசாமி சந்திரசேகரன் மாரடைப்பால் மரணித்துள்ளார். இந்த அதிபர் தேர்தலின் நெருக்குவாரம் அவரையும் பாதித்திருக்க இடமுண்டு.

தமிழர் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் எதிர் காலத்திற்காக கருத்து மோதல் நிலையடைந்து பிளந்திருந்தால் அதை வரவேற்கலாம்.. ஆனால் போயும் போயும் சிறீலங்கா அதிபர் தேர்தலுக்காக மோதிப் பிளவடைந்திருக்கிறது. இதுவரை காலமும் கக்காத கூட்டமைப்பின் எரிமலை சிறீலங்கா அதிபர் தேர்தலில் கக்கியுள்ளது. கூட்மைப்பில் கனன்றது அரசியல் நெருப்பா விடுதலை நெருப்பா என்பதை அறிய இப்போது கக்கியுள்ள எரிமலைக் குழம்பே போதுமானது.

1977 தேர்தலை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அன்றைய தமிழர் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முழங்கினார்.. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு வாக்களியுங்கள் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார் 1983 கலவரத்தில் மாறு வேடம் பூண்டு அவர் நாட்டை விட்டு ஓடியபோது உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

பாராளுமன்றம் ஓர் உலக மேடை அங்கு போவதே எமது பிரச்சனைகளை உலக மன்றிற்கு எடுத்துச் செல்லும் என்று அதே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அன்று முழங்கினார். ஆனால் வன்னியில் இன்று நடந்து முடிந்த அவலங்களை நிறுத்த நமது பாராளுமன்ற ஆசனங்களால் முடியவில்லை.

வன்னியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் வரலாறு காணாத ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன. அப்போதும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது..

சிங்கள அரசுக்கு 32 ற்கு மேற்பட்ட உலக நாடுகள் போருக்காக உதவி செய்தன.. சற்லைற் கண்காணிப்பால் விடுதலைப் புலிகளின் நகர்வுகளை படம் பிடித்து, பலர் துடிக்கத் துடிக்க கொல்லப்பட வழி காட்டியவை உலக நாடுகளே..

இத்தகைய உலக நாடுகளுக்கு நமது ஒற்றுமையை, தமிழீழ தாகத்தை இனியும் ஒரு முறை அதிபர் தேர்தலில் வாக்களித்துத்தான் காட்ட வேண்டுமா.. இது நமது கேள்வியல்ல யாழ். மக்களில் பலர் கேட்கிறார்கள்.

யாழ். மாநகரசபை தேர்தலில் 80 வீதமான மக்கள் வாக்களிக்காமல் விட்டது எதற்காக..? வாக்குச் சீட்டால் உலகத்திற்கு காட்ட இனி எந்த அம்மணமும் நம்மிடம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

உலக நாடுகளுக்கு காட்ட சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எத்தனை முறை பயன்படுத்தப் போகிறோம் ? என்று கேட்பதுபோல தமிழ் காங்கிரஸ் கட்சி தேர்தலை பகிஷ்கரித்திருக்கிறது.

சம்மந்தர் இதுவரை முடிவுகள் எதையும் எடுக்கவில்லை.

இனி அவர் எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்காக மீதம் வைக்கப்பட்டிருப்பது ஒரேயொரு வழி மட்டுமே. மக்கள் விரும்பியதை செய்யட்டும், நாம் இந்தத் தேர்தலில் யாதொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று கூறுவதே கடைசி வழி.

அமிர்தலிங்கத்தின் மேடைப் பேச்சிலேயே இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது. சிங்கள அதிபர் தேர்தல் சிங்களவருக்குரியது அதில் நாம் பகிரங்க கருத்து கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறி தந்திரமாக தப்பித்துக்கொண்டார், பின் ஜே.ஆர் கொடுத்த உலங்கு வானூர்தியில் பறந்து சென்றும் காட்டினார். சிங்கள இனவாதிகள் வாக்கையும், கணிசமான தமிழர் வாக்கையும் பெற இதுதான் சிறந்த தந்திரமான பதில் என்பது அன்று அமிர்தலிங்கத்திற்கு ஜே.ஆர் காட்டிய வழி.

கூட்டமைப்பு புலிகளுடன் தொடர்புடைய கட்சியென்று சிங்களவரிடையே வர்ணிக்கப்பட்டது. அவர்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அதற்கு அடுத்த பக்கமாக சிங்கள இனவாதிகளின் வாக்குகள் திரும்பும். ஆகவே கூட்மைப்பினரை மதில்மேற் பூனையாக இருங்கள் என்றே மகிந்தவும், சரத்தும் கேட்டிருப்பார்கள். அதுதான் கூட்டமைப்பு முடிவெடுக்க தயங்குவது போல காட்டுகிறது. அது எந்தப்பக்கமும் பாயாது சுவரிலேயே இருப்பது இத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. முடிவெடுக்க முடியாத கூட்டமைப்பு இதுவரை தாம் பேசியதையாவது மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

இன்னும் எத்தனை காலம்தான் இரகசியப் பேச்சுக்களை நடாத்தப் போகிறார்கள்…

மகிந்தவின் தோல்வி கருணா, பிள்ளையான், டக்ளஸ், சித்தாத்தன் போன்றோரின் அரசியல் எதிர் காலத்திற்கு சவாலாக அமையுமா என்று யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் சிந்தித்துள்ளது தெரிகிறது.. அவர்கள் அதிபர் தேர்தலில் பாரிய முழக்கங்கள் போடாமல் இருக்கிறார்கள். சரத் பொன்சேகா வென்றால் அவர் பக்கம் சாய வசதியாக அடக்கி வாசிப்பது தெரிகிறது..

ஆக…

சிறீலங்காவில் நடப்பது அப்பட்டமான அரசியல் மட்டுமே…

புலம் பெயர் தமிழர் வீணாக உணர்ச்சி வசப்பட்டு இரத்தக் கொதிப்படையாது, வரலாற்றை உள்ளபடி தெரிந்து, அமைதியாக சிந்தித்து நிதானமாக நடப்பதே புத்திசாலித்தனமானது..

1948 முதல் தேர்தல் முடிந்ததும் சிங்கள இனவாதிகள் கொண்டாட்டம் போடுவார்கள்…

அப்போது கொழும்பில் உள்ள தமிழருக்கு அடிப்பது அவர்களுடைய தேசிய இயல்பு..

27ம் திகதி தமிழருக்கு அடி விழுகிறதா இல்லையா என்பதைப் பாருங்கள்..

புலிகளை வென்றபின் சிங்கள இனவாதம் திருந்திவிட்டதா இல்லையா என்பதைப் பார்க்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பதல்ல அளவுகோல்.. தேர்தலுக்கு அடுத்தநாள் கொழும்பில் தீப்பிடித்து எரியும் சைவக்கடை நெருப்பே அதற்கான அளவுகோலாகும்..

தேர்தலுக்கு முன் எரிமலையாகக் கக்கியுள்ள கூட்டமைப்பின் உள்ளக நெருப்பா ?

எரியக்கூடிய அபாயத்தில் உள்ள கொழும்பு சைவக்கடை நெருப்பா ?

காலம் பல கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டது..

இதற்கும் அதனிடம்தான் பதில் இருக்கிறது..

அலைகள்

http://www.puthinamnews.com/?p=4412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.