Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது ஜனாதிபதி அவர்களே நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன்

Featured Replies

இன்று ஜனவரி 08, 2010. அலுவலகத்திற்குச் செல்லும் போது பட்டப்பகலில் நட்டநடுத்தெருவில் வைத்து எனது கணவரும் உங்களது நண்பருமான லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 2005இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இற்றை வரை 15க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளில் ஒன்று பற்றிக்கூட உரிய விசாரணைகள் நடைபெறவில்லை.

லசந்த குறிப்பிட்டதைப் போன்று சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அரசுகளுக்கு அது எங்கென்றாலும் படுகொலை தான் அதன் அடிப்படை ஆயுதமாக இருக்கும். இறுதியில் நான் கொல்லப்படுவேன். அரசாங்கமே என்னைக் கொல்லும் என்று லசந்த தனது இறுதி ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். லசந்தவின் படுகொலை மட்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்படவில்லை என்றில்லை. அவருடைய வீடு தாக்கப்பட்டது குறித்தோ, சண்டே லீடர் அச்சகம் தாக்குதலுக்குள்ளானது குறித்தோ கூட விசாரணைகள் எதுவும் நடாத்தப்படவில்லை.

பல்வேறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது அல்லது அச்சுறுத்தப்பட்டது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதன்காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். எஞ்சியோர் பலவந்தப்படுத்தப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டுள்ளார்கள். எமது நாட்டின் வரலாற்றிலேயே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இப்போதையைப் போல் ஒரு போதும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது இல்லை. இவ்வாறு கீழ்ப்பணிய வைக்கப்பட்ட ஊடகங்கள் உங்களதும் உங்களது சகோதரரர்களதும் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டன. அவ்வாறில்லாதவர்களை கடுமையான அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகித்து சிறையிலடைத்தீர்கள். அதன் விளைவாக ஒரு ஊடகவியலாளர் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளார்.

லசந்த படுகொலை செய்யப்பட்டு 12 மாதங்கள் கடந்தும் அப்படுகொலை பற்றி எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. படுகொலையாளிகள் சீருடை அணிந்து ஒரேவகையான மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். எனினும் இது குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தவிர லசந்தவின் படுகொலையாளிகள் குறித்த நேரத்தில் பல்வேறு கைத்தொலைபேசித் தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த தொலைபேசி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அவ்விலக்கங்களைப் பெற்றாலே கொலையாளிகளைக் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் பொலிஸார் இதற்குப் பதிலாக லசந்தவின் தொலைபேசியைக் கைப்பற்றி லசந்த தொடர்பு கொண்டிருந்த தகவல் மூலங்களைக் கண்டுபிடிக்கவே முயற்சி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறு தரப்பினரை விசாரித்தாகப் பொலிஸார் தெரிவித்தாலும் படுகொலை குறித்த சரியான விவரங்களுக்கு அவர்களால் வர முடியவில்லை. உதாரணமாக லசந்த துப்பாக்கிச் சூட்டினாலேயே மரணமானதாக அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெற்றுத் துப்பாக்கிரவைகள் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், லசந்தவின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக்கான எவ்வித ஆதாரங்களும் காணப்படவில்லை. எக்ஸ்ரே அறிக்கையில் கூட அதற்கான எத்தகைய தடயங்களும் காணப்படவில்லை. இது ஒன்றே இக்கொலையை மூடி மறைக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

லசந்த படுகொலையான போது லசந்த உங்களுடைய நண்பன் நீங்கள் அடிக்கடி அவரைச் சந்திப்பீர்கள் என்று நீங்கள் சொன்னது மட்டுமல்ல உரிய விசாரணைகள் நடாத்தப்படும் என்றும் தெரிவித்து உங்கள் தாராள குணத்தையும் வெளிப்படுத்தி இருந்தீர்கள். ஆனால் மறுபுறத்தில் லசந்த உங்களுக்கு ஒரு தொந்தரவான ஆள் என்பதையும் அறிந்திருந்தீர்கள். சுனாமி நிதியாக மக்களால் வழங்கப்பட்ட நன்கொடையான ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதியை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றி மேற்கொள்ளப்பட்ட மோசடியை லசந்த வெளிக் கொண்டு வந்திருந்தார். லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடமாகியும் எந்தவொரு விசாரணையும் நடைபெறாததும் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவரின் தொலைக்காட்சி நேர்காணலில் பாதுகாப்பு செயலாளரும் தங்களது சகோதரருமான கோட்டபாய ராஜபக்ச லசந்த என்பவர் யார்? என்று கேள்வியெழுப்பியதும் தங்களது இந்த நான்கு வருட ஆட்சியின் லட்சணத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

தான் கொலை செய்யப்படுவேன் என்பதை லசந்த நன்றாக அறிந்திருந்தார். தன்னை யார் கொலை செய்வார்கள் என்பதை அறிந்தும் இருந்தார். அவர் மரணத்திற்கு அஞ்சவில்லை. அவர் பாதுகாப்புக் கோரவில்லை. புல்லட் புரூப்களையோ, குண்டு துளைக்காத வாகனங்களையோ அவர் கோரவில்லை.

http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_5273.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.