Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் பலமே வட.கிழக்கில் அரசு தோற்கக் காரணம் - அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத்பொன் சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கூட்டமைப்பினரின் இவ் வகையான பிரசாரம் காரணமாக அந்தப்பகு திகளில் மீண்டும் இனவாதம் ஒன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும் அதனைகளையும் தேவை அரசாங்கத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது, பொதுவாக அரசாங்கத்திற்கு நாடளாவிய ரீதியாகத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அரசாங்கம் கிரமமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் பொருட்டே கருணா, பிள்ளையான் போன்றோர்களை அரசி யலில் முக்கிய பதவிகளில் அமர்த்தி தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சி, அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான தமது நிலைப் பாட்டை ஒரு வாரத்தினுள் அறிவிக்க வேண்டும். இல்லையயனில் அர சாங்கம் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இலங்கை அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் அடுத்த ஒரு மாத காலப் பகுதியில் பெரியள விலான மாற்றம் ஒன்றும் இடம் பெறலாம். இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாயின் யானைச் சின்னத்துடனா? அல்லது அன்னப் பறவைச் சின்னத்துடனா? என்பதைத் தீர்மானித்துக் கொண்டு வர வேண்டும்.

அன்னப் பறவைச் சின்னத்துடன் வருமேயானால் தேர்தலுக்குப் பின்னரான 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு நடந் ததைப் போலவே அந்தக் கட்சியின் நிலைமையும் மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பின்னடைவு

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் இம்முறை நடைபெற்ற தேர்தலில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியம் மிக்க ஆசனங்களான மகி யங்கனை, செங்கடகல போன்ற ஆசனங்களைக் கூட இழந்துள்ளது. இதற்கான காரணம் அந்தக் கட்சி கிராமிய மக்களின் மனங்களை அறிந்து கொள்ள முற்படாமையே.

இவ்வாறான போக்கை ஐக்கிய தேசிய கட்சி கடைபிடிக்குமாக இருந் தால் அந்த கட்சியால் ஐந்து தடவைகளுக்கு பின்னரே ஒரு தேர்தலில் வெற்றி கொள்ள முடியுமாக இருக்கும்.இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப் பினரால் தான் அரசாங் கத்திற்கு வடக்கில் தமிழ் வாக்குகளை பெறமுடியாது போனது என் றால் அரசாங்கத்தின் பக்கம் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் மற்றும் பிள்ளை யான் ஆகியோரின் பலம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் வழங்கிய அமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல நெடுங்காலமாக வடக்கு மக்கள் மத்தியில் அரசியல் பலத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் என்ற வகையில் தமிழ் மக்களுக்கு தெற்கை போல வடக்கிற்கும் அதிகாரத்தை வழங்க முடியும் என்று மாத்திரமே சொல்ல கூடியதாக இருந்தது. அதே சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை யும் தாண்டி மேலதிகமான ஒரு அதி காரத்தை வழங்க முடியும் எனக் கூறி வாக்கு கோரியிருந்தமையும் இதற்கான ஒரு காரணமாம். அரசுடன் கூட்டமைப்புஇணைய முடியும் எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனிலும் மேலான ஒரு சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்க முடியும்.அது அரசாங்கத்து டன் இணைந்து செயற்பட்டிருக்கலாம்.இதேவேளை ஜெனரல் பொன் சேகா தடுப்பு காவலில் வைக்கப்பட் டமை குறித்து கேள்வி எழுப்பிய வேளையில்,அரசாங்கம் இவ்வா றான நடவடிக்கையை மேற்கொண்டமைக்கு நாட்டின் அமைதியான சூழலை கருத்தில் கொண்டே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த ஹோட்டலின் இரண்டு மாடி தட்டுகளினதும் 70தொடக்கம் 80அறைகளை மொத்தமாக வாட கைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்தார்.இவ்வாறு ஒருவர் தங்கி இருப்பது ஏதேனும் திட்டத்தின் அடிப்படை யிலேயே என கருதிய அரசாங்கம் இவ்வாறான ஒரு பாதுகாப்பினை வழங்க வேண்டி ஏற்பட்டது. ஜெனரல் பொன்சேகா குற்ற மிழைத்தவர். அவருக்கு உரித்தான முழுமையான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னரே அவர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார். அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருந்த போது சர்வ தேசத்தின் தூதுவர்கள் சிலர் அவரை வெளியே கொண்டு செல்வ தற்கு முயற்சி செய்திருந்த போதும் அதனை அரசாங்கம் தடுத்துவிட் டது.அமைதியான முறையில் இடம் பெற்ற தேர்தலை குழப்ப சர்வதேசத்தின் தூதுவர்கள் சிலர் அவரை வெளியே கொண்டு செல் வதற்கு முயற்சி செய்திருந்த போதும் அதனை அரசாங்கம் தடுத்துவிட்டது. இதற்கிடையில் சரத் பொன்சேகா தப்பி செல்வார் என கருதியே விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து அவரிடம் வினவிய போது, அது அவ்வாறான ஒரு தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவ்வாறு பொன்சேகா செல்வதை தடுக்க வேண்டும் எனின் நீதிமன்ற நடவடிக்கை மூலம் அரசாங்கத்துக்கு செயற்பட முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.