Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தரின் வாரிசு அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தரின் வாரிசு அரசியல்

namal-rajapaksa.jpg

ஆசியாவின் புத்தம் புதிய அரச பரம்பரையின் ஒரு பிரிவாக முளைத்திருக்கும், சிறிலங்கா குடியரசு அதிபரின் 24 வயதேயான மகன் நாமல் ராஜபக்சவைப் பொறுத்த அளவில் தன்னடக்கம் என்பது ஒரு உறுதியான பண்பாகத் தோன்றவில்லை.

“அதிரடியான, ஆர்ப்பாட்டமான இளம் நாமல் ராஜபக்சவைப் பார்க்கின்ற போது நற்பண்புகளை உடைய நட்பார்ந்த எதிர்காலத் தலைவர் ஒருவரே உங்கள் சிந்தனையில் தோன்றுவார்” என அவரது இணையத் தளம் கூறுகின்றது.

இந்த ‘ரக்பி’ விளையாட்டு வீரர் கடந்த செப்டெம்பர் மாதத்தில் தான் லண்டனின் சிட்டி பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இப்போது அவரது தந்தையின் காலடித் தடங்களைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

அவரது தந்தை தனது 24ஆவது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர். கடந்த மாதம் நடந்த குடியரசு அதிபர் தேர்தலில் அவர் தனது முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவைத் தோற்கடித்தார்.

கடந்த வாரம் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 8ஆம் நாள் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நாமல் ராஜபச்க அவரது அப்பாவின் கட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

ஏற்கனவே அரசில் அங்கம் வகிக்கும் அவரது ஒரு டசினுக்கும் மேற்பட்ட உறவினர்களுடன் அவரும் சேர்ந்து கொள்கிறார்.

சிறிலங்காவில் மிகப் புனிதத்துவம் வாய்ந்ததாக விளங்கும் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள தலதா மாளிகையின் பாதுகாவலர் என்கிற அரசியல் அதிகாரம் மிக்க பதவியை நாமல் ஏற்றுக் கொள்வார் என்ற வதந்திகளும் உலாவருகின்றன.

நாமலின் திடீர் எழுச்சி, அரசின் உத்தியோகபூர்வ செய்தி வெளியீட்டில் “நாமல் ராஜபக்சவின் அரசியல் கொள்கைகள் : அரசியலில் ஏற்படுத்தும் சாதகம் மற்றும் செயல்திறன்” என்ற தலைப்பில் பெரும் வரவேற்புக்குள்ளானது.

ஆனால், சிறிலங்காவின் பெரும்பாலான மக்களுக்கு நாமலின் அரசியல் வருகை ஆச்சரியம் அளிக்கவில்லை.

தற்போதைய குடியரசுத் தலைவரான தனது தந்தையுடன் நாமல் ராஜபக்சவும் தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொண்டார்.

தான் நடத்தி வரும் அரச சார்பற்ற நிறுவனத்தில் இருந்து தந்தையின் தேர்தல் பரப்புரைகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு நிதியையும் வழங்கி வந்தார்.

இருந்தாலும், நாமலின் அரசியல் வருகையும், அதனைச் சுற்றி உள்ள தனிமனித வழிபாட்டு முறைமைகளும் தெற்காசியாவின் பழைமை வாய்ந்த மக்களாட்சிக்குக் கவலை தரும் அம்சங்களாகப் பலருக்குத் தெரிகின்றன.

விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்த படைத் தளபதி சரத் பொன்சேகா சதிப் புரட்சியில் ஈடுபட முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதானமை தொடர்பிலேயே கடந்த இரு வாரங்களாக அனைத்துலக சமூகம் கவனம் செலுத்தி வருகின்றது.

ஆனால், அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை ராஜபக்ச குடும்பத்தினர் தமது பிடியை அதிகாரத்தில் இறுக்குவது.

குறிப்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் கட்சி பெற்றால் அது அரசியலமைப்பை மாற்றுவதற்கு வழிவகுத்துவிடும்.

2005ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த போது தனது குடும்பத்தினரைச் சுற்றிவர வைத்திருக்க வேண்டிய தேவை சிறிலங்கா குடியரசு அதிபருக்கு இருந்தது என்கிறார் அலன் கீனன். அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் உறுப்பினர் அவர்.

அரசியல் எதிரிகள் பலரையும், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படுவதற்கான ஆபத்தையும் கொண்டிருந்ததனால் ராஜபக்சவின் அந்த நடவடிக்கை அப்போது ஏற்புடையதாக இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.

“அந்த நிலைவரை அது ஏற்புடையதாக இருந்தது. ஆனால் இப்போது அது அளவுக்கதிகமாகச் சென்றுவிட்டதாகத் தோன்றுகின்றது. உண்மையில் அது ஆபத்தானது” என்கிறார் அலன் கீனன்.

“அங்கு எப்போதுமே முறைகேடுகள் இடம்பெறுகின்றன. ராஜபக்ச எதையோ செய்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என கொழும்பில் உள்ள வர்த்தகர்கள் முறையிடுகிறார்கள். முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை” என அடுக்குகிறார் அவர்.

ராஜபக்சவின் இரண்டாவதும் கடைசியுமான பதவிக் காலத்தின் பின்னர் அவரது வாரிசாக நாமல் இப்போதே உருவாகத் தொடங்கி விட்டார்.

இது ஒன்றும் புதிய விடயம் இல்லை என்றும் இந்தியாவில் காந்தி குடும்பமும், பாகிஸ்தானில் பூட்டோக்கள், அமெரிக்காவில் கென்னடிகள், புஷ்கள் மாதிரியே இதுவும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

“அவரது பாணி தனித்துவமானது ஈடு இணையற்றது. சிறிலங்கா தனது அபிவிருத்தி வேகத்தை அதிகரித்தால் நாமல் ராஜபக்ச அதன் கட்டுப்பாட்டாளராக நிச்சயம் இருப்பார்” என நாமலை வரவேற்று அரசின் உத்தியோகபூர்வ வெளியீட்டில் எழுதிய ரி.சி.ராஜரட்னம் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான தனி மனித புகழ்ச்சி பாடும் நபர்கள் வடகொரிய தலைவர் கிங் ஜொங் இல்-ஐச் சுற்றியே இருக்கிறார்கள் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுக்கிறார்கள்.

puthinapalakai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.