Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மஹிந்த சிந்தனை'ப் பொருளாதாரத்தில் கடனை அடைப்பதற்குப் புதிய கடன்!

Featured Replies

இலங்கையின் "மஹிந்த சிந்தனை' பொருளா தாரத்தை ஒரு பிடி பிடித்து, கிழித்திருக்கின்றார் பிரபல பொருளியல் ஆய்வாளரான ஹர்ஷா டி சில்வா.

"மஹிந்த சிந்தனை' அரசின் தவறான நிர்வாகம், வீண் விரயம் போன்றவை காரணமாக கடந்த வருடத் தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்ப தாக அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த வீண் விரய இழப்பினால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமைப் பளு சராசரியாக ஒரு லட்சம் ரூபாவினால் உயர்ந்திருக் கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்த அதிகரிப்பின்படி சுமார் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினதும் மொத்தக் கடன் சுமை 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாவாக உயர்ந்து விட்டது.

தவறான ஆட்சி முறையின் விளைவால், தெரிந்தோ, தெரியாமலோ, இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் குடும்ப ரீதியாக இத்தகைய கடன் சுமையைத் தங்களை அறியாமலேயே சுமக்க வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். கடந்த ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில், வரவுக்கு மிஞ்சிய செலவு துண்டு விழும் தொகை 34 ஆயிரத்து 280 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அதுவோ 37 வீதம் எகிறி 46 ஆயிரத்து 960 கோடி ரூபா என்ற உச்சத்தை எட்டியது என்பதை அரசின் புள்ளி விவரங்களே வெளிப்படுத்தியுள்ளன.

தவறான ஆட்சி முறைமை, நிர்வாகத் திறனின்மை, அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல், மோசடி, வீண் விரயம் போன்ற இன்னோரன்ன பிற காரணங்களினால் நாட்டின் அறவீடுகள் எதிர்பார்த்ததை விடப் பெருமள வில் வீழ்ச்சி கண்டன; பொருளாதாரமும் பின்னடைவு கண்டு, துவண்டது. இவற்றின் காரணத்தினால் துண்டு விழும் தொகை எக்கச்சக்கமாக எகிறியது.

"மஹிந்த சிந்தனை' அரசின் தீர்க்கதரிசனமற்ற விவேகமும் திறமையுமற்ற பொருளாதாரக் கொள் கைப் போக்கால் சர்வதேச உலகுக்கு இலங்கை திருப் பிச் செலுத்த வேண்டிய கடன் பங்கு மொத்தம் நான்கு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாவாக விண்ணைத் தொட்டு நிற்கின்றது. போதாக்குறைக்கு வர்த்தகக் கடன் மூலம் சம்பாதிக் கும் தரகு முகவர்களுக்குத் தாராளமாக இடமளிக்கும் இந்த ஆட்சிப் போக்கு, அதன் காரணமாக வெளி நாட்டு வர்த்தக வங்கிக் கடன்களை ஏற்பாடு செய்யும் முகாமையாளர்களின் வலையில் வீழ்ந்து, உயர்ந்த வட்டிக்கு அதிக வர்த்தகக் கடன்களை வாங்கிக் குவித்து, நாட்டைப் பெரும் கடன் சுமைக்குள் மூழ்கடித்து வருகின்றது என ஹர்ஷா டி சில்வா சுட்டிக்காட்டு கின்றார்.

அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டில் மிக உயர்ந்த வட்டி வீதத்துக்கு எச்.எஸ். பி.ஸி.வங்கியிடமிருந்து அரசு பெற்ற பல்லாயிரம் கோடி ரூபா கடன் முறியை அவர் சுட்டுகின்றார். 2008இல் 16 ஆயிரத்து 400 கோடி ரூபாவை வர்த்தகக் கடனாகப் பெற்ற அரசு 2009 இல் அதை ஒன் றரை மடங்கால் அதிகரித்து 41 ஆயிரத்து 110 கோடி ரூபா வைப் புதிய கடனாக வாங்கிக் குவித்திருக்கின்றது. இப்படி அரசு கண்மூடித்தனமாக வர்த்தகக் கடன் களை வாங்கித் தண்ணீராகச் செலவு செய்து கொண் டிருக்க, மறுபுறம் அக்கடன்களை மீளச் செலுத்துவ தற்கான தொகையும் எகிறிச் செல்கின்றது.

இதுவரை எடுத்த கடன்களுக்காக முதலும் வட்டி யுமாக கடந்த ஆண்டில் மட்டும் அரசு 82 ஆயிரத்து 400 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டியிருந்தது. இது, அரசின் வரி வருமானமான 70 ஆயிரத்து 200 கோடி ரூபாவை விட அதிகமாகும். அதாவது இதுவரை கால மும் அரசு வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து வாங்கிக் குவித்த கடன்களுக்காக வருடாந்தம் வட்டியும் முதலுமாகச் செலுத்த வேண்டிய தொகை, நாட்டின் வருட வருமானத் திலும் விடப் பெருமளவுக்கு எகிறிவிட்டது என்பதுதான் உண்மை. இப்படி "வரவு எட்டணா, செலவு பத்தணா' என்று "மஹிந்த சிந்தனை' ஆட்சி தொடருமானால் நாடும் "கடைசியில் துந்தணா!' என்ற கதிக்குத் தள்ளப்படு வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

யுத்த வெ(ற்)றி என்ற மாயையில் போதையில் மயங்கிக் கிடக்கும் தென்னிலங்கை மக்களுக்கு இப்படி அதலபாதாளத்துக்குள் பொறிந்து கொண்டி ருக்கும் பொருளாதாரப் பாதிப்பை உணரும் சக்தி இப்போது இல்லை. அது அவர்களின் வயிற்றைக் கடித்து, பலமாக உணர்த்தும் போது அதிலிருந்து மீளும் சக்தியை வாய்ப்பை முழு நாடுமே இழந்திருக்கும் என்பதும் மறுக்கக் கூடியதல்ல. வாங்கித் தள்ளிய கடனையும் வட்டியையும் திருப் பிச் செலுத்துவதற்கு மீண்டும் மீண்டும் கடன் வாங் கும் இந்தப் பொருளாதாரச் சிந்தனை நாட்டை இறுதி யில் பெரும் சீரழிவுக்குள் ஆழ்த்தப் போகின்றது என் பது மிக ஆபத்தான யதார்த்தமாகும்.

  • தொடங்கியவர்

மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி?

உலக நாடுகளின் அரசாங்கங்களின் கணக்கில்லாமல் வாங்கி வரும் கடன் தொகை அளவுக்கு மீறி உயர்ந்து வருவதால் மீண்டும் ஒரு உலக பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. குறிப்பாக EURO – PIGS என்று அழைக்கப் படும் போர்ச்சுக்கல், இத்தாலி & அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் கடனில் தத்தளித்து வருகின்றன. சமீபத்திய உலக பொருளாதார வீழ்ச்சியினால், பெருமளவுக்கு சுற்றுலாத்தொழிலை (ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்றவை) நம்பியிருக்கும் இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன. பொருளாதாரத்தை மீட்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவில் கடன் வாங்கின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையாத இன்றைய சூழ்நிலையில், இந்த அரசாங்கங்களால் பெரிய வருமானம் பெற முடியவில்லை. எனவே, இன்னமும் கூட நிறைய கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த நாடுகளால் பழைய கடன்பாக்கியை ஒழுங்காக திருப்பி செலுத்த முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக உதவி செய்ய ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது சற்று நிம்மதியை வரவழைத்தாலும், தொடர்ந்து உதவி செய்யுமளவுக்கு ஐரோப்பிய யூனியன் அதிக வலுவில்லாமல் இருப்பது புதிய கவலைகளை வரவழைக்கின்றது. புள்ளியியல் மாயைகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய யூனியனின் ஒட்டு மொத்த வளர்ச்சி 0.1% அளவுக்கே இருப்பது உலகப் பொருளாதாரத்தில் “இது வரை முக்கிய பங்கு வகித்து வந்துள்ள முன்னேறிய ஐரோப்பிய நாடுகள்” இப்போதைக்கு தலை நிமிர்வது கடினம் என்ற சந்தேகத்தை வரவழைக்கின்றது. உலகின் பொருளாதார என்ஜினாக கருதப் படும் அமெரிக்காவின் தற்போதைய நிலையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஐரோப்பிய யூனியனின் மொத்த பொருளாதாரம் 13 டிரில்லியன் டாலர்கள்!​ ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்குப் பக்கத்தில் பதினெட்டு பூஜ்யங்கள் வருகின்றன.​ ​

இந்த 13 டிரில்லியன் டாலர்களில் கிரீஸின் பொருளாதாரம் வெறும் 2.7 சதவிகிதம்தான்.​ 2009 ஆம் ஆண்டுக்கான தன் வரவு செலவுத் திட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தைப் பற்றாக்குறையாகக் காட்டியிருக்கிறது கிரீஸ் நாடு.​ மூன்று சதவிகிதம் வரை காட்டலாம் என்பது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் லிமிட்.

அந்த யூனியனின் மிகவும் வலிமையான பொருளாதாரம் கொண்டவை.​ ஃபிரான்ஸýம்,​ ஜெர்மனியும்.​ இவை இரண்டும் கிரீûஸக் கைதூக்கி விட முன்வந்திருக்கின்றன.​ ​ கிரீஸ் போலவே ஸ்பெயின்,​​ போர்ச்சுகல் நாடுகளின் பொருளாதாரமே பிரகாசமாக இல்லை.​ இதனால் "யூரோ'வின் மதிப்பு சரிந்து விடும் அபாயம் தென்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.