Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு எங்கள் நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல், வாக்களிப்பதிலிருந்து இருந்து விலகுகின்றோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி அதிகாரம், இராணுவம் மற்றும் படைப்பலம் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள அரசு, சிறுபான்மையினரைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு - செலவுத் திட்ட உரையின் மீதான ஆறாவது நாள் இறுதி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் குடியேற்றப்பட்டு பலஸ்தீனர்கள் அவர்களுடைய சொந்த மண்ணிலேயே கொன்று அழிக்கப்பட்டனர். அவர்களின் நிலம் அபரிக்கப்பட்டது.

இப்படியான ஒரு நிலைமை எமக்கும் ஏற்படக்கூடாது என்ற அச்சமும் பீதியும் சிறுபான்மையினரான எங்களுக்கு ஏற்பட்டுள்ளன.

யுத்தம் முடிவுற்ற நிலையில், வெற்றிக்குசியில் சிங்களக் குடும்பங்கள் அரச ஆதரவுடன் குடியமர்த்தப்பட்டுள்ளன. அதேபோன்று கொழும்பு சேரிப்புறங்களில் வாழும் பொரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 65 ஆயிரம் குடும்பங்களை வடக்கில் குடியமர்த்தும் பாரிய திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது என அறிகின்றோம்.

இங்கு வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் சிறுபான்மையினர்தான். ஆனால் ஆட்சி, அதிகாரம், இராணுவப் படைப்பலம் அனைத்தும் கொண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் எங்கிருந்தாலும் பெரும்பான்மைதான்.

வடக்கில் இந்திய அமைதிப்படை இருந்தபோது 13 இராணுவ முகாம்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று வீட்டுக்கு வீடு இராணுவ ஆக்கிரமிப்புக் காணப்படுகின்றது. அங்கே சிவில் நிர்வாகம் இல்லை. இராணுவ அதிகார அடக்கு முறைகளே காணப்படுகின்றன.

தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இன அழிப்புகள் இடம்பெறுகின்றன. வரலாற்றுப் பழமைவாய்ந்த தமிழ்த் தேசிய இனம் பாதுகாப்பின்றி பீதியில் வாழ்கின்றது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு பாலஸ்தீனர்கள் கொன்று ஒழிக்கப்பட்டபோது அன்று தோழர் வாசுதேவ நாணயக்கார இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் எம்முடன் ஒன்றாக நின்று பாலஸ்தீன நட்புறவு அமைப்பின் மூலம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை ஞாபகப்படுத்துகின்றேன்.

அன்று பாலஸ்தீனர்களுக்காகக் குரல் கொடுத்த ஜனாதிபதியின் ஆட்சியில் சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை.

வடக்கில் சிங்களவர்கள் மீண்டும் வந்து வாழ்வதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அவர்கள் அங்கு வாழ்ந்தவர்கள், நில உரிமை உள்ளவர்கள் என்ற சான்றுகளுடன் வருவதை வரவேற்கின்றோம்.

ஆனால் நாவற்குழியில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியபோது, அங்கே சிங்களவர்கள் சென்று குடியேறினால் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழ் மக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி தனது இரண்டாவது ஆட்சிக்காக பதவி ஏற்ற பின், இனப்பிரச்சினை தொடர்பாக எதையும் கூறவில்லை. இது கவலைக்குரியது.

ஆனால், பதவி ஏற்றபின் இந்து பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியர் ராமுக்கு அளித்த பேட்டியின்போது, ஷனியாட்சி கேட்டவர்கள் இப்போது ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி என்று இணங்கி உள்ளனர். இதனால் தமிழ்க் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கூற்று எமக்கு சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் எங்கள் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அப்பேச்சின்போது ஜனாதிபதி நம்பிக்கையான முறையில் பேசியுள்ளார்.

ஜனாதிபதியின் இக்கூற்றுக்களால் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இன்று சிறுபான்மை இனத்தவர்கள் என்ற வகையில் தமிழர்களும் சிறுபான்மையினரே. நமக்குத்தான் பிரச்சினைகள் உள்ளன. எனவே தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒரு செயற்திட்டத்துடன் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

இனப் பிரச்சினையை விட இன்று மிக அத்தியாவசியமாகியுள்ள எமது இன அடையாளம், காணிகள், வாழ்வாதாரம் என்பன பாதுகாக்கப்படவேண்டும்.

இன்று யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அப்படியான நிலையில் பாதுகாப்புக்காக ஆகக் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

படையினருக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதிக்கு தமிழ் மக்களான நாங்களும், ஒவ்வொரு குடிமகனும் வரி செலுத்துகின்றோம்.

பொது மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

இன்று தமிழ் மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கிளன் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன, அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் நாம் அரசுக்கு எங்கள் நல்லெண்ணத்தைக் காட்டும் வகையில் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல், வாக்களிப்பதிலிருந்து இருந்து விலகுகின்றோம். - இப்படி மாவை சேனாதிராஜா கூறினார்.

எங்களுடைய இதே முடிவு தமிழ் மக்களுக்கும், அபிமானிகளுக்கும் அதிருப்பதியை ஏற்படுத்தலாம். ஆனால் பொதுமக்களின் எதிர்கால நலன்கருதியே இந்த முடிவை எடுத்துள்ளோம். மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உண்டு என்றும் மாவை சேனாதிராஜா கூறினார்

நன்றி புலர்வு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.