Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்'!

Featured Replies

'இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்'! அரசியற் கைதிகள் குறித்து BBC கட்டுரை

'நாங்கள் குறித்த காலத்திற்கொருமுறை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு திருப்பியனுப்பப்படும் நிலை நீடிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக சிறையில் வாடுவதைவிட சாவது மேல்' என தமிழ் அரசியற் கைதியொருவர் தெரிவித்ததாக, BBC இணையத்தளம் இது தொடர்பான தனது அண்மைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், பல ஆண்டுகளாக சட்ட நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது கருணை காட்டுமாறும் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக பி.பி.சி இணையத்தளம் கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே முழுமையாகத் தருகின்றோம்:

கடந்த மாதம் சத்தியவேல் திலங்கேஸ்வரன் எனும் தமிழருக்கு 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கா மீதான குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் இத்தண்டனை விதிக்கப்பட்டது.

இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டனர். ஒரு கண்ணில் காயத்துடன் சந்திரிகா உயிர் பிழைத்தார். 30 அகவையுடைய திலங்கேஸ்வரன் தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றதை மறுத்து வந்தார். தனக்கு விடுதலை கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புப் கொண்டார்.

'குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற எனது சட்டத்தரணியின் ஆலோசனைக்கு அமைய குற்றத்தை ஒப்புக் கொண்டேன். ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட நிலையில், நான் சட்டதரணியின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். ஆனால் நீதிமன்றம் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.'

திலங்கேஸ்வரன் குற்றத்தை ஒப்புக்கொள்வதான தனது முடிவையிட்டு இப்போது வருந்துகிறார். தான் குற்றமற்றவர் என்பதை தற்போதும் வலியுறுத்தும் திலங்கேஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றில் தனக்கு நீதி கிடைக்குமென்று நம்புகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், பல ஆண்டுகளாக சட்ட நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள், 1979ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள். ஆனபோதும் இச்சட்டம் இரண்டு ஆண்டுகளின் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் ஒருவரை, 18 மாதங்களுக்கு சட்ட நடவடிக்கைகளின்றி தடுத்து வைக்க முடியும். ஆனால் இவர்களில் பலர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

50 பெண்கள் உட்பட 650க்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்கா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பிலுள்ள சிலருடன் பி.பி.சி தொலைபேசி மூலம் செவ்வி கண்ட போது, அரச தலைவர் தமது வேண்டுதலைக் கண்டுகொள்ள வேண்டுமெனக் கூறினர்.

'காவல்துறையினரால் நான் உடல் வதைக்கு உட்படுத்தப்பட்டேன், என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கான ஒரே ஒரு ஆதாரம், எனது குற்ற ஓப்புதல் வாக்குமூலம் மட்டுமே' என்றார் தமிழ் அரசியல் கைதி ஒருவர்.

கடந்த ஆண்டு இறுதிக்கட்டப் போரின் பின்னர் படையினரிடம் சரணடைந்தவர்களில் 5000 வரையான விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் இதுவரை விடுதலை செய்துள்ளது. அதே மாதிரியான கருணையைத் தம்மீது காட்டுமாறு தாம் அரச தலைவரை வேண்டுவதாக ஒரு கைதி தெரிவித்தார். மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில், 1997ஆம் ஆண்டு தான் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் தனித்தனிச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

1999ஆம் ஆண்டு குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் குற்றம் சுமத்தப்ட்ட மற்றுமோர் கைதி கூறுகையில், தனது வழக்கில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏதுமில்லை என்றார்.

'எனது கைதுக்குப் பின்னர் காவல்துறையினர் என்னை சித்திரவதைக்கு உட்படுத்தியதோடு, கட்டாயப்படுத்தி பல தாள்களில் எனது கையொப்பங்களைப் பெற்றனர். கடந்த 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றேன். அரச தரப்பின் ஒரேயொரு ஆதாரம் நான் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே' என அக்கைதி கூறினார்.

பாதுகாப்பு புலனாய்வு முகவர்களால் கண்காணிக்கப்படும் அச்சம் காரணமாக தனது குடும்பத்தினர் தன்னைப் பார்க்க வருவதற்கு மிகவும் அஞ்சுகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

விசாரணைகளின் போது உடல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதான குற்றச்சாட்டினை அரசாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.

சிறையிலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல் சேகரித்த அல்லது அவர்களின் இரகசிய நடவடிக்கைகளுக்குரிய பொருளுதவிகளை வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பரவலாக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக தொழிலாளர் தலைவராகவிருந்த பெரியசாமி சந்திரசேகரன் பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறுகிய காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் ஏனைய பலர் பல ஆண்டுகளாக சிறையில் தமது வாழ்வைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையற்றது என கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர் மேகலா சண்முகம் கூறுகின்றார்.

'இவர்களில் சிலர் விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கக் கூடும். ஆனால் இப்போது போர் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஒரு முன்னாள் தளபதி (விநாயகமூர்த்தி முரளிதரன்) இப்பொழுது ஒரு அமைச்சராகவுள்ளார். ஆயிரக்கணக்கான முன்ளாள் போராளிகளுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. எனவே இந்தக் கைதிகளையும் அரசாங்கம் விடுவிக்க வேண்டும் அல்லது இவர்களுக்கான சட்ட நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என மேகலா சண்முகம் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீதிக்காக மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்பாக அரசியல் ஆய்வாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் விசனம் தெரிவிக்கின்றார்.

'குற்றவாளி என மெய்ப்பிக்கப்படும்வரை ஒருவர் நிரபராதி என்பதே சட்ட நியதியின் அடிப்படையாகும். ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை ஒருவர் நிரபராதி என மெய்ப்பிக்கப்படும் வரை அவர் குற்றவாளியாக நடத்தப்படுகின்றார். இது நீதித்துறையில் பாரபட்சத்தை ஏற்படுத்துகின்றது' என்கிறார் ஜெயராஜ்.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளைத் துரிதப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலக மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வகை அரசியல் கைதிகளின் வழக்குகளை முன்னெடுப்பதற்கு பல சட்டதரணிகள் முன்வருவதில்லை எனவும் பின்விளைவுகளையிட்டு பலரும் அஞ்சுகின்றனர் எனவும் மனித உரிமை நிறுவனமொன்றின் பேச்சாளர் Yolanda Foster தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை மீள்பரிசீலனை செய்யுமாறு தலைமை நீதியாளரிடம் கேட்டுள்ளதாக புதிய நீதித்துறை அமைச்சர் Rauf Hakeem அண்மையில் தெரிவித்துள்ளார்;

ஆனால் தமது வளர்ந்த பருவத்தின் மூன்றில் ஒரு காலம் முதல் அரைவாசி வரையான காலப் பகுதியினை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கழித்த பல கைதிகளுக்கு இந்த காத்திருப்பு மிகுந்த கடினம் நிறைந்ததே என பிபிசி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={45248F6F-F922-4602-A7F5-7F608BC7605C}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.