Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ. நெடுமாறன் - வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை

Featured Replies

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர்

பழ. நெடுமாறன்,

ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை :

தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.

முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுவித்து தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு வேண்டிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)

Thenseide <thamiz@thenseide.com>

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதி அற்ற ஈழத்தவனுக்கு ஒரே ஒரு சாதி என்று இருக்கு இவர்களும் இப்படி ஆபத்தின் ஆழம் அறியாமல் காலை வைத்து மாட்டுப்பட்டால் யார் எமக்கு மீதி. அவர்களின் இருப்பு மிகவும் அவசியமானது. தயவு செய்து, இப்படிப் பட்ட காரியங்களில் காலை வைக்காமல் அவர்கள் பணி தொடரவேண்டும் என்பதே எமது அவா!

ஐநூறு தமிழ்நாட்டுதமிழர்களின் பிணங்களின் மீது சிங்களத்தேசியத்துடனான உறவு தேன்நிலவு கொண்டாடுகின்றது. இந்த ஒரு தமிழிச்சியின் உயிர் மட்டும் அதை கவுட்டுப் போடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழர்களைப் போட்டோ எடுத்த தமிழக பெண் வக்கீல் கைது-வைகோ கண்டனம்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 21, 2011, 16:37[iST]

சென்னை: இலங்கையின் முள்வேலி முகாம்களில் இருந்த தமிழர்களை தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் கயல் என்கிற அங்கயற்கண்ணியை சிங்கள ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். தமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி கயல் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக கயலை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கயல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தனது நண்பர் திருமலை என்பவருடன் கடந்த 19ம்தேதி இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் அவர் சென்றார். பின்னர் யாழ்ப்பாணம் போய் அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் கயலும், திருமலையும், முள்வேலி முகாமுக்குப் போயுள்ளனர். அங்கு ராணுவத்தின் அனுமதியுடன் முகாமுக்குள் சென்று தமிழர்களை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சிங்கள ராணுவம் கூறியுள்ளது.

பின்னர் முகாமிலிருந்து இருவரும் வெளியே வந்தபோது கயலின் செல்போனை வாங்கி ராணுவத்தினர் சோதனையிட்டனராம். அதில், முள்வேலி முகாமில் இருந்த தமிழர்களை கயல் புகைப்படம் எடுத்திருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து நிபந்தனையை மீறி புகைப்படம் எடுத்ததாக கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த செயல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழறிஞரின் பேத்தியை சிங்கள ராணுவம் கைது செய்துள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கயலையும், திருமலையையும் பத்திரமாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வைகோ கண்டனம்-பிரதமருக்குக் கடிதம்:

கயல் கைதுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்,

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.

தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கயல்விழியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சுகிறோம். எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, கயல்விழியைப் பாதுகாப்பாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்:

கயல்விழி கைதுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் வக்கீல்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

மதுரை தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பகத்சிங், மனோகரன் தலைமையில் மாவட்ட தலைமை நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் கொடுஞ்செயலை கண்டித்து நடத்தப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம். மேலும், வழக்கறிஞர் கயல்விழியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

thatstamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.