Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியர் சக்திதரனை இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா சபை உடனடியாக விசாரிக்க வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் சக்திதரனை இராணுவம் படுகொலை செய்ததை ஐ.நா சபை உடனடியாக விசாரிக்க வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசு அவசர கோரிக்கை

செவ்வாய், 29 மார்ச் 2011 17:53

சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியரான திரு.சம்பந்தன் சக்திதரன் (28 வயது) குரூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசு இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விடயம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியருமான திரு.சக்திதரன் சிறிலங்கா இராணுவத்தால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சீருடை தரித்த இரு இராணுவத்தினராலும், சாதாரண உடையில் இருந்த இரு பாதுகாப்பு துறையினராலும் இவர் திருநெல்வேலி சந்திக்கு அண்மையில் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நமக்கு தமிழீழம் கிடைத்தால் நீங்கள் இங்கு இருக்க போவதில்லை”என அவர் கூறியதையடுத்தே மோசமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடுமையாக தாக்கப்பட்ட அவரது உடல் மறுநாள் யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் வீசப்பட்டு காணப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் மரணமாகியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் பற்றிய விசாரணைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும், மனிதத்துக்கு எதிரான குற்றங்களுக்குமான அமைச்சர் மொரிஸ் டிலக்ஷன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்துக்கு புறம்பான மரணதண்டனைகளுக்கான விசேட கண்காணிப்பாளர் திரு.கிறிஸ்ரொவ் ஹெயன்ஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த படுகொலை பற்றியும், ஏனைய அண்மைய கொலைகள் பற்றியும் அவசரமான ஒரு விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளார்.

தமது வதிவிடத்தில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கியாளும் நோக்கிலேயே இந்த செயல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சுதந்திரமான தமிழீழம் மட்டுமே எமது மக்களின் பாதுகாப்புக்கும், தன்மானத்துக்கும் உத்தரவாதம் அளிக்கமுடியும்.என்று அமைச்சர் மொரிஸ் டிலக்ஷன் குறிப்பிட்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதி செல்வி சிறிசஜீதா சிவராஜா இந்த விடயத்துக்கு பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்களுடன் தொடர்புகொண்டு இந்த கடிதம் தொடர்பாக அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருவார்.

அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் செல்வி சிறிசஜீதா சிவராஜா சிறிலங்காவில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி எடுத்துக் கூறியிருந்தார்.

மனித உரிமைகள் பற்றி அக்கறையுள்ள சர்வதேச நிறுவனங்கள் பலவற்றையும் அணுகி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிலை பற்றி விளக்கவுள்ளது. திரு.சம்பந்தன் சக்திதரனின் மரணச்சடங்கு அவரது கிராமமான குப்பிளானில் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரு.சம்பந்தன் சக்திதரனின் மரணச்சடங்கில் பங்கு பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பங்குபற்றி, தமது அன்புக்குரிய ஆசிரியருக்கு சிறப்பான அஞ்சலியை செலுத்தினர்.

பிரதமர் அலுவலகம்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.