Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரபரவலாக்கலுடன் அதிகாரத்தை பகிராமையே தமிழக தீர்மானத்துக்கு காரணம்

Featured Replies

யுத்தத்தால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த வடபகுதி தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்காததன் பின்னணியிலேயே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டு

மென்றும்,யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் தமிழக சட்ட சபையில், ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெவித்தார். விடுதலைப் புலிகள், கேட்டதை தமிழ் அரசியல் கட்சிகள் கேட்கவில்லையென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கருத்து தெவிக்கையில், அன்றைய தமிழக தி.மு.க. அரசின் மறைமுக ஒத்துழைப்புடனும், இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளை பெற்றுக் கொண்டே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தி முடித்தது. பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவ அதிகாகள் இதற்காக இந்தியாவிற்கு பல தடவைகள் தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

யுத்தத்தை நடத்தி முடிப்பதற்கு இந்தியாவின் உதவியை பெற்றவர்கள். தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வையும் வழங்க முன் வரவேண்டும்.

இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் கேட்டதை வழங்க முடியாதென அரசாங்கம் காலத்தை கடத்துகிறது.

விடுதலைப் புலிகள் தனிநாடு கேட்டனர். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் தனிநாடு கேட்கவில்லை. நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வையே கேட்கின்றனர். அதுவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வை கோரி நிற்கின்றனர். யுத்தத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காவிட்டால் மலையகம் மற்றும் கொழும்பில் வாழும் தமிழ் மக்களும் நிம்மதியாக வாழ முடியாது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும். யுத்தக் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் சட்ட சபையில் தீர்மானத்தை கொண்டு வந்து அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் தீர்வை வழங்க முன் வரவேண்டும்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.