Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை நிராகரிக்கிறது மஹிந்த தரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை நிராகரிக்கிறது மஹிந்த தரப்பு!

Published on June 19, 2011

அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=23033

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நீதிமன்றம் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது?

19 ஜூன் 2011

Bookmark and Share

திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை அமரிக்காவில் எதிரொலிக்கிறதா?

3ஆம் இணைப்பு:-அமெரிக்க நீதிமன்றின் அழைப்பாணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் :

அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

2ஆம் இணைப்பு:-அமெரிக்க நீதிமன்றம் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது?

18-06-2011 -1:54

அமெரிக்க மத்திய நீதிமன்றமொன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதிக்கு எதிராக மத்திய நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் வழக்குகளின் அடிப்படையில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளானோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிதி ரீதியான நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வொஷிங்டன் டி.சீ மத்திய நீதிமன்றில் ஆறு குற்றச்சாட்டுக்களுக்காக சித்திரவதைக்கு உள்ளானோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அழைப்பாணை குறித்த தகவல்கள் நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாணவர்களான ராகிஹார் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் எகஸன் எகேன்ஸ்ட் ஹங்கர் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ரீ.தவராஜா ஆகியோரின் உறவினர்களினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் படைச் சேனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2ஆம் இணைப்பு:- திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை அமரிக்காவில் எதிரொலிக்கிறதா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்த முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் கொட்டகதெனியவின் நடவடிக்கை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

கொட்டகதெனிய தற்போது மேல் மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வருகிறார்.

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், விசேட அதிரடிப்படையினரை அங்கு அனுப்பிவைக்குமாறு கொட்டகதெனிய உத்தரவிட்டிருந்தார். எனினும், அதுதொடர்பாக எவரிடமும் அனுமதியைப் பெறாது பாதுகாப்பு அமைச்சினால் தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி அதிரடிப்படையினரை அங்கு அனுப்பிவைத்துள்ளார்.

அப்போதிருந்த காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பிவைத்திருந்த இரகசிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2006 ஜனவரி 02ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரால் மனோகரன், ரகீர், யோகராஜா ஹேமசந்திரன், லோகிராஜா ரொஹான், தங்கதுரை சிவந்தன், சண்முக ராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருகோணமலை கடற்கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மாணவர்களை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினர் சில கைக்குண்டுகளை அந்த இடத்தில் வைத்து அவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும், தம்மீது தாக்குதல் நடத்த முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.

அதேவேளை, கொல்லப்பட்ட மாணவர்களின் சடலங்களைப் புகைப்படம் எடுத்த சுடர் ஒளிப் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கி தாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கொட்டகதெனிய, திருகோணமலையில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினரை அங்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62782/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.