Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு ஒதுக்கிய 65 தையல் இயந்திரங்களில் 15 சிங்கள குடியேற்றவாசிகளுக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு ஒதுக்கிய 65 தையல் இயந்திரங்களில் 15 சிங்கள குடியேற்றவாசிகளுக்கு

19 டிசம்பர் 2011

chandrasri_CI.jpg

யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட 65 தையல் இயந்திரங்களில் 15 சிங்கள குடியேற்றவாசிகளுக்கு

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட அறுபத்தைந்து தையல் இயந்திரங்களில் 15 இனை நாவற்குழியினில் அடாத்தாக குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு வழங்க வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள வருடாந்த நிதி ஒதுக்கீட்டினில் வடமாகாணசபைக்குட்பட்ட ஜந்து மாவட்டங்களிலுமுள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கே இவ்வுதவிகள் வழங்கப்படுவது வழமையாகும்..இந்நிலையில் இவ்வாண்டிற்;கென தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளது பெயர் விபரங்களை அனுமதிக்காக ஆளுநர் சந்திரசிறியிடம் அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.அவ்வேளையிலேயே அதிகாரிகளால் தெரிவு செய்யப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து 15 பேரது விபரங்களை வெட்டியெறிந்த ஆளுநர் சந்திரசிறி நாவற்குழியில் அடாத்தாக குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு அவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இப்பகுதிகளில் அடத்தாக குடியேறியுள்ள குடும்பங்களுக்கு அரசும் விகாரைகளும் சத்தமின்றி பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்துகொண்டே வருகின்றன.இப்போது சட்டவிரோத குடியேற்ற வாசிகளென அரசே கூறிக்கொண்ட இவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியும் உதவிகளை அள்ளிக்கொட்ட முன்வந்துள்ளார்.

இதனிடையே இந்திய அரசால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளில் யாழ்.குடாநாட்டிற்கென ஒதுக்கப்பட்டவற்றினில் ஜநூறினை சர்ச்சைக்குரிய வகையினில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மாற்றியமை தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஒய்ந்திருக்கவில்லை. இதற்கிடையே இப்புதிய சர்ச்சைகள் எழுந்;துள்ளன.

ஏற்கனவே இந்திய அரசு வடக்கு விவசாயிகளுக்கென ஒதுக்கிய 500 டிராக்டர்களில் ஒரு பகுதியையும் இதே போன்று வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி சிங்கள பகுதிகளுக்கு மாற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/71596/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.