Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் - மன்னிப்புச் சபை

Featured Replies

இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் - மன்னிப்புச் சபை

இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்ப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வழிகோலும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

போர் முடிவுற்ற பின்னரும், இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைய வில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் சாம் சர்ப்பாரி (Sam Zarifi) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தவறான திசையில் பயணிப்பதாகச் சர்வதேச சமூகம் கருதுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் சாம் சர்ப்பாரி((Sam Zarifi) குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் விமர்சனங்களை வெளியிடுவோர் பகிரங்கமாக அச்சுறுத்தப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11501

  • தொடங்கியவர்

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானமானது, இலங்கையின் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வலியுறுத்தும் விடயமாக அமைவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குறிப்பிட்டுள்ளது

இலங்கையில் யுத்தத்தின் போது புரியப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜெனீவாவில் இலங்கை மீதான தீர்மானத்திற்கு கிடைத்த ஆதரவானது, இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாடு குறித்து அனைத்துலக சமூகம், தமது பலமான கோரிக்கையை வெளிப்படுத்தியிருக்கும் விடயமாகவே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமானது தனது பொறுப்புக்களை தட்டிக்களித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசின் செயற்பாடுகளில் சர்வதேசம் திருப்தி கொள்ளாத காரணத்தால், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த பிரேரணை வெற்றியடையக் காரணமாக அமைந்ததாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் சட்ட இயக்குனர் Juliette De Rivero சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவை நிராகரிப்பதற்காக இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவிலும் ஏனைய வெளிநாட்டு அரசாங்கங்களின் மத்தியிலும் மேற்கொண்ட பரப்புரை தோல்வியடைந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா கூட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஒளிப்படம் பிடிக்கப்பட்டு, அவர்களின் படங்கள் ஊடகங்களிலும் இணையங்களிலும் வெளியிடப்பட்டதுடன், அவர்கள் 'தேசத்துரோகிகள்' எனவும் முத்திரை குத்தப்பட்டனர்.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் தோல்வியடைந்த இலங்கை அரசாங்கமானது, இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதன் ஊடாக தனது சொந்த மக்கள் ஆபத்தைச் சந்திக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது என்று Juliette De Rivero சுட்டிக்காட்டியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.