புதிய பதிவுகள்

852194602.jpgயாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம்  அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல்  தொடர்பில்  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி  காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது.இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ/ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால்,
1385833596.jpgயாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன்வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு  தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்!முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர்.யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11) இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள்
11 Nov, 2025 | 04:12 PMimageயாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மானிப்பாயில் போதை மாத்திரைகள், கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது | Virakesari.lk
852194602.jpgயாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன்வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம்  அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல்  தொடர்பில்  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி  காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது.இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ/ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும். தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர். தற்போதுள்ள சேவைத் தேவைகள் காரணமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு தாதியரும் இந்தக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது.அத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கொடுப்பனவுகளுக்கான தெளிவான உறுதிப்படுத்தலுக்காக, சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் ஏனைய ஒவ்வொரு கடமை நேரங்களுக்கும் தனித்தனி வருகைப்பதிவேடுகளை பேணுவதற்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதால், பல்வேறு கடமை நிலைகளை இலகுவாக அடையாளம் காண்பது ஒரு பாரிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், சேவைத் தேவையின் பேரில் செய்யப்படும் மேலதிக கடமைகளுக்கான உரிய கொடுப்பனவுகளைக் கூட இழக்கும் அபாயம் உருவாகலாம் என்பதும் தெளிவாகிறது.வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!
AFP__20251110__83JZ4G3__v1__HighRes__Ecuஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு.ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.உடனடியாக ஒரு சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று
தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்காபடக்குறிப்பு, கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் புகைப்படங்கள்கட்டுரை தகவல்முரளிதரன் காசிவிஸ்வநாதன்முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ்10 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிவந்த ஐந்து தமிழர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.கடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 27 வயதான தளபதி சுரேஷ். இவர் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், 36 வயதான இசக்கிராஜா. இவர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த புதியவன், கலப்பை பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோர் அந்த மூவர்.இவர்கள் அனைவருமே மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டுவந்த மின்சாரத் திட்டம் ஒன்றில் பணியாற்றிவந்தனர். இவர்கள் ஐந்து
உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.!Vhg நவம்பர் 09, 2025AVvXsEh6P9OUgkoo5IMWz3uqQ43_CaQep3yTiNDhao04J1nuPkkO34CzcsISKcTWtTLDmHiZzD1iDaqMvYlYS2Fp8P0vyRQwCYHnlyejwl0MS-tU4GU6--zA15-CyPdyXKzoWcroEgrczkd2xqNP7SKnp3_sSKZLtmnZx956nZfLk3X4VheLENFTNnqARgUUVj9zஇலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார்.கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. 
ஓய்வூதியர்களின் அரசியல் : பாகம்-இரண்டு ? - நிலாந்தன்facebook_1762519611901_73925430582753226ஓய்வு பெற்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பும் அங்கு அவர் ஆற்றிய உரைகளும் சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் நடக்கலாம் என்ற சந்தேகம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் ஒரு சூழலில், இளஞ்செழியனைப் போன்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய பலரும் இப்பொழுது  உற்சாகமாகக் காணப்படுகிறார்கள்.இளஞ்செழியனுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் அவருடைய சகோதரர்-அவர் ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் தீவுப்பகுதிக் கிளையில் பொறுப்பில் இருப்பவர்-தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு ஊடாக தமையனை முதலமைச்சராக்கி விட வேண்டும் என்ற கனவோடு செயல்படுவது யாழ்ப்பாணத்தில் எல்லாருக்கும் தெரிந்த விடயம்.ஆனால் தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் இளஞ்செழியனுக்கு சாதகமாகச் சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் சுமந்திரன் செழியன் உள்ளே வருவதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்
சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்சிறுநீரக பாதிப்பு, லான்செட், இதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்மோகன்பிபிசி தமிழ்10 நவம்பர் 2025, 02:22 GMTஇந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்)2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட
சிறுமி ஒருவர் புத்தகத்தை வாசிக்கும் காட்சிபட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா?கட்டுரை தகவல்அனலியா லோரென்டேபிபிசி நியூஸ் முண்டோ8 நவம்பர் 2025" நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்,"மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார்.மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது.ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான்.வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது.மூளையும் மனமும்ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும்."மூளை என்ன
ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?பட மூலாதாரம், Getty Images31 அக்டோபர் 2025பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும்.அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம்.ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும்.பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது.ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம்.
571315221_122197693334293440_65666361895இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித
2dpY.gifஅதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்!மிக அருமையான வினா!குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்!ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ?ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ?அப்போதும் உதைக்கிறதே!குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்?ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும். இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை!குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்!மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு!சீராக, ஒரே வேகத்தில்
image?url=https%3A%2F%2Fada-derana-tamilபதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.‌ ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து
Bahubali Rocket, LVM3, ISROபட மூலாதாரம், X/@isroபடக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்சாரதா விபிபிசி தமிழ்3 நவம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அந்த நிலைமை இல்லை. இது இந்திய விண்வெளி துறைக்கு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், "செயற்கைகோள் ஏவுதல் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. வானிலை ஒத்துழைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் வெற்றியடைந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறதுOctober 21, 2025வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author).vvg-image.png?resize=681%2C330&ssl=1தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation:எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்குத் தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று  சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..!Vhg நவம்பர் 06, 2025AVvXsEhXRVAJPvSMfdXYOtExyIxASKYkI34GvGTJcuWyKCNYljmz1VQj-Hwrs64uurN6fRyyDPG0Vg0hEVSdhEjiRMZ04mhxVsAj03uvvCpFMw8KaXk-vnd4PQ3m9Ly-U1zs01eA4nKehh_XcXKAY95qWux25gKSnauAIQKVZvDktNLd21KtMGxWT2F83BjSoQeCஅண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது.போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள்ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக  வாழ்க்கை மற்றும் பணத்தின் மீதான  மோகம்
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே----------------------------------------------large.Attic.jpgஎன்ன சத்தம் அதுஎலியாக இருக்குமோஇரவிரவாக விறாண்டியதே என்றுபல வருடங்களின் பின்பரணுக்குள் ஏறினேன்எலி என்றில்லைஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும்கண்டே பிடிக்க முடியாதஒரு காடு அது என்றுஅங்கே நான் விக்கித்து நிற்க'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார்காடு வளர்த்துஎலி பிடிக்க என்னை மேலே ஏற்றியஎன்னுடைய கங்காணிமுப்பது வருடங்களுக்கு முந்தி இருந்தவாழ்க்கையின் அடையாளம் கூடஅங்கே தெரிந்ததுபழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும்இந்தப் பூகம்ப தேசத்தில்தலைக்கு மேல கத்திபரண் தான் போலமொத்தத்தையும் அள்ளி விற்றாலும்சில பணம் கூட தேறாதுஅள்ளுகிற கூலி நூறுஅது அவ்வளவும் நட்டம்ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசைஇன்னும் இது இருக்குதே என்றுநினைவில் உருகிமெல்லிதாக தொடஇரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தனசூட்கேசின் அடுத்த பக்கத்தில்அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால்'என்னப்பா, அங்கே சத்தம்............ஏதோ ஓடுதோ.................''காலில் தடக்கிஏதோ சாமான் உருளுது
ரி20  கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்;  தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்Published By: Vishnu03 Nov, 2025 | 12:30 AMimage(நெவில் அன்தனி)தென் ஆபிரிக்காவுக்கு எதிராக  லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது.அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார்.தனது 131ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பாபர் அஸாம் 4302 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் ஷர்மா 159 போட்டிகளில்  பெற்ற  4231 மொத்த ஓட்டங்கள் என்ற சாதனையை இதன் மூலம் பாபர் அஸாம் முறியடித்தார்.இந்தியாவின் மற்றொரு முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.written by admin August 3, 2025IMG_1048.jpg?fit=1170%2C780&ssl=1 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும்.நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க
 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.written by admin November 1, 20251000173468.jpg?fit=1080%2C720&ssl=1பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது.ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள்