புதிய பதிவுகள்2

உங்களுக்கு தெரியாத வட கொரியா

1 day 14 hours ago
ஜேர்மனியின் ஜனநாயக சகதியில் கிடந்து கஸ்டபடாமல், வடகொரியா, ரஸ்யாவுக்கு போறது அண்ணை? எதுவும் வேண்டாம். கொஞ்சம் சர்வாதிகாரம் கூடிய நாடு ஹங்கேரி. ஈயு நாடு எனவே நீங்கள் நாளைக்கே அங்கே போகலாம். மொழி பிரச்சனையிம் குறைவு. செய்வீர்களா?

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்

1 day 15 hours ago
நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள். அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்... இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...

உங்களுக்கு தெரியாத வட கொரியா

1 day 16 hours ago
குள்ளன் எப்ப அணுகுண்டு பரிசோதனை செய்யுறான்...எப்ப ரொக்கற் பரிசோதனை செய்யிறான் எண்டு தெரியாத மேற்குலகத்தினருக்கு..... அங்கை நடக்கிற சம்பவங்கள் எப்பிடி தெரிய வந்திருக்கும்????? எல்லாம் அவன்ர ஊடகம் சொன்னாப்பிறகுதான் இவையள் கொக்கரிக்க ஆரம்பிப்பினம்.😂 இவ்வளவு கதைக்கிறவையள் ஏன் சீனாவில் நடக்கும் அவலங்களை பற்றி கதைக்கிறேல்லை?😎 வடகொரியா கொடுமை என்றால் தென்கொரியாவில் ஊழலும் கொள்ளையும் வருடாந்த திருவிழா போல்..... ஒவ்வொரு வருடமும் அரச அதிகாரிகளையும் பிரதம மந்திரிகளையும் சிறையில் அடைப்பது வழக்கமாகிக்கொண்டு வருகின்றது. உலகில் எல்லா மனித இனங்களும் ஒரே குணத்தை உள்ளவர்கள் அல்ல. ஒரு சில இனங்களுக்கு சொன்னால் புரிந்து செய்வார்கள்.பல இனங்களிற்கு பிரம்பும் கையுமாக இருக்க வேண்டும். இதுதான் இன்றைய உலகிற்கு அவசியமாகிறது. ஜனநாயகம்,சுதந்திரம் எனும் பெயரில் இன்றைய உலகில் நடக்கும் யுத்தங்களை பார்க்கும் போது.... கட்டுப்பாட்டுடன் வாழும் உலகம் சிறந்ததாகவே தெரிகின்றது.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day 16 hours ago
விட்டுத்தள்ளங்கள் விசுகர்! கட்சி நிதி என்பது எல்லா நாடுகளிலும் உள்ள விடயம். அநேகமான நாடுகளில் கட்சி அங்கத்தவர் சந்தா கட்டணம் கட்டாயம் எனும் ஒரு விடயம் உள்ளதை தெரியாமல் பரிதவிக்கின்றார்கள். தமிழ் நாட்டில் ஏனைய கட்சிகளின் நிதி சேகரிப்புகளை அறியாமல் பேசுகின்றார்கள்.

உங்களுக்கு தெரியாத வட கொரியா

1 day 16 hours ago
இந்த அன்பான மக்கள் தலைவனை பார்த்து வியந்து அதனால் கவரபட்ட சீமானும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக இருக்கும் என்று இன்று 19 அறிவித்துள்ளார்.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day 16 hours ago
பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day 17 hours ago
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார் விஸைக்கு தாங்கள் கணித்த வாக்குசதவீதம் விஸை காங்கிரசுடன் கூட்டணிவைத்தால் என்று கருத்துக்கணிப்பை வைத்து விட்டு பிறகு விஜையின் வாக்கு சதவீதம் என்றுஅடிச்சு விட்டிருக்கிறார். ஒரு கருத்துக்கணிப்பையும் நம்ப முடியாது. எல்லாமே கருத்துத்திணிப்புதான்.இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளில் கட்சியே தொடங்காத ரஜனி அரசியலுக்கு வந்தால் யாருக்கு வாக்குப் போடுவீர்கள் என்றெல்லாம் கருத்துத்திணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அங்கே நாதக இருக்காது மற்றையவர்கள் என்று இருக்கும். இதை எல்லாம் மீறி தனித்து நின்று தேர்தல் ஆணையத்தால் கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட பல கருத்துத்திணிப்புகள் நாதகவை மற்றவர்கள் என்ற வகைக்குள்தான் வைத்திருக்கறார்கள். ஊடகங்களும் 3 முனைப்போட்டி என்றுதான் கருத்துத்திணிப்புகளைச் செய்கின்றன. மக்கள் முட்டாள்கள் அல்ல. இந்தக் கருத்திணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

1 day 18 hours ago
நன்றி கவிஞரே.................. நீங்கள் நலமா.................... சமீப நாட்களில் நான் எதுவுமே எழுதவில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் அப்படி இருக்க முடியவில்லை. கவிஞரின் பெயரையும், ஜெயமோகனின் பெயரையும் முற்றாக தவிர்க்க நினைத்தேன். கவிஞரின் பெயர் இங்கு வந்தால், அது ஒரு சினிமா உரையாடலாகவும், கவிஞர் எதிர் வைரமுத்து என்றும் போய் விடுமோ என்று நினைத்தேன். ஜெயமோகன் அடிவாங்காத இடமே கிடையாது தானே............🤣. அவர் உள்ளே வந்தால் இந்த திரியே வெறும் வாய் கலப்பாகத்தான் முடியும்...............🤣. 'சக்கரவர்த்தி உலா' என்று நான் இந்த உரையாடலில் முன்னர் குறிப்பிட்டிருந்த ஒரு கட்டுரையை எழுதியது ஜெயமோகனே......................

உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்

1 day 18 hours ago
வீட்டில் 80 வீதமான பொரியலுக்கு நாம் அவகாடோ எண்ணெய்யை பயன்படுத்துகின்றோம் இப்போது. மிகுதி 20 விகிதத்தில் 15 வீதம் நல்லெண்யையும் 5 வீதம் canola எண்ணெயையும் பயன்படுத்துகின்றோம். இறைச்சி, மீன் marinade பண்ண , salad போன்றவற்றுக்கு ஒலிவ் எண்ணையை பாவிக்கின்றோம். வீட்டில் பார்ட்டி, விருந்தினர்கள் கனக்க எனில் இருக்கவே இருக்கு சூரியகாந்தி பூ எண்ணெய்.😁

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

1 day 18 hours ago
உங்கள் பொறுப்புதுறப்பை தாண்டியும் - தொடர்பிருப்பதாக எனக்கு படுகிறது. கிட்டதட்ட ஒரே விடயம் (கண்ணதாசன் கொள்ளை அடிக்கவில்லை எனில்) ஆனால் பார்க்கும் பார்வை வேறு படுகிறது.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

1 day 18 hours ago
ஆம்…உங்களுக்கு பத்திரிகா தர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது. ஒரு குற்றசாட்டை எழுதினால் அதற்கு சம்பந்த பட்டவரின் பதிலையும் கேட்டு வெளியிடுவார்கள். அதனால் குற்றசாட்டு இல்லை என்றாகாது. உழைப்பு - நான் எப்போதும் என் சொந்த உழைப்பில்தான் சாப்பிடுவேன் அண்ணை. மற்றையவரிடம் திரட்டி அல்ல. அதான் விஜைய வெளுக்க எண்டு சபரீசனை தேர்தலுக்கு சிலமாதம் முன்பே சந்தித்து பெட்டி வாங்கியாச்சே.

இது தமிழ்நாடு - சுப.சோமசுந்தரம்

1 day 19 hours ago
இப்பொழுது தேர்தல் நேரம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் வாக்குகள் கிடைக்குமென்றால் மட்டும் வருவார்கள். கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கே திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இது ஓட்டு அரசியல் இல்லை என்கிறீர்கள். எப்படி வருவார்கள்? நாம் தமிழர் கட்சியைப் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்களே போலி தேசியம் பேசித் திரிபவர்கள் என்று. இதற்கு மேல் என்ன செல்ல இருக்கின்றது?

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

1 day 19 hours ago
உங்களுடைய விவாதங்களுக்கும் எனது இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரதியின் பாட்டை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணதாசன், அம்பிகாபதி திரைப்படத்துக்கு எழுதிய பாடல் வரிகள். கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே…

உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்

1 day 19 hours ago
இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன். சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது. அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 day 19 hours ago
இதோ இது என் நெஞ்சிலே .......... படம் : வட்டத்துக்குள் சதுரம் ....... இசை: இளையராஜா ........நடிப்பு : லதா & சுமித்ரா ......... 😍 ஒருமுறை நடிப்புடன் பாட்டையும் கேட்டுப்பாருங்கள் ........ அமிர்தம்.......!
Checked
Sat, 03/21/2026 - 13:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed