Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே. தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை. எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர். அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார். இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில், அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள். நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/234873
  3. நியூசிலாந்து அவுஸ்திரேலியா Australia New Year Cerebration: Sydney Welcomes 2026 with Jaw-Dropping Midnight Fireworks | AQ1G சிட்னி துறைமுகத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு பட மூலாதாரம்,EPA ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சமீபத்தில் சிட்னி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பட மூலாதாரம்,DAN HIMBRECHTS/EPA/Shutterstock பிரதமர் ஆன்டணி ஆல்பனீஸி தனது 'நியூ இயர்ஸ் ஈவ்' உரையில், வழக்கமாகப் புத்தாண்டின் தொடக்கத்தில் உணரப்படும் மகிழ்ச்சியானது, கடந்த ஆண்டின் சோகத்தால் தணிக்கப்பட்டதாக அவர் கூறினார். https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A9f37d491-1247-4e44-b997-22459aa626d3#asset:9f37d491-1247-4e44-b997-22459aa626d3
  4. தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர். இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjtvgj3y03cfo29nwqune9sh
  5. சர்வதேச மேசைப்பந்தாட்ட தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் இலங்கையின் இளம் நட்சத்திரம் டாவி Published By: Vishnu 31 Dec, 2025 | 06:56 PM (நெவில் அன்தனி) சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடைசியாக டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கான உத்தியோகபூர்வ தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் கல்கிஸ்ஸை சென். தோமஸ் மாணவன் டாவி சமரவீர முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த மைல்கல் சாதனையை டாவி சமரவிக்ரம படைத்துள்ளார். எந்தவொரு வயது பிரிவிலும், எந்தவொரு பாலினத்திலும் உலக தரவரிசையில் இலங்கை வீரர் ஒருவர் உயரிய இடத்தை எட்டிப் பிடித்துள்ளது இதுவே முதல் தடவையாகும். இத்தாலியின் பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் லிஞ்ஞானோ 2025 போட்டியில் (WTT Youth Contender Lignano 2025) சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் டாவி சமரவிக்ரம தரவரசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றியுடன் டாவி சமரவிக்ரம 200 தரவரிசை புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் டாவி சமரவிக்ரம 3ஆம் இடத்தில் இருந்தார். அப்போது, 'நான் அடுத்து வருடம் உலக தரவரிiசியல் முதலிடத்தைப் பிடிப்பேன்' என டாவி சமரவிக்ரம நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அவர் 11 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவாறு புத்தாண்டை ஆரம்பிக்கவுள்ளார். இப்போது 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்து சென். தொமஸ் கல்லூரிக்கும் இலங்கைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார். சென் தோமஸ் கல்லூரியில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வருடத்தின் மிகச் சிறந்த விளையாட்டு சாதனையாளர் என்ற விருதை டாவி சமரவிக்ரம வென்றெடுத்தார். இப் பாடசாலையின் வரலாற்றில் மிக இள வயதில் இந்த விருதை வென்றெடுத்த முதலாவது வீரர் டாவி சமரவிக்ரம ஆவார். https://www.virakesari.lk/article/234886
  6. “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 885 பேர் கைது! 31 Dec, 2025 | 02:25 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 767 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 527 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 25 கிலோ 808 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 16591 கஞ்சா செடிகளும், 066 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1210 போதை மாத்திரைகளும், 101 கிராம் 320 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 060 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 18 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/234837
  7. புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து உலகின் பல்வேறு பகுதிகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன. பசிஃபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கிரிடிமதி (Kritimati) தீவு முதல் இடமாக 2026-ஆம் ஆண்டை வரவேற்றது. இந்த இடம் கிரிபட்டி குடியரசின் ஒரு பகுதி. இங்குதான் எப்போதுமே புத்தாண்டு முதலில் பிறக்கிறது. படக்குறிப்பு,கிரிடிமதி தீவு தான் முதலில் புத்தாண்டை வரவேற்றது அதேபோல், நியூசிலாந்தும் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய நகரங்களில் வானவெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Andy Corson படக்குறிப்பு,நியூசிலாந்தின் தீவுகள் விரிகுடாவில் (Bay of Islands) புத்தாண்டு வரவேற்கப்பட்டது https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A8cdf8463-159c-4819-84f3-d39b73349b57#asset:8cdf8463-159c-4819-84f3-d39b73349b57
  8. 'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook படக்குறிப்பு,டியூட் கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர். 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி பின்வரும் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன. மதகஜராஜா கூலி டூரிஸ்ட் ஃபேமிலி குட் பேட் அக்லி ஆண்பாவம் பொல்லாதது பறந்துபோ டிராகன் டியூட் மாமன் குடும்பஸ்தன் தலைவன் தலைவி பைசன் மிடில்கிளாஸ் மர்மர் 3 பிஹெச்கே திரையரங்குகளில் சில படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடின. பல படங்கள் ஓடிடி, மற்ற மொழிகள், சாட்டிலைட் உரிமம் போன்றவற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாக அமைந்தன. எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவை என்று திரைத்துறையினர் குறிப்பிட்ட திரைப்படங்கள். தக் லைஃப் வீரதீர சூரன் விடாமுயற்சி கிஸ் மாஸ்க் ரெட்ரோ குபேரா இட்லிக்கடை மதராசி காதலிக்க நேரமில்லை நேசிப்பாயா ஏஸ் அகஸ்தியா கேங்கர்ஸ் மாரீசன் படைத்தலைவன் கொம்புசீவி ஃபீனிக்ஸ் தேசிங்குராஜா 2 பிளாக்மெயில் பாம் டீசல் காந்தா கும்கி 2 பட மூலாதாரம்,@MadrasTalkies_ படக்குறிப்பு,தக்லைஃப் வரவேற்பு பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. வணிக ரீதியாக ஹிட் ஆகாவிட்டாலும் லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடமை, புதுமுகங்களின் மாயகூத்து, டேனியல் பாலாஜியின் பிபி 180, காந்தி கண்ணாடி, அதர்ஸ், வெள்ளக்குதிர, ஒண்டிமுனியும் நல்லபாடனும், அங்கம்மாள், ஹவுஸ்மேட்ஸ், பாலாவின் வணங்கான், எமகாதகி, வேம்பு, லெவன், லவ் மேரேஜ், டிஎன்ஏ, மார்கன், கெவி, வானரன், பேட் கேர்ள், தண்டகாரண்யம், ஆரோமலே, மெட்ராஸ் மேட்னி, ஓஹோ எந்தன் பேபி, பெருசு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆர்யன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. பட மூலாதாரம்,X/@MillionOffl படக்குறிப்பு,டூரிஸ்ட் ஃபேமிலி பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் 2025-ஆம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் டிராகன், டியூட் என 2 வெற்றி படங்களை கொடுத்தார். இசைத்துறையை பொறுத்தவரையில் சாய் அபயங்கர் வரவை திரைத்துறையினர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அவரது இசையில் வெளியான டியூட் படத்தில் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டின் புதுமுக இயக்குநர்களில் அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி), ராஜேஸ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), மிடில் கிளாஸ் (கிஷோர் முத்துராமலிங்கம்), சுரேஷ் ராஜகுமாரி (சிறை) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பட மூலாதாரம்,AGS Productions படக்குறிப்பு,டிராகன் 'சினிமா வியாபாரமே மாறி விட்டது' 2025 தமிழ் சினிமா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''சினிமா வியாபாரமே இப்போது மாறி விட்டது. ஓடிடி மூலமாக 38 சதவிகித வருமானம், திரையரங்கம் மூலமாக 21 சதவிகித வருமானம், சாட்டிலைட் 12%, ஆடியோ 5% மற்றும் பிற வருமானம் என நிலைமை மாறியுள்ளது. சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வெற்றி பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் இந்த ஆண்டு ஓடாதது மைனஸ்." என்றார். டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, 3 பிஹெச்கே, மாமன், குடும்பஸ்தன் உள்ளிட்ட குடும்ப படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@Manikabali87 படக்குறிப்பு,குடும்பஸ்தன் '1,163 தியேட்டர்கள் இருக்கிறது, ஆனாலும்' தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேசுகையில், ''2025-ஆம் ஆண்டு 285 படங்கள் வந்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். அதில், மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, மாமன், டியூட், டிராகன், பைசன், தலைவன் தலைவி, காந்தாரா சாப்டர் 1 போன்ற சில படங்களே திரையரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன." என்றார். பெரிய நடிகர்கள் படங்களை விட, நல்ல கதைதான் ஜெயிக்கும் என்பதை 2025-ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் இப்போது 1,163 திரையரங்குகள் இருக்கின்றன. பழைய திரையரங்குகள் மூடப்படும் அதேநேரத்தில் புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்பத்துடன் பல திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனாலும், வெற்றி படங்களின் எண்ணிக்கை குறைவு" என்றார் அவர். இயக்குநர் பாண்டிராஜ் கருத்து பட மூலாதாரம்,Sathyajothi films இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக கூறப்படும் 'தலைவன் தலைவி' படத்தின் இயக்குநரானபாண்டிராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில் ''இந்த ஆண்டு வெற்றி படங்களின் பட்டியலில் தலைவன் தலைவி தவறாமல் இடம்பெறுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததுதான் காரணம்." என்றார். 'சத்தம் அதிகம்' என சில விமர்சனங்கள் வந்தாலும் கணவன், மனைவி, மாமனார், நாத்தனார், கொழுந்தன், அப்பா, அம்மா என திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பல 'உறவுகளை' படம் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தனர் என்றார் அவர். "எப்போதுமே உணர்வுப்பூர்வமாக, குடும்ப கதைகளை சொல்லும் படங்கள் தோற்பதில்லை. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வரும்போதே இந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம், இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என பார்வையாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். திரையரங்க அனுபவத்தைப் பெறவே சில படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். சில படங்கள் ஓடிடி-யில் பெரிய ஹிட் ஆகும். அதுவும் வெற்றி படம்தான். சினிமா இன்று மாறிவிட்டது.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ். 'பல படங்களின் தலைப்பு கூட மனதில் பதியவில்லை' திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ''இந்த ஆண்டு 25 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என 3 தரப்புக்கும் லாபம் கொடுத்தன. 60 படங்கள் தப்பிவிட்டன. அதாவது, இந்த படங்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. மீதமுள்ள 200 படங்கள் ஏமாற்றம் தந்தவை. தக்லைஃப், இட்லி கடை, விடாமுயற்சி, ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் இழப்பை ஏற்படுத்தின. இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்களின் தலைப்பு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் மனதில் கூட பதியவில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx232zp8pjvo
  9. நல்லது அண்ணா. நாளை புதிய வருடப்பிறப்பில் புதிய திரியை துளித்துளியாய் பகுதியில் @goshan_che அண்ணை திறவுங்கோ. நான் சரியான பயனாளிகளை இனம் கண்டு முடிந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்தி சொல்கிறேன். இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.
  10. Today
  11. இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.
  12. நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம். நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  13. மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது
  14. The U.S. Postal Service (USPS) consistently loses billions annually, reporting a $9.5 billion net loss in Fiscal Year 2024 and a $9 billion loss in FY 2025, despite revenue increases from price hikes. These losses stem from declining traditional mail volume, rising operating costs, inflation, and past obligations, though a 2022 reform act significantly eased retiree health benefit funding, improving "controllable" losses but not overall GAAP result அமெரிக்காவிலும் தபால் திணைக்களம் பல பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடமும் இழக்கிறது. இதை சரிப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது.
  15. துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.
  16. அண்மையில் தமிழ் தேசிய முன்னணியில் நல்லார் சபை உறுப்பினரின் மகன் ஒருவரும் கஞ்சா பொதியுடன் பிடிபட்டார் இதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
  17. கோசான் யாருடைய குறூப் என்பதைவிட ஏன் இப்படிப்பட்டவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்? கடந்த தேர்தலிலும் கட்சிக்காக வேலை செய்தவர்கள் கட்சி விசுவாசிகளை புறம்தள்ளி தமது சொல் கேட்கக் கூடியவர்களை தராதரம் பார்க்காது போட்டியில் நிறுத்தியதை அவதானித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். போதாக்குறைக்கு டக்ளஸ் கைது என்றவுடன் சிறீதர் படமாளிகையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்த சிவிகே சிவஞானம் எங்கே என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். ரணில் கைது செய்யப்பட்டவுடன் குரல் கொடுத்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியை காப்பாற்றிய டக்ளஸ் கைதின் போது ஏன் மெளனமாக இருக்கிறார் என்றும் எழுதுகிறார்கள்.
  18. சிறி இதிலே போதையில் விழுந்து கிடப்பவர் இப்போது ஒரு பிரச்சனையை முகநுhலில் கிழப்பியுள்ளார். “யாழ் மையவாதத்தை உடைக்க வேண்டும்” இது நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி தமிழர்களால் பாவிக்கப்பட்ட சொல். நீண்ட காலத்தின் பின் மீண்டும் கேள்விப்படுகிறேன். ஆனாலும் இதுபற்றி சரியான வரவிலக்கணம் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே எப்போதும் முதலாளியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதே “யாழ் மையவாதம்” என எண்ணுகிறேன். யாராவது இதுபற்றி விளக்கம் இருந்தால் எழுதுங்கள். @goshan_che இதுபற்றி கேள்விப்பட்டீர்களோ?
  19. தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்! ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது. யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது. டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1457913
  20. கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். https://athavannews.com/2025/1457928
  21. 📌 What Happened on 21 October 1987? On 21 October 1987, during Operation Pawan — the military campaign by the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka — a special operation was carried out against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) base at Gurunagar, in the Jaffna Peninsula. Wikipedia+1 ⚓ Attack by Indian Navy MARCOS The Indian Navy’s Marine Commandos (MARCOS — then known as Indian Marine Special Forces) were tasked with neutralizing LTTE’s small naval/boat assets and disrupting their supply routes to Jaffna. Wikipedia A team of about 18 commandos led by Lt. Arvind Singh conducted an amphibious raid on LTTE positions at Gurunagar. They swam long distances and used small assault craft and floating rafts laden with explosives to approach their targets stealthily. Daily News Archives+1 The commandos rigged explosives on the jetty and on LTTE speedboats moored there and detonated them. They then disengaged and returned under fire without suffering casualties among their own team. Daily News Archives 📌 Important Clarification: This was not a large-scale strike on a “major port infrastructure” — Gurunagar did not have a formal harbour with large concrete port buildings or shipping docks comparable to Colombo or Trincomalee. It was essentially a fishing and small-boat landing area/jetty used by LTTE marine elements and local fishermen, not a fully developed commercial port. Daily News Archives 📌 Were Ships or Civilian Boats Hit? The primary targets were LTTE speedboats and small craft which were being used for logistic movement and potentially for attacks. These were destroyed as part of the demolition charges placed by the commandos. Daily News Archives ✔ No evidence exists in reliable military histories that large freight ships, civilian passenger vessels, or commercial port facilities were attacked in this operation. ✔ The operation was a military raid on LTTE assets, not a naval bombardment of port infrastructure. 📌 Casualties & Damage Indian MARCOS — according to mainstream military histories — did not suffer casualties during this specific operation because the team withdrew successfully after detonating their charges. Wikipedia There are no credible official records confirming that hundreds of Indian troops were killed in this particular strike — such figures (e.g., “600 killed”) appear only in unverified online sources and should not be treated as factual. The LTTE’s naval assets at the beach/jetty were destroyed (speedboats and small craft), and the jetty structures sustained explosive damage. 📌 Context: Operation Pawan This raid was part of a larger phase of fighting between IPKF and the LTTE: 📌 Operation Pawan (11–25 October 1987) was the Indian Peace Keeping Force’s campaign to seize and control the Jaffna Peninsula from LTTE control as part of the Indo-Sri Lanka Accord of 1987. Wikipedia Who was involved overall: Indian Army units (various infantry brigades, paratroopers) Indian Navy and Coast Guard blockading coastal supply routes Indian Air Force providing air support LTTE fighters (Sea Tigers, ground forces) Casualties in Operation Pawan (overall, not just Gurunagar): Indian losses: over 200 killed, hundreds wounded in fighting around Jaffna. Wikipedia LTTE losses: estimated thousands overall in the broader Jaffna campaign. Wikipedia This reflects intense urban and jungle warfare over several weeks — not solely the commandos’ beach raid. 📌 Was There a “Port” at Gurunagar? 📍 Gurunagar (Jaffna) was historically a fishing and small-boat landing zone, not a major commercial harbour. Footpaths and basic jetties existed for fishing and small craft — not large ships or cranes — especially during the war period when movement of large vessels was restricted. Daily News Archives ✔ So calling it a “thuramukam” (port) in the sense of a major harbour is inaccurate; it was a jetty/small coastal landing used locally and militarily by the LTTE Sea Tigers. 📌 Aftermath & Impact Short-term Impacts: LTTE speedboats and jetty facilities at Gurunagar were destroyed, disrupting some of the group’s coastal logistics. Daily News Archives The IPKF was able to restrict LTTE maritime movement, contributing to the larger campaign to push rebels out of Jaffna’s urban areas. Wikipedia Longer-term Consequences: Operation Pawan as a whole was strategically costly for India — heavy casualties, political controversy, and eventual Indian withdrawal in 1990. Wikipedia The war further deepened mistrust between the LTTE and IPKF, eventually leading to the assassination of Indian Prime Minister Rajiv Gandhi in 1991, claimed by the LTTE. Wikipedia Civilian consequences: The broader Jaffna operations were part of intense urban warfare affecting civilians in and around Jaffna — shelling, displacement, and casualties — but these were not limited to the Gurunagar raid itself and reflected the larger conflict. Wikipedia 📌 Summary Aspect What Really Happened Target on Oct 21, 1987 MARCOS raid on LTTE boats and jetty at Gurunagar, Jaffna. Daily News Archives Type of place Small jetty/landing area, not a large port. Daily News Archives Ships attacked? LTTE small speedboats and jetty facilities, not big naval or civilian ships. Daily News Archives Casualties (MARCOS) No reported commandos killed in that specific raid. Wikipedia Casualties in campaign IPKF losses in Jaffna operations numbered in the hundreds overall. Wikipedia Aftereffects Disruption of LTTE coastal logistics; part of wider conflict that shaped Sri Lanka’s civil war and India-Sri Lanka relations. Wikipedia
  22. கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான். அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான். ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள். ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள். ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.]. நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது, "உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்." அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்." "மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான். “நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]” அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால் ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ? அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன. "இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?
  23. @நிழலி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny யாருக்கேனும் சிறு துரும்பு தெரிந்தாலும் கூறுங்கள்.
  24. தகவலுக்கு மிக்க நன்றி. நான் தேடிப்பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி
  25. தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் தீபம் என்ற அமைப்பு ஒன்று யாழில் வரும் செய்திதாள்களில் உள்ள முக்கிய செய்திகளை வெட்டி பெரிய ஆவண காப்பு புதங்களில் ஒட்டும் வேலையை செய்து வந்தது. ஒவ்வொரு நாளின் செய்தியும் பெரிய பெரிய புத்தகங்களில் வெட்டி ஒட்டப்படும். இவை பின் தேதிவாரியாக பேணப்பட்டன. 1986-1990 வரை இயங்கியது தெரியும். அதன் பின் என்னவானதோ அறியேன். பூர்ணலிங்கம் என்பவர் இதை நடத்தினார். புலம் பெயர் முயற்சி என நினைக்கிறேன். இவை கிடைத்தால் உங்களுக்கு பொக்கிசம் போல இருக்கும். பிகு மன்னார் சம்பவம் பற்றி லேசாக நினைவு உள்ளது. அப்போ மக்கள் கொஞ்சம் அதிகமாகவே கம்பிகளுக்கு அப்பால் நிண்ட இந்திய படைகளை சீண்டினார்கள். சிப்பாய் ஒருவர் சினமேறி இதை செய்தார் என கேள்விபட்ட, வாசித்த நினைவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.