Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. லாபம் தரும் 'மல்சிங் ஷீட்!' தண்ணீர் குறைபாடு மற்றும் கழை செடிகளால் ஏற்படும் பூச்சி தாக்குதலை தடுக்க, 'மல்சிங் ஷீட்' விரித்து விவசாயம் செய்து, அதிக லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி, தமிழரசன்: நான், தஞ்சாவூர் மாவட்டம், தளவாப்பாளையத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் தண்ணீர் குறைவாக கிடைப்ப தால், விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற, மல்சிங் ஷீட் முறையை பயன்படுத்த ஆரம்பித்தேன். மக்கும் தன்மையுடைய, வைக்கோல் உட்பட பல பொருட் கள் மூலம் தயாரிக்கப்படும் விரிப்பை தான், 'மல்சிங் ஷீட்' என்கிறோம்.மல்சிங் ஷீட் முறை யில் நடவு செய்வதற்கு முன், ஏக்கருக்கு, 10 டன் மாடு மற்றும் ஆட்டு சாணத்தை அடித்து, வயலை நான்கு முறை நன்கு உழுது விட வேண…

    • 0 replies
    • 851 views
  2. சட்ட அனுமதி கிடைக்குமானால் இன்னும் இரு வருட காலத்தில் 3 பேரை பயன்படுத்தி குழந்தைகளை விருத்தி செய்யும் செயற்கிரமத்தை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என பிரித்தானிய இனவிருத்தி ஒழுங்கமைப்பொன்றைச் சேர்ந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இரு பெண்களிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளையும் ஆணொருவரின் விந்தணுவையும் பயன்படுத்தி குழந்தையொன்றை விருத்தி செய்வதே இந்த தொழில்நுட்பம். Three Parent In Vitro Fertilzation (IVF) from Ricochet Science on Vimeo. தாயிடமிருந்து அபாயகரமான பிள்ளைகளுக்கு கடத்தப்படும் இழைமணி தொடர்பான நோய் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படுவதை தடுக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இந்த செயன்முறை பாதுகாப்பதற்காக அமையக்கூடும் என்பதற்கான சான…

  3. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் மூலம் இயற்கை வளத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் முயற்சிக்க வேண்டும் என உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும். மண் வளத்தைப் பே…

    • 0 replies
    • 693 views
  4. மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவர் தெரிவு செய்துள்ள மொழிக்கு மாற்றம் செய்து அந்த மொழியில் கேட்க கூடியவாறு வசதியினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரியில் இருந்து நடைபெற்று வந்த போதிலும், தற்போது சோதனைத் தொகுப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%…

  5. ஆரொவில் அருகே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரும்புக் கால தாழி புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் இரும்பு காலத்தைச் சேர்ந்த அதாவது கி.மு. 300ஐச் சேர்ந்த , இறந்தவர்களின் உடல் எச்சங்களைப் புதைக்கும் தாழிகள், கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த இந்த அகழ்வாய்வில், ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. இதில் 4 தாழிகள் கிடைத்துள்ளன. இந்த தாழிகளுக்குள் சிறு சிறு கிண்ணங்கள் போன்ற வேறு பொருட்களும் இருந்தன. இவை தவிர, 4 வாட்கள், ஈட்டி, கோடாலி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த இரும்புக் கோடாலி மரக் கைப்பிடியில் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. மரம் மக்கிவிட, இரும்புக் கோடாலியும் கம்பியும் கிடைத்துள்ளன. இங்கிருந்…

    • 0 replies
    • 430 views
  6. 100 ரூபா நாணயத் தாளில் காந்தி தாத்தா சிரிக்கிறதா.. சிங்கக் கொடி பறக்கிறதா.. 50 பவுன் நோட்டில்.. கவுன்சிலரா.. சேர்சிலா இருக்கிறது என்ற சண்டை எனி வரப்போறதில்லை. என்ன ஆச்சரியமா பார்க்கிறேள். அதுதாங்க வேர்ச்சுவள் பணப் பரிமாற்றம் ஆரம்பமாகிட்டுது. நாணயத் தாளாகவோ.. குற்றியாகவோ எனி வரும் காலத்தில் காசைப் பார்க்க முடியாமல் போகலாம். உங்கள் சம்பளம்.. ஒரு மொபைல் அப்ஸில் அல்லது ஒரு எலெக்ரானிக் காட்டில்.. வெறும் இலக்கமாக அமுக்கப்பட்டிருக்கும். நீங்க அதனை ஸ்கான் பண்ண வேண்டிய இடத்தில்.. பண்ணிட்டு....செலவு பண்ணுற இடத்தில செலவு தொகையை கழிக்கப் பண்ணிக்கிட்டு நடையக் கட்ட வேண்டியான். காசு தொலைஞ்சிட்டு.. காசில சிங்கக் கொடி பறந்திட்டு.. காசு இல்லை.. பொக்கட் கனக்குது.. என்ற …

  7. ஒரு குழந்தையை அதனது முகம் 20 வயதில் எப்படி இருக்கும், 40 வயதில், 80 வயதில் எப்படியிருக்கும் என 30 விநாடிகளில் காட்டக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 80 வயதில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் எனக் கேட்டபடி ஏற்கனவே ஆயிரத்தெட்டு இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நம் போட்டோவை அப்லோடு செய்தால், அங்கங்கே தட்டி, உருட்டிப் புரட்டி, தலைமுடிக்கு வெள்ளை பெயின்ட் அடித்து, இப்படித்தான் இருப்பீர்கள் என அந்தத் தளங்கள் காட்டவும் செய்கின்றன. வெகு காலமாக கணினித் துறைக்கு இது சவாலாகவே இருந்து வந்தது. காரணம், சிலருக்கு 5 வயது போட்டோவை 25 வயதில் எடுத்துப் பார்த்தாலே சம்பந்தமே இல்லாத யாரோ போல் தோன்றும். வேறு சிலருக்கோ 5 வயதில் இருக்கும் முகம் 50 வயதிலும் அப்படியே இருக்கும். யாருடைய வளர…

  8. மென்பொருள்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப்ட் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில்எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தெரிவு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் பெப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்த போதிலும் தற்போது சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பேச மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசொப்ட் உருவாக்கியுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=685283072603458999#sthash.C4MRWVep.dpuf

  9. ஓவியரின் கைவண்ணத்தில் கெப்லர் 10 சி கிரகம் 'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர். பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்த…

  10. மெக்ஸிகோவில் கடலுக் சுமார் 13 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சிறுமி ஒருவரின் எலும்புக்கூடுகளை பிரித்து ஆராய்ச்சி செய்வதற்கு மெக்ஸிகோ ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு கிழக்கு மெக்ஸிகோவின் யுகடன் மாநிலத்திலுள்ள நீருக்கடியிலான ஒரு குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 'நையா' எனப் பெயரிடப்பட்ட சிறுமியின் எலும்புக்கூடுகளே ஆராய்ச்சிக்குட்படவுள்ளது. 15 அல்லது 16 வயதான இச்சிறுமி 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழி ஒன்றினுள் வீழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இச்சிறுமியின் எலும்பின் கூறுகளை பிரிந்து ஆய்வு செய்வதன் மூலம் சுதேச அமெரிக்கர்கள் தொடர்பில் அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நையாவின் விலா என்புகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப…

  11. அப்பலோ விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் செல்வதற்கு முன்னர் ஹவாய் தீவில் பயிற்சி பெற்ற சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இப்புகைப்படங்களில் 'மூன் பக்கி' எனும் விண்வெளி வாகனத்தில் ஹவாய் எரிமலைப் பிரதேசத்திலுள்ள மண் மற்றும் அப்பிரதேத்தில் பயிற்சியில் ஈடுபடுவது புகைப்படமாக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வு முறைமைக்கான பசுபிக் சர்வசே விண்வெளி நிலையத்தின் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் பிரதம பணிப்பாளர் ரொப் கெல்சோ என்பவர் ஜோன்ஸன் விண்வெளி நிலையத்திலிருந்தே இப்புகைப்படங்களைக் கண்டுபிடித்துள்ளார். 1970களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிகளில் அப்பலோ 13 திட்டத்தின் கீழ் 17 விண்வெளி வீரர்கள் பயிற்சி பெற…

  12. படம்: சி.வி. சுப்ரமண்யன் படம்: ராஜூ. வி படம்: விபின் சந்திரன் படம்: ஆர்.எம். ராஜரத்தினம் பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள்…

    • 0 replies
    • 987 views
  13. ‘என் கம்பெனியில் மொத்தம் பதினாறு மார்க்கெட்டிங் எக்ஸ்ஸிக்யூடிவ்ஸ் இருக்காங்க’ என்றார் மாட்டுத் தீவனம் விற்கும் ஒரு தொழிலதிபர். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தீவனம் விற்க பதினாறு மார்க்கெட்டிங் ஆட்களா? மாடுகளை விட ஆட்கள் அதிகம் எதற்கு என்று அவரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் மார்க்கெட்டிங் என்று குறிப்பிட்ட நபர்கள் செய்வது சேல்ஸ் வேலையை. அதை அவரிடம் கூறியபோது அவர் `மார்க்கெட்டிங், சேல்ஸ் எல்லா கழுதையும் ஒண்ணுதானே’ என்றார். நான் மார்க்கெட்டிங் கன்சல்டண்ட் என்பதால் என்னைக் குத்திக் காட்டுகிறாரோ என்று சந்தேகம் வந்தது. அதை அவரிடம் கேட்டு அவர் கன்ஃபர்ம் பண்ணித் தொலைத்தால் அசிங்கமாகப் போய்விடுமே என்று விட்டுவிட்டேன். ஆனால் அவர் பதிலில் இருந்த அறியாமையை நான் பல தொழிலதிபர்…

    • 0 replies
    • 596 views
  14. இடம்: ரஷியாவின் கான்ட்டி மான்ஸி நகரம். நாள்: மார்ச் 29, 2014. கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் ஸெர்கே கராஜகினுடன் மோதல். ஆனந்திடம் கறுப்புப் படை. கராஜகினிடம் வெள்ளைப் படை. அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய 15 காய்களை லாவகமாக நகர்த்தவேண்டும், தன் அரசனைப் பாதுகாக்கவேண்டும், எதிரி அரசனைப் பிடிக்கவேண்டும். ஒவ்வொரு காயை நகர்த்தும்போதும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்று கணக்குப்போடவேண்டும். அதே சமயம், எதிர் ஆட்டக்காரர் தன் காயை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்று யூகிக்கவேண்டும். இதுதான், செஸ் விளையாட்டில் ஜெயிக்கும் வழி. டீல் போடுவதும் செஸ் ஆட்டம்தான். “காய்”களுக்குப் பதிலாகக் க…

    • 0 replies
    • 613 views
  15. அண்மையில் கொழும்பில் உள்ள ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது சொன்னார். " இந்தியாவில் இருந்து கொண்டெய்னர் , கொண்டெய்னராக ஊதுபத்தியும், அப்பளமும் இறக்குமதி செய்கிறார்கள். இவற்றை நாம் தாயகத்தில் ஊக்குவித்தால் நல்ல லாபம் பெறலாமெனவும் , போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பையும் வழங்கலாமெனவும் சொன்னார். எனக்கும் இது ஒரு நல்ல சிந்தனயாகப் படுகிறது. மூலப்பொருட்க‌ள் பிரச்சனையும் வராது என நினைக்கின்றேன். கள உறவுகளே யாராவது வசதியிருந்தால் முயற்சித்துப் பாருங்கள். முடியுமானவர்கள் இச்செய்தியை வடமாகணசபையிடம் எடுத்து செல்லுங்கள். கீழே இவை தொடர்பாக தமிழ் நாட்டு பத்திரிகைகளில் வாசித்த இரண்டு செய்திகளை இணைத்துள்ளேன். ஊ…

    • 0 replies
    • 10.5k views
  16. (கோப்புப் படம்) ‘எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது. இந்தோனேசிய அரசு நெல் பயிர் சாகுபடியைத் தேதிவாரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அட்டவணையே வகுத்துக்கொடுத்துவிட்டது. மலேசியாவும் பிலிப்பைன்ஸும் மழை நீரைச் சேமிக்கவும், வீணாக்காமல் ப…

    • 0 replies
    • 643 views
  17. (கோப்புப் படம்) சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறைகொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும்தான் பருவநிலை மாறுதல்கள் குறித்து சமீபகாலத்தில் கூறப்பட்ட பலவற்றில், வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் ஜே இன்ஸ்லீ சொன்னதைவிட தெளிவானதும் வலிவானதும் வேறு எதுவும் இல்லை; “பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம்.” பருவநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களை எப்படிச் சரி செய்வது, எந்த அளவுக்கு நாம் இதில் செயல்பட முடியும், எல்லோருமே அவரவர் வயிற்றுப்பாட்டுக்காகக் காலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது, இரவில் வீடு வந்துசேர்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது என்று செ…

    • 0 replies
    • 558 views
  18. களப்பணியில் காளிமுத்து. வெளிநாட்டு வேலை, ஐ.டி. மோகம் என இந்தக் காலத்து இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், தனது கிராமத்துக்கான தேவையை 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் காளிமுத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள தங்களாச்சேரி கிராமம் தான் காளிமுத்துவின் சொந்த ஊர். ஏழு வருடங்களுக்கு முன்பு எம்.ஃபில் முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்த இவர், மற்றவர்களைப்போல் வேலை தேடி நகரத்துக்கு ஓடவில்லை. மாறாக, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளை முன்னெ டுத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் இயற்கை விவசாயம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சாதித்ததை நமக்கு விளக்குகிறார் காளிமுத்து. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் தொழில் நகரங்…

    • 0 replies
    • 636 views
  19. கேமராவில் எடுத்த புகைபடங்களை மொத்தமாக ரீசைஸ் செய்ய Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.ஏற்கனவே சிறிய அளவாக மாற்றும்(Resize)Riot என்ற மென்பொருள் பற்றி பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த மென்பொருளில் ஒவ்வொரு படமாக தான் மாற்ற இயலும்.இந்த மென்பொருளில் மொத்தமாக பல படங்களை நிமிடங்களில் சிறிய அளவாக மாற்றலாம். உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பத…

    • 0 replies
    • 547 views
  20. சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர். தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்.. தண்ணீர் தரத்தில் 120-வது இடம் …

    • 0 replies
    • 409 views
  21. தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி சுந்தர் வேதாந்தம் தொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொ…

  22. இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…

  23. புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.

  24. இலங்கையின் புகையிலை விவசாயிகளுக்கான நிலையான விவசாய செயற்திட்டமொன்றை 2013 ஆம் ஆண்டில் சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக, விவசாயிகள் மத்தியில் சிறந்த விளைச்சல் நிர்வாக நுட்பங்கள், தேசிய உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் தமது சொந்த போஷாக்கு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மரக்கறி செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனியின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் அங்கமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. SADP Ultra திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தமது மேலதிக விளைச்சல்களை விற்பனை செய்து, த…

    • 0 replies
    • 2.3k views
  25. அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை…

    • 0 replies
    • 476 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.